Wednesday, November 23, 2011

இந்தியாவில் டி.ஆர்.எம்


பண்பலையில் டி.ஆர்.எம் குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் புது தில்லியில் சோதனை செய்துப் பார்க்கப்பட்டது. அகில இந்திய வானொலியோடு டி.ஆர்.எம் அமைப்பு இணைந்து இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தது. பண்பலையில் செய்யப்படும் டி.ஆர்.எம் ஒலிபரப்பிற்கு ‘டி.ஆர்.எம் ப்ளஸ்’ என்று பெயர். ஏற்கனவே மத்திய அலையில் டி.ஆர்.எம் ஆய்வு நடந்து வருகிறது, இதற்கு ‘டி.ஆர்.எம் 30’ என்று பெயர். புது தில்−யில் டி.ஆர்.எம் ப்ளஸ் ஆய்விற்காக 100.1 அலைவரிசையில் 500 வாட் சக்தியில் ஒ−பரப்பு செய்யப்பட்டது. டி.ஆர்.எம் பற்றிய அந்த ஆய்வின் முடிவுகளை தெரிந்துகொள்ள சொடுக்கவும் www.drm.org. நீங்களும் இது போன்ற இனிவரும் டி.ஆர்.எம் ஆய்வினில் கலந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ளவும் projectoffice@drm.org.

No comments: