Thursday, May 10, 2012

சந்தா பற்றிய ஒரு அறிவிப்பு:

இந்த மாதம் முதல் இனி நமது இதழின் ஆண்டு சந்தா ரூ.50 மட்டுமே. வருடத்திற்கு நான்கு இதழ் என, இனி காலாண்டு இதழாக உங்கள் இல்லம் நாடி வரவுள்ளது. ஏற்கனவே சந்தா கட்டியவர்களுக்கு இதழின் சந்தா நிறைவடையும் போது தெரிவிக்கப்படும். எனவே தகவல் தெரிவிக்கும் பொழுது சந்தாவை புதுப்பித்தால் போதுமானது. அதே போன்று இனி இதழின் எண்ணிக்கையைக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். அதாவது வருடத்திற்கு நான்கு இதழ்கள் என்றால், இதழ் எண்: 138-ல் இருந்து இதழ் எண்: 141 வரை அனுப்பப்படும். ஆக வருடத்திற்கு அல்லது இதழ் வெளியாகும் போது நான்கு இதழ் சேர்ந்தால் மட்டுமே ஒரு ஆண்டு நிறைவுபெறும். ஆதலால் கவலை வேண்டாம் மாதத்தினை ஞாபகம் வைத்து சந்தா கட்டியவர்கள், இனி அறிவிப்பு வரும் போது மட்டும் சந்தா கட்டினால் போதுமானது. குழப்பம் இருப்பின் கடிதம் எழுதவும், விளக்கப்படும். –ஆர். 

No comments: