Thursday, December 20, 2012

ஒரு முக்கியமான இடத்திற்கு


அதன் பின் மாலையில் நாங்கள் மற்றும் ஒரு முக்கியமான இடத்திற்கு சென்றோம். கலைநயம் மிக்க அந்த இடம் சீனாவின் கலைக்காக மிகவும் புகழ்பெற்றது. முக்கியமாக உலகின் முக்கிய ஓவியர்களின் பாதம் பட்ட இடம் என்று கூறலாம். ஆம் லியோ லீ சாங் எனும் அந்தப் பகுதி ஒரு பழமையான சீனாவின் கிராமப் பகுதியை நம் கண் முன்னே கொண்டுவந்து நிறுத்துகிறது.


அந்தப்பகுதியில் ஓவியம் வரையத் தேவையான தூரிகைகள் மற்றும் அதற்குத் தேவையான வண்ண மைகள் எந்தப்புரம் திரும்பினாலும் விறகப்படுகின்றன. காலத்தால் அழிக்க முடியாத கலைபொக்கிசங்கள் நிறைந்த பகுதியில் எனது கால் தடம் பட்டதில் எனக்கும் மகிழ்ச்சியே. நாளை சீனாவின் முக்கியமான மற்றும் ஒரு நினைவுச் சின்னத்திற்கு செல்ல உள்ளேன். அந்த அனுபவத்தினையும் படிக்க ஆர்வமுடன் இருப்பீர்கள் என நம்புகின்றேன். சந்திப்போம் நாளை.

No comments: