Sunday, December 23, 2012

பல நூறு ஆண்டுகளின் பழமை


சீனப் பெருஞ்சுவர் பற்றி ஏராளம் சொல்ல வேண்டும். வாரலாற்றுத் தகவல்கள் உங்களுக்கு இணையத்தில் கிடைக்கும். ஆனால் அனுபவப் குறிப்புகள் கிடைப்பது மிகவும் அறிது. எனது அனுபவத்தினில் மனிதாராக பிறந்த ஒவ்வொருவரும் கட்டயாம் தனது வாழ்நாளில் பார்த்தே தீரவேண்டிய ஒரு சில இடங்களை நினைத்து வைத்திருப்போம். அதில் நிச்சயம் இந்த இடத்தினையும் நாம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.


பெருஞ்சுவரில் ஏறுவதற்கான அந்தப் படிகள் பல நூறு ஆண்டுகளின் பழமையான தன்னோடு சேர்த்து பதிய வைத்து இருந்தது. காரணம் அதன் சுவடுகள் மற்றும் பல லட்சம் மக்களின் கால் தடம் பட்டு அவை தேய்ந்து போய் காணப்பட்டது.

மேலே ஏற ஏற காற்றின் வேகம் கூடிக்கொண்டே சென்றது. இதனால் காற்று முகத்திற்கு நேராக பட்டு நமது தோளினை உளர்த்தியது. அந்த சமயத்தில் படிக்கட்டின் மேலே பார்த்தபோது ஒரு அதிசயம் காத்து இருந்தது. அது என்ன! அறிய காத்திருங்கள். சந்திப்போம் நாளை. - தங்க.ஜெய்சக்திவேல் (எழுதி முடித நேரம் நள்ளிரவு 12.45)

No comments: