Monday, May 27, 2013

தமிழ் வளர்க்கும் சீனர்கள்


பெய்ஜிங்கில் சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு 1963-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. கடந்த 49 ஆண்டுகளாக சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்பு சிறப்புடன் நடைபெற்று வருகிறது. இந்தச் சீன வானொலி தமிழ் ஒலிபரப்பில் தற்போது மொத்தம் 18 சீனர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்கள் தமிழகம் வந்து தமிழ்மொழியைக் கற்றுத் தேர்ந்துள்ளனர். இவர்கள் அனைவரும் அழகாக தமிழ் பேசுகிறார்கள். இவர்கள் சிறப்பாகத் தமிழ் பேசுவதுடன் தங்கள் பெயர்களையும் தூய தமிழ்ப் பெயர்களாக சூட்டிக் கொண்டுள்ளனர்.
 படத்தில் இருப்பவர்களின் பெயர்கள் வரிசையாக தொகுக்கப்பட்டுள்ளது:
 இலக்கியா, ஈஸ்வரி, ஜெயா, கலைமகள், கலைமணி, மதியழகன், மீனா, மேகலா, மோகன், நிலானி, நிறைமதி, ஓவியா, பூங்கோதை, சரஸ்வதி, சிவகாமி, தேன்மொழி, வாணி, வான்மதி
நன்றி: தினமணி கொண்டாட்டம் 26/5/2013

No comments: