Tuesday, February 04, 2014

நெல்லை பல்கலையில் கரிசல் திருவிழா துவக்கம்

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொடர்பியல் துறை சார்பில் கரிசல் திரைவிழா நேற்று துவங்கியது. நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தொடர்பியல் துறை சார்பில் ஆண்டுதோறும் தொடர்பியல் மற்றும் காட்சி ஊடகவியல் மாணவர்கள் பங்கேற்கும் கலைத்திறன் போட்டிக்கான விழா கரிசல் திரைவிழா என்ற பெயரில் நடத்தப்படுகிறது. இதில் தமிழகம் மற்றும், புதுச்சேரி, பெங்களூரு ஆகிய
பகுதிகளில் இருந்து 30 கல்லூரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள்
பங்கேற்கின்றனர். நேற்று காலையில் நடந்த விழாவில் பல்கலை துணைவேந்தர் குமரகுரு விழாவை துவக்கிவைத்தார். மனோ மீடியா கிளப் நிர்வாகிகள் வரவேற்றனர். துறைத்தலைவர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார். விழாவில் சிறந்த வானொலி அறிப்பாளர், குறும்படம், டாக்குமெண்டரி பிலிம், மீடியா வினாடி வினா, நாட்டுப்புற நடனங்கள், புகைப்படம் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது. ஒட்டுமொத்த போட்டிகளில் முதலிடம் பெறும் கல்லூரிக்கு கேடயம் வழங்கப்படுகிறது. துவக்க விழாவில் பல்கலைக்கழக டீன் மரிய ஜான், தமிழ்த்துறை பேராசிரியர் ராமசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் மாணவர் கவிஞர் மனுஷ்யபுத்திரன் பங்கேற்றார். நாளை 5ம் தேதி நிறைவு விழா நடக்கிறது.
நன்றி: தினமலர்

No comments: