Wednesday, October 01, 2014

லண்டன் BBC தமிழோசையைக் காக்க, கை தாருங்கள்..!

BBC_Tamilosai                                                                                                                                                                                                             கடந்த 74 ஆண்டு காலமாக லண்டனில் இருந்து இயங்கி வரும் தமிழோசையை இந்தியத் தலை நகர் டெல்லிக்கு நாடு கடத்த BBC நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

வாரம் இரண்டு நாள் 15 நிமிட ஒலிபரப்பு என இருந்து வந்த தமிழோசை தினமும் 30 நிமிடம் என வளர்ந்தது இலங்கையில் நடந்த போருடன் சேர்ந்து.

ஆனால் தற்போது சைக்கிள் டைனமோ சக்தியில் செய்தி கேட்ட மக்களை விட்டு தமிழோசையை 'India Policy' எனும் திட்டத்தின் கீழ் இந்திய சாகரத்துக்குள் சேர்த்து விட BBC நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.

ஈழத்தமிழரைப் பொறுத்தவரை உள்ள ஒரே ஒரு பக்க சார்பற்ற சர்வதேச தமிழ் செய்தி நிறுவனம் தமிழோசை தான். இது இலங்கை அரசியலில் பல்வேறு பட்ட தரப்பினரின் ஆதரவையும், அதே சமயம் விமர்சனத்தையும் தமிழோசை பெறுவதன் மூலம் தெளிவாகிறது.

இலங்கையில் தமிழர்களுக்கு மட்டுமன்றி முஸ்லிம் சிறுபான்மையின மக்களுக்கும் BBC தமிழோசை இன்னமும் அவசியமானதாக உள்ளது.

இந்த நிலையில் தமிழோசையை லண்டனில் இருந்து டெல்லிக்குக் கொண்டு செல்வது தமிழ் பேசும் இலங்கை சிறுபான்மை சமூகங்களுக்கு பெரும் இழப்பு.
BBC சிங்கள சேவை லண்டனில் இருக்க, தமிழோசையை மட்டும் டெல்லிக்கு அனுப்புவது அந்த சேவை அதிகம் தேவைப்படும் மக்களுக்கு பெரும் இழப்பாக இறுதியில் அமையும்.

India Policy எனும் பெரிய இந்திய சமுத்திரத்துக்குள் தமிழோசை விழுந்து அமிழ்ந்து விடாமல் இருக்க….

***தயவுசெய்து BBC நிர்வாகத்துக்கும், UK நாடாளுமன்றத்துக்கும் அனுப்புவதற்கான இந்த petitionஇல் உங்கள் பெயரையும் பதிவு செய்யுங்கள். அத்துடன் இந்த petitionஐ உங்கள் Facebook இலும் share பண்ணுங்கள்.. http://www.petitions24.com/signatures/save_the_london_bbc_tamil_broadcast/start/0

Source: http://www.athirady.com/

No comments: