Wednesday, November 05, 2014

மேலும் 100 வானொலி நிலையங்களில் பண்பலை ஒலிபரப்பு


செல்போன் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், அவர்களைக் குறிவைத்து மீடியம் (நடுத்தர) அலைவரிசையில் ஒலிபரப்பாகி வரும் மேலும் 100 அகில இந்திய வானொலி நிலையங்களின் நிகழ்ச்சிகளை விரைவில் பண்பலை வரிசையிலும் (எஃப்.எம்) ஒலிபரப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது.
தில்லியில் நடைபெற்ற அகில இந்திய வானொலியின் தமிழ், அஸ்ஸாமி, குஜராத்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் இலவச எஸ்எம்எஸ் (குறுஞ் செய்தி) செய்தி அனுப்பும் சேவையினை பிரகாஷ் ஜாவடேகர் தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:
பண்பலை வரிசையில் ஒலிபரப்பாகும் வானொலி நிலையங்கள் செல்போன் பயன்படுத்துவோரை மிக எளிதாகச் சென்றடைகின்றன. அந்த நிகழ்ச்சிகளை மிகத் தெளிவாகவும் கேட்க முடிகிறது. இதைக் கருத்தில்கொண்டு விரைவில் மீடியம் (நடுத்தர) அலைவரிசையில் ஒலிபரப்பாகும் மேலும் 100 அகில இந்திய வானொலி நிலைய நிகழ்ச்சிகளை, பண்பலை வரிசையிலும் ஒலிபரப்ப முடிவு செய்துள்ளோம் என்று ஜாவடேகர் தெரிவித்தார்.

Source: Dinamani புது தில்லி
First Published : 30 October 2014 02:20 AM IST

No comments: