Thursday, May 29, 2014

வத்திகான் வானொலி நிகழ்ச்சிகள்

இறையுணர்வு, அனைத்துலக அமைதி, மனித மாண்பு, சமய உரிமை - இவைகளுக்கு அழைப்பு விடுக்கும் திருத்தந்தையின் பொன் மொழிகள்.
விவிலியக் கருத்து வளங்களை உணர்த்தும் விவிலியத் தேடல்கள், ஞாயிறு திருப்பலிக்கு நேயர்களைத் தயாரிக்கும் நோக்கிலான ஞாயிறு வாசகங்களை மையமாகக் கொண்ட ஞாயிறு சிந்தனைகள், சமூக அவலங்களைச் சாடி, சமுதாய விழிப்புணர்வுக்குப் பாதை காட்டும் குறு நாடகங்கள், உலக நிகழ்வுகளை உரசிப் பார்க்கும் வாரம் ஓர் அலசல், பல ஆன்றோர், பெரியோரின் வாழ்க்கை அனுபவப் பரிமாற்றங்கள், சாதனைகளை அறியத் தரும் நேர்காணல்கள், திருத்தந்தையின் சுற்றுமடல்கள், செய்திகள் பற்றிய வல்லுனர்களின் அலசல்கள், வானொலி அலையால் பிணைக்கப்பட்டிருக்கும் அன்புள்ளங்களின் கருத்துப் பரிமாற்றங்களை அறியாமல் நிகழ்ச்சி சிறப்புற அமையாது என்பதை உணர்த்தும் அஞ்சல் பெட்டி என நாளுக்கு நாள் பல்சுவையூட்டும் நம் நிகழ்ச்சிகள் ஒவ்வொரு நாளும் மூன்று முறை ஒலிபரப்பாகின்றன.
வானொலி தவிர இணைய வலைத் தொடர்பு (internet) அமைப்பிலும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும்.
அன்றாடக் காலை நிகழ்ச்சிகள்:
வாரத்தின் ஒவ்வொரு நாளும் காலை நாங்கள் ஒலிபரப்பும் நிகழ்ச்சிகள் இவை:
ஞாயிறு: ஞாயிறு சிந்தனை
திங்கள்: பல்சுவை, அஞ்சல் பெட்டி
செவ்வாய்: வாரம் ஓர் அலசல்
புதன்: விவிலியத் தேடல்
வியாழன்: புதன் பொது மறை போதகம், திருச்சபையில் திருப்புமுனைகள்
வெள்ளி: நேர் காணல்
சனி: நாடகம்
இவையன்றி, வாரத்தின் ஒவ்வொரு நாளும் (ஞாயிறு மாலையும் திங்கள் காலையும் தவிர) செய்திகள்இடம் பெறுகின்றன. அன்புள்ளங்களே, இந்நிகழ்ச்சிகள் கால ஓட்டத்தில் மாறும். புதிய நிகழ்ச்சிகள் புதிய பரிணாமத்துடன் அவ்வப்போது ஒலிக்கும். இதில் உங்கள் ஆலோசனைகளுக்கு என்றுமே இடமுண்டு.
நம் தொடர்பகங்கள் :
வானொலி நேயர்கள் எளிதாகக் கருத்துக் கடிதங்களை அனுப்புவதற்கும், தபால் செலவைக் குறைப்பதற்கும், தபால்களைத் துரிதமாய்ப் பெறுவதற்கும் வசதியாக, சென்னை, கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களில் தற்சமயம் கிளை அலுவலகங்கள் உள்ளன.
வானொலி தவிர இணைய வலைத் தொடர்பு (Internet) அமைப்பிலும் நிகழ்ச்சிகளைக் கேட்க முடியும்.
மேலும் விபரங்களுக்கு :
வத்திக்கான் வானொலி, இந்திய அலுவலகம், இலொயோலாக் கல்லூரி, தபால் பெட்டி எண் 3301, சென்னை 600 034.
அல்லது
இலங்கை முகவரிகள்
அருட்திரு டி.ஜே.கிருபாகரன், ஆயர் இல்லம், தபால் பெட்டி எண் 02, யாழ்ப்பாணம், இலங்கை
அல்லது
அருட்திரு. தமிழ் நேசன், சமூகத் தொடர்பு மையம், தூய வளன் தெரு, பெட்டா, மன்னார்.
தலைமையக முகவரி
Vatican Radio, Tamil Programs, Indian Section, 00120 Vatican City.
என்பவைகளோடு தொடர்பு கொள்ளுங்கள்.
மின் அஞ்சல் : tamil@vatiradio.va
மேலும் விபரங்களுக்கு வத்திக்கான் வானொலி அல்லது வத்திக்கான் இணையதளங்களைத் திறக்கலாம்.
வத்திக்கான் வானொலி இணையதளம்: www.radiovaticana.va
வத்திக்கான் இணையதளம்: www.vatican.va
விபரங்களும் மாத இதழும் www.anbinmadal.org என்ற இணையத்தளத்திலும் தரப்பட்டுள்ளன.
நேயர் சந்திப்புகள்
1931ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த வானொலி, 1965ம் ஆண்டு தமிழ் ஒலிபரப்பைத் துவக்கியது. தமிழ் ஒலிபரப்பில் 50 ஆண்டுகளை(2015) நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இந்த வானொலி. ஒவ்வோர் ஆண்டும் இயலவில்லையெனினும், முடிந்த வரையில் அவ்வப்போது நேயர்களைச் சந்தித்து கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டு வருகிறோம். சேலம், திருச்சி, சென்னை, வேலூர், ஈரோடு, நாகர்கோவில், வேளாங்கண்ணி, பாளையங்கோட்டை ஆகிய இடங்களிலும் இலங்கையில் மன்னார், கட்டன் ஆகிய இடங்களிலும் நேயர் கூட்டங்களை நடத்தியுள்ளோம். வத்திக்கான் வானொலியின் தமிழ்ச் சேவை செப்டம்பர் 4, 2005 அன்று திருச்சி பல்நோக்கு சமூகப் பணி மைய அரங்கில்; தனது 40 ஆம் ஆண்டு விழாவைச் சிறப்பித்தது. திருச்சி ஆயர் மேதகு ஆன்டனி டிவோட்டா, திண்டுக்கல் ஆயர் மேதகு அந்தோணி பாப்புசாமி, மதுரை ஆதீனம் ஸ்ரீ ஞான சம்பந்த தேசிக பரமாச்சாரியார், திருச்சி நகர மேயர் திருமதி சாருபாலா தொண்டைமான், திருச்சி தூய அன்னாள் சபை அதிபர் அருட் சகோதரி எட்விச் டோலரோசா, திருச்சி ஜமால் முகமது கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் பீ.மு.மன்சூர், சென்னை எத்திராஜ் மகளிர் கல்லூரி பேராசிரியை முனைவர் சித்ரா, திரைப்பட இயக்குனர் திரு.இரா. காளீஸ்வரன், திரைப்பட இயக்குனர் திரு.பீ. லெனின், திரைப்பட பாடல் ஆசிரியர் கவிஞர் அறிவுமதி ஆகியோர் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்புரைகளும் உரைகளும் ஆற்றினர். இவ்விழாவில் தமிழ் நேயர்களின் பங்கு குறிப்பிடும்படியானது. இதில் அவர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு தமிழ் ஒலிபரப்பு பற்றிய தங்களின் கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகளை முன்வைத்தனர். வத்திக்கான் வானொலி தமிழ்ப்பிரிவின் 45ம் ஆண்டு கொண்டாட்டம் 2010ம் ஆண்டு மே மாதம் 2ம் தேதி திருச்சி புனித வளன் கல்லூரியில் திருச்சி ஆயர் மேதகு ஆன்டனி டிவோட்டா தலைமையில் நேயர்களின் பெருமெண்ணிக்கையிலான பங்கேற்புடன் சிறப்பிக்கப்பட்டது. காலை முதல் மாலை வரை இடம்பெற்ற இந்த கொண்டாட்ட நிகழ்வுகளில் நேயர்களின் கருத்தறிதலே முக்கிய இடம் வகித்தது. 
நன்றி:  வத்திகான் வானொலி

வத்திகான் வானொலி தமிழ் ஒலிபரப்பின் 50ஆம் துவக்க விழா மற்றும் நேயர் சந்திப்பு 

நாள்: 1 ஜூன் 2014
நேரம்: காலை 9 முதல் மாலை 4 வரை
இடம்: புனித ஜோசப் கல்லூரி, திருச்சி

பங்கு கொள்ள விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய முகவரி: 
அலை பேசி: 9488 600 600
தொலை பேசி: 044 28178410
மின்னஞ்சல்: vradio@gmail.com

Thursday, May 22, 2014

இத்தாலிய வானொலி மற்றும் தொலைக்காட்சி

வ‌த்திக்கான் வானொலி EBU (European Broadcasting Union) என்ற அமைப்பை உருவாக்கி, அதன் ஓர் அங்கமாய் விளங்குகிறது. மேலும், UAR (Union Africaine de Radiodiffusion) என்பதன் ஓர் அங்கமாகவும், உலக கத்தோலிக்க சமூகத்தொடர்பு அமைப்பான SIGNIS, கிறிஸ்தவ வானொலிகளின் ஐரோப்பிய அவையான‌ CERC, இத்தாலிய வானொலி மற்றும் தொலைக்காட்சி கூட்டமைப்புகளின் அங்கமாகவும் உள்ளது.
ஒலிபரப்புத்துறையைப் பொறுத்தவரையில் அனைத்துலக தொலை தொடர்பு ஒன்றியம் ITU (International Telecommunication Union), ஐரோப்பிய தபால் மற்றும் தொலைத்தொடர்பு நிர்வாகங்கள் அவை CEPT (European Conference of Postal and Telecommunications Administrations), சர்வதேசத் தொலைத்தொடர்பு செயற்கைக்கோள் நிறுவனம் ITSO (International Telecommunications Satellite Organization) ஆகியவைகளில் வத்திக்கான் நாட்டின் பிரதிநிதியாக வத்திக்கான் வானொலி உள்ளது.
நன்றி: http://ta.radiovaticana.va

வத்திகான் வானொலி தமிழ் ஒலிபரப்பின் 50ஆம் துவக்க விழா மற்றும் நேயர் சந்திப்பு 

நாள்: 1 ஜூன் 2014
நேரம்: காலை 9 முதல் மாலை 4 வரை
இடம்: புனித ஜோசப் கல்லூரி, திருச்சி

பங்கு கொள்ள விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய முகவரி: 
அலை பேசி: 9488 600 600

Thursday, May 15, 2014

வத்திக்கான் வானொலி - ஓர் அறிமுகம்:1


வத்திக்கான் வானொலி திருப்பீடத்தின் ஒலிபரப்பு நிலையம். இது வத்திக்கான் நகர நாட்டுக்குள் முறைப்படி அமைந்திருக்கின்றது. சர்வதேச சமுதாயத்தால் சட்டரீதியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திருத்தந்தையின் திருப்பணிக்குச் சேவை செய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. வானொலியை வடிவமைத்த குல்யெல்மோ மார்க்கோனி என்பவரால் அமைக்கப்பட்டு, திருத்தந்தை பதினோராம் பத்திநாதரால் 1931ம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வானொலி இயேசு சபையினரால் நடத்தப்படுகின்றது.
கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுதந்திரமாகவும், பிரமாணிக்கத்துடனும் திறமையுடனும் அறிவிப்பதே வத்திக்கான் வானொலியின் முக்கியப் பணியாகும்.
- திருத்தந்தையின் உரைகளையும், எண்ணங்களையும் பரப்புதல்,
- திருப்பீடத்தின் நடவடிக்கைகளை அறிவித்தல்,
- உலகில் கத்தோலிக்கத் திருச்சபையின் வாழ்வு மற்றும் நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை வழங்குதல்,
- விசுவாசிகள், திருச்சபை படிப்பினைகளின் ஒளியில், இக்காலத்தின் பிரச்சனைகளைச் சீர்தூக்கிப் பார்ப்பதற்கு உதவுதல் போன்ற பணிகள் மூலம், கத்தோலிக்க மையத்திற்கும் பல்வேறு நாடுகளுக்கும் இடையேயான தொடர்பை வளப்படுத்துகிறது இவ்வானொலி.

வத்திக்கான் வானொலி, உலகின் மறைமாவட்டங்கள் அல்லது ஆயர்கள் பேரவைகளுக்கு வானொலி ஒலிபரப்புத் துறையில் ஆலோசனைகளையும் ஒத்துழைப்பையும் வழங்குகிறது.

திருத்தந்தையின் அனைத்து அதிகாரப்பூர்வ வத்திக்கான் செயல்பாடுகளை ஒலிப்பதிவு செய்தல், அவற்றை ஒலிபரப்புதல், அந்த ஒலிப்பதிவுகளை விநியோகித்தல் ஆகிய நிர்வாக ரீதியானப் பணிகளை ஆற்றி வருகிறது. அத்துடன், உரோமைய கத்தோலிக்கத் திருத்தந்தையரின் குரல்களுக்கான ஒலிப்பதிவு உரிமங்களையும் அறிவுச் சொத்துக்களையும் தனிப்பட்ட விதத்தில் கொண்டு அவற்றைப் பாதுகாத்து செயல்படுத்தும் பொறுப்பையும் கொண்டுள்ளது.

வத்திக்கான் வானொலி, திருச்சபை மற்றும் மதம் சார்ந்த செய்திகளை வழங்குகின்றது. இத்தகையச் செய்திகளை பிற தொடர்பு ஊடகங்களில் கேட்க முடியாது. முதலில் இவ்வானொலி, திருத்தந்தையும் திருப்பீடமும் நடத்தும் நிகழ்ச்சிகளையும், அவர்களின் செயல்பாடுகளையும் அறிவிக்கின்றது. சமயச் சூழலில் அரசியல், சமூக, பொருளாதார விவகாரங்களைத் தருவதோடு, மக்கள் அவற்றில், காலத்தின் அறிகுறிகளைப் பார்த்து, விசுவாச ஒளியில் அவர்கள் செயல்படுவதற்கு ஊக்குவிக்கிறது.

சமயச் சுதந்திரம் கட்டுப்படுத்தப்பட்ட அல்லது அதிக மக்கள் தொடர்பு வசதிகள் இல்லாத இடங்களில் வாழ்கின்றவர்கள் தங்களின் ஆன்மீக தாகத்தைத் தணித்துக் கொள்ளவும், வழிபாடுகளில் கலந்து கொள்ளவும் திருவழிபாட்டு நிகழ்ச்சிகள் வழியாக உதவுகின்றது வத்திக்கான் வானொலி. இன்னும் சொல்லப்போனால், புனித பேதுருவின் வழித்தோன்றலான திருத்தந்தையுடன் திருச்சபையின் ஒன்றிப்பை ஆழப்படுத்துவதற்கென திருத்தந்தை தலைமையேற்று நடத்தும் நிகழ்ச்சிகளை ஒலிபரப்புகின்றது.

வத்திக்கான் வானொலியின் பெரும்பாலான நிகழ்ச்சிகள் கிறிஸ்தவ வாழ்வின் பல்வேறு கூறுகளுக்கென ஒதுக்கப்பட்டிருந்தாலும், மனித சமுதாயம் மத நல்லிணக்கத்துடனும் ஒத்துழைப்புடனும் வாழ உதவியாக கிறிஸ்தவ ஒன்றிப்பு மற்றும் பல்சமய உரையாடலிலும் தனிப்பட்ட கவனம் செலுத்தப்படுகின்றது. மேலும், இந்நிகழ்ச்சிகளில் திருச்சபையின் நீண்டகாலப் பாரம்பரியத்திற்கு ஒத்திணங்கும் வகையில், கலாச்சாரம், கலை, சிறப்பாக இசை போன்றவைகளுக்கும் போதுமான கவனம் செலுத்தப்படுகின்றது.

இயேசு சபையைச் சார்ந்த அருள்தந்தை பெதரிக்கோ லொம்பார்தி சே.ச., 2005ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதியிலிருந்து வத்திக்கான் வானொலி இயக்குனராக இருக்கிறார்.
நன்றி: http://ta.radiovaticana.va

வத்திகான் வானொலி தமிழ் ஒலிபரப்பின் 50ஆம் துவக்க விழா மற்றும் நேயர் சந்திப்பு 

நாள்: 1 ஜூன் 2014
நேரம்: காலை 9 முதல் மாலை 4 வரை
இடம்: புனித ஜோசப் கல்லூரி, திருச்சி

பங்கு கொள்ள விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய முகவரி: 
அலை பேசி: 9488 600 600

Thursday, May 08, 2014

வத்திகான் வானொலி தமிழ் ஒலிபரப்பின் நேயர் சந்திப்பு





வத்திகான் வானொலி தமிழ் ஒலிபரப்பின் 50ஆம் துவக்க விழா மற்றும் நேயர் சந்திப்பு 

நாள்: 1 ஜூன் 2014
நேரம்: காலை 9 முதல் மாலை 4 வரை
இடம்: புனித ஜோசப் கல்லூரி, திருச்சி

பங்கு கொள்ள விரும்புவோர் பதிவு செய்ய வேண்டிய முகவரி: 
வத்திகான் வானொலி
லயோலா கல்லூரி
சென்னை - 600 034
அலை பேசி: 9488 600 600
தொலை பேசி: 044 28178410
மின்னஞ்சல்: vradio@gmail.com