Tuesday, May 10, 2016

இலங்கை வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில்...

இலத்திரனியல் ஊடகங்களுக்கான சுயாதீன ஒளிபரப்பு அதிகாரசபையொன்றை உருவாக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அனைத்து வானொலி மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் ஏற்ற வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட உள்ளதாக மேலும் தெரிவித்தார்.
பத்திரிகை முறைப்பாட்டு ஆணைக்குழுவிற்கும் இந்த புதிய அதிகார சபைக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன.
வானொலி மற்றும் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளைப்பற்றி யாரேனும் கேள்வி கேட்கும் சந்தர்ப்பம் நடைமுறையில் இல்லை. ஆனால் பத்திரிகைக்கு இந்த சந்தர்ப்பம் காணப்படுகின்றது.
இவ்வாறான குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் முகமாகவே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கூறினார்.
ஊடகங்களின் தலைவர்களுக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் நேற்று பேச்சுவார்த்தை ஒன்று நடாத்தப்பட்டுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாகவும், அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
மேலும் நேற்று நடைபெற்ற ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது டிஜிட்டல் முறையில் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளதாக பிரதி ஊடக அமைச்சர் கருணாரட்ன பரணவிதாரன தெரிவித்தார்.
Source: http://www.tamilwin.com/

No comments: