Saturday, June 25, 2016

சிறையில் கைதிகளே நடத்தும் எப்.எம். ரேடியோ

மராட்டிய மாநிலத்தில் உள்ள தானே சிறையில் கைதிகளே நடத்தும் எப்.எம். ரேடியோ இன்னும் 15 நாட்களில் தொடங்கப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த வானொலி சேவையை சிறை கைதிகள் மட்டுமின்றி தானே மற்றும் மும்பை நகர மக்களும் கேட்டு ரசிக்க முடியும் என சிறை சூப்பிரண்ட் ஹிராலால் ஜாதவ் தெரிவித்துள்ளார். பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனை வைத்து இந்த ஒலிபரப்பை தொடங்கி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

Wednesday, June 15, 2016

ஆகாஷ்வாணி: இந்திய வானின் அசரீரி!

லையனல் பீல்டன் சென்னை வானொலி நிலையத்துக்கு வந்தபோது எடுத்தபடம். அருகில் அன்றைய நிலைய இயக்குநர் விக்டர் பரஞ்சோதி| படம். ‘தி இந்து' ஆவணக்காப்பகம்

‘ஆகாஷ்வாணி! செய்திகள் வாசிப்பது…’ என்று கனத்த மெளனத்தை உடைத்துக்கொண்டு ஒலிக்கும் குரலுடன் தொடங்கும் வானொலிச் செய்திகளைக் கேட்டு வளர்ந்தவர்களுக்கு, ஒலியுலகின் பொற்காலமான ‘அகில இந்திய வானொலி’யின் நாட்கள் என்றென்றும் நினைவில் இருக்கும். இன்றைக்கு, 418 நிலையங்களைக் கொண்டு உலகின் மிக முக்கிய ஊடகமாக செயல்பட்டுவருகிறது அகில இந்திய வானொலி. உலகின் மிகப் பெரிய பல்வேறு மொழி ஒலிபரப்புகளைக் கொண்ட ஒரே வானொலி எனும் தனித்த பெருமையும் உண்டு.

இந்தியாவில் வானொலி சேவை 1923-லேயே தொடங்கப்பட்டது. எனினும், ‘அகில இந்திய வானொலி’ என்ற பெயர் வைக்கப்பட்டது 1936 ஜூன் 8-ல்தான். அந்தப் பெயரை வைத்தவர் அகில இந்திய வானொலியின் முதல் இயக்குநரான லையனல் பீல்டன். அதன்படி, அகில இந்திய வானொலி தொடங்கப்பட்டதன் 80-ம் ஆண்டு இது. அதற்கு முன்னர் ‘இந்தியன் ஸ்டேட் ப்ராட்காஸ்டிங் சர்வீஸ்’ என்றே அது அழைக்கப்பட்டது. அகில இந்திய வானொலியின் லச்சினையை உருவாக்கியதும் லையனல் பீல்டன்தான். அப்போதைய வைஸ்ராய் கொடுத்த 2,50,000 ரூபாயை வைத்துக்கொண்டு, தனது முழு உழைப்பையும் பயன்படுத்தி, அகில இந்திய வானொலியை வளர்த்தெடுத்தவர் அவர். Read More

Thursday, June 09, 2016

Friday, June 03, 2016

புதிய பொழிவுடன் வெரித்தாஸ் வானொலி


வெரித்தாஸ் வானொலி தற்பொழுது புதிய பொழிவுடன் இணையத்தில் தனது
சேவைையை செய்து வருிகறது. மேலதிக விபரங்களை கேட்க

https://soundcloud.com/veritastamil/watsapp-promo

https://soundcloud.com/veritastamil/rva-facebook-live-streaming

https://soundcloud.com/veritastamil/listener-pattaabi-talks-about-rva

https://soundcloud.com/veritastamil/jothilakshmai

மொபைல் வானொலி உள்ளடக்கம்

தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் கணித்தமிழ்ப் பேரவையின் ஒருங்கிணைப்பில் "மின் உள்ளடக்க உருவாக்கப் பயிலரங்கம்" 2/6/ 16 அன்று தொடங்கியது, சூன் 8, 2016 வரை இப்பயிலரங்கம் நடைபெறும். முதல் நாள் மொபைல் வானொலி உள்ளடக்கம் குறித்து பேரா. த.ஜெய்சக்திவேல், வலைப்பூ பதிவு குறித்து பேரா. ஜெ. பாலசுப்ரமணியன் ஆகியோர் சிறப்புரை வழங்கினர். (உதவி: பேரா. தமிழ்பரிதி)


Wednesday, June 01, 2016

வானொலிகளைச் சேகரிக்கும் ஆட்டோ ஓட்டுநர்

தமிழகத்தில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவருக்கு வித்தியாசமான சிந்தனை.

சின்ன வயதிலிருந்தே பழங்கால வானொலிகளைச் சேகரிப்பதில் அவருக்கு அலாதி ஆனந்தம். 

பொக்கிஷமாகக் கருதும் வானொலிகளை மற்றவருக்கும் காட்டுவதில் அவருக்குக் கூடுதல் இன்பம்.  

அபூதாஹிர். கோவை வாசி. பொறியாளராக வேண்டுமென்பது இலட்சியம். 

வறுமை அந்த வாய்ப்பைத் தர மறுத்தது. 

கையில் கிடைக்கும் சொற்பத் தொகையைச் சேர்த்து வானொலிகள் வாங்கத் தொடங்கினார். 

உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தொன்மையான 300 வானொலிகள் இன்று அபூதாஹிரின் வசம்.

ஆனால் இவர் இன்னமும் வாடகை வீட்டில்தான் வசிக்கிறார். 

வாழ்வில் வலிகள் பல இருந்தாலும் வானொலி தரும் இன்பம் எல்லையற்றது என்கிறார் அபூதாஹிர்.

முறையான படிப்பு இல்லை. 

ஆனால் பழுதான வானொலிகளைச் சீராக்குவதில் இவருக்குப் பழுத்த அனுபவம். 

தேடிவருவோருக்குக் அதைக் கற்றும் கொடுக்கிறார் அபூதாஹிர். 

ஏராளமான தொகை கொடுத்து வானொலிகளை வாங்கப் பலர் முன்வந்தாலும் அவற்றை விற்க மனமில்லை அபூதாஹிருக்கு. 

பழைமை என்றும் இனிமை. 

இளைய தலைமுறையினருக்கு அதை உணர்த்துவதே தமது இலக்கு என்கிறார் வானொலிப் பிரியர்.  

நன்றி: http://seithi.mediacorp.sg/mobilet/india/29may-india-radio-muesuem/2826546.html#