Wednesday, February 07, 2024

இன்னைக்கு யார் சார் ரேடியோ கேட்குறாங்க?



முதல் முறையாக உலக வானொலி நாளில் இரண்டு புத்தகங்களை வெளியிடுகிறோம் என எற்கனவே பதிவிட்டிருந்தேன்.

இரண்டாவது புத்தகத்தின் தலைப்பே சுவரஷ்யமானது. "யார் சார் இன்னைக்கு ரேடியோ கேட்குறாங்க? இது பல வானொலி நேயர்களும் அடிக்கடி எதிர்கொள்ளும் கேள்வி. அந்த கேள்விகளுக்கு பதில் தான் இந்த புத்தகம். இன்றும் இத்தனை நல்லுள்ளங்கள் வானொலியைக் கேட்கிறது.

இந்த புத்தகத்தில் முக்கிய வானொலி நேயர்களை ஆவணப்படுத்தி உள்ளார்கள் எங்களின் இதழியல் துறை மாணவர்கள். மிக முக்கிய புத்தகமாக நான் இதைக் கருதுகிறேன்.

இரண்டாவது புத்தகத்தினை வெளியிட இந்தியாவின் முதல் சமுதாய வானொலியின் இயக்குநர் முனைவர் ஆர்.ஸ்ரீதர் அவர்களும், பெற்றுக்கொள்ள கோடைப் பண்பலையின் மேனாள் நிகழ்ச்சித் தலைவர் முனைவர் பழ.அதியமான் அவர்களும் இசைவு தந்துள்ளார்கள்.

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம். குறிப்பாக சென்னைப் பகுதி வானொலி நேயர்களுக்கு ஒரு ஆச்சர்யம் காத்திருக்கிறது. மறவாமல் வந்துவிடுங்கள்.


No comments: