Friday, May 18, 2007

பிபிசி தமிழோசையில் விடைபெற்றார் அன்பரசன்

தமிழோசையில் கடந்த ஆறு ஆண்டு காலத்துக்கும் மேலாக நம்மோடு பணியாற்றி உங்களுக்கு நல்ல தரமான செய்திகளை தருவதில் ஊக்கமுடன் பணியாற்றிய நமது அன்பரசன் இன்றுடன் தமிழோசையிலிருந்து விலகுகிறார்.

அன்பரசன் பிபிசியிலிருந்து விலகவில்லை, பிபிசியின் ஆங்கிலப்பிரிவுக்கு மாற்றலாகியே செல்கிறார்.
நம்மோடு பணியாற்றிய கடந்த ஆறு ஆண்டுகளில், அன்பரசன், அன்றாட தயாரிப்புப் பணிகளை திறம்பட செய்ததோடு மட்டுமல்லாமல், பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளையும் தயாரித்துதந்துள்ளார் என்பதை நேயர்களாகிய நீங்கள் அறிவீர்கள். 2003ல் நடந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள், மற்றும் தென்னாப்பிரிக்காவில் இந்திய வம்சாவளியினரின் எதிர்காலம் குறித்த பெட்டகம் , 2004 சுனாமியில் அந்தமான் தீவுகளுக்கு ஏற்பட்ட பாதிப்பு, 2005ல் நடந்த இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள், பின்னர் 2006ல் ஜெனீவாவில் நடந்த இலங்கை சமாதானப் பேச்சுவார்த்தைகள் போன்ற முக்கிய நிகழ்வுகளில் அன்பரசன் தமிழோசைக்காக தயாரித்து தந்த செய்திகள் குறிப்பிடத்தக்கவை.

தமிழோசையிலிருந்து பிரிந்து செல்லும் அன்பரசனுக்கு நமது வாழ்த்துக்கள்.
040528_tamil_currentaffairs.shtml

No comments: