Friday, October 05, 2007

தர்மபுரியில் அகில இந்திய வானொலி நிலையம் தொடங்கப்பட்டது.

தர்மபுரியில் கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி அகில இந்திய வானொலி நிலையம் தொடங்கப்பட்டது. தற்சமயம் சென்னை நிலையத்தின் நிகழ்ச்சிகளை அஞ்சல் செய்து வருகிறது. பண்பலை 102.5 மெ.ஹெட்சில் தனது ஒலிபரப்பினை தினமும் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை செய்து வருகிறது.

விரைவில் 10 கிலொவாட் சக்தியில் 100.2 மெ.ஹெர்ட்சில் ஸ்டீரியோ முறையிலான ஒலிபரப்பினை தொடங்க உள்ளது.அறுபது கி.மீ சுற்றளவில் தற்பொழுது இதன் நிகழ்ச்சிகளைக் கேட்கலாம்.

தர்மபுரிக்கு அருகில் உள்ள அதியமான்கோட்டையில் 1999-ல் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டது. 1999-ல் பணி நிறைவடைந்தது. 2002 அக்டோபர் 2-ல் தனது முதல் சோதனை ஒலிபரப்பினைச் செய்தது.

No comments: