Sunday, September 07, 2008

SMS விடு தூது...

SMS -குறுந்தகவல் செய்திப் பரிமாற்றம் - தற்போதைய வாழ்க்கையில் தவிர்க்க முடியாத விஷயமாகஉள்ளது. காரணம், காலை முதல் இரவு வரை பல்வேறு காரணங்களுக்காக மாணவர்கள் முதல் தொழிலதிபர்கள் வரை எளியமுறையில் விரைவாக செய்திகளைப் பரிமாறிக்கொள்ள SMS வசதியைப் பயன்படுத்துகிறார்கள். அந்த வகையில் வானொலி நேயர்கள் மத்தியில் SMS Net பிரபலமாகஉள்ளது.

SMS Net(எஸ்.எம்.எஸ் நெட்) என்றால் என்ன? நீங்கள் தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் நெட் அமைப்பாளரிடம் உங்கள் கைத்தொலைபேசி எண்ணைப் பதிவு செய்துவிட்டால் போதும். தினமும் தகவல்கள் உங்கள் விரல்நுனிக்கு வந்து சேர்ந்து விடும். ஒவ்வொரு தகவலும் அனைத்து உறுப்பினர்களுக்கும் எந்த விதத் தடையுமின்றி வந்துசேரும்.

உதாரணமாக உங்களுக்கு அடுத்தவாரம் பிறந்தநாள் வர இருக்கலாம். இந்தத் தகவலை நெட் ஆபரேட்டரிடம் பதிவு செளிணிதுவிட்டால் போதும். உங்கள் பிறந்த நாளன்று அனைத்து நேயர்களுக்கும் எஸ்.எம்.எஸ் மூலம் சென்றடையும். அனைவரும் உங்களை வாழ்த்தும் போது நீங்கள் அடையும் மகிழ்ச்சியை அளவிட முடியாது. இதுபோன்ற நினைவூட்டல்கள் பிறந்தநாளுக்கு மட்டுமல்ல, முக்கிய வானொலி நிகழ்ச்சி ஒலிபரப்பாகும் நேரம், வானொலிப் பேட்டிகள், வானொலி ஆண்டுவிழா, சிறப்பு நிகழ்ச்சிகள்ஒலிபரப்பாகும் நேரம் போன்றவற்றையும் நினைவூட்டத் தவறுவதில்லை. திருமணநாள், பிறந்தநாள் வாழ்த்துக்களை நேயர்களிடம் பரிமாறிக் கொள்ளும் வகையில் செயல்பட்டு நட்புறவை வளர்க்கும்எஸ்.எம்.எஸ் நெட் பற்றி என்னவென்று சொல்வது!

சிற்றலை வானொலி கேட்போருக்குப் பிரபல வானொலிகள் ஒலிபரப்பாகும் நேரம், அலைவரிசை, முகவரி போன்றவற்றைத் தேடிக்கண்டுபிடிப்பது மிகவும் சிரமமான விஷயம். இந்தத் தகவல்கள் தெளிவாக அனைத்து நேயர்களுக்கும் எஸ்.எம்.எஸ் நெட் மூலமும் சென்றடைகின்றன.பிரபல சிற்றலை வானொலிகளில் அவ்வப்போது நடத்தப்பெறும் போட்டிகள் பற்றியும், அதில் பங்குபெறும் முறையும் உடனுக்குடன் எஸ்.எம்.எஸ் செய்திகளாகப் பரிமாறப்படுகின்றன. முகம் தெரியாத பல்வேறு முகவரிகள்இந்த SMS Net மூலம் தகவல்களைப் பெறுவதோடு நட்புறவை வளர்த்துக்கொண்டு பல்வேறு சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

SMS Net -உங்கள் வாழ்வில் புது அனுபவங்களை ஏற்படுத்தித் தருகின்றன. பங்கேற்க மறந்த வானொலிப் போட்டிகள் இப்போது இல்லை. எல்லாமே SMS Net தரும் தகவல் மழையால்தான்.வானொலி கேட்பதில் தகவல் பெறலாம், இசை கேட்கலாம், அதையும் தாண்டி தமிழக நேயர்களிடையே நட்புறவை வளர்க்கும் SMS Net என்ற உறவுப்பாலங்கள் மென்மேலும் வளர்ந்தால்தான் வானொலித் துறையும் வளரும். நேயர்களிடையே ரசனை மட்டுமல்ல, நட்புறவும் வளரும். வயது, கல்வித்தகுதி, ஜாதி, மதம் தாண்டி நம்மை இணைக்கும் வானொலி கேட்கும் ஆர்வம் பெருக நட்பு வட்ட சங்கிலி (SMS Net) நிறையப் பெருகவேண்டும். தமிழகத்தில் உள்ள SMS Net-களின்விபரம் நாளை.. -வண்ணை கே. ராஜா

No comments: