Wednesday, July 29, 2009

பாஸ்கர் நெப்போலியன்


தஞ்சை மண்ணின் உயர்ந்த மனிதன் நீ!
உலக சிற்றலை வானொலியின் காதலனும் நீ!
ஓய்வு நேரத்திலும் ஓய்வின்றி வானொலி கேட்கும் ரசிகனும் நீ….!
வானொலி உலகின் முத்திரை நேயரும் நீ!
உன் வாழ்க்கை ஒரு தொடர் வண்டி பயணம்
உன் வாழ்வோடு இணைந்து வந்த இணைப்பு பெட்டிகளை கழட்டி விட்டு சென்றது ஏனோ?!
ஆம்! ஓயாது உன் காதோரம் ஒலித்த வானொலிப் பெட்டி உன்னை காணாமல் ஏங்குகிறது!
விண்ணோக்கி செல்லும் டிஸ்கவரி ஓடம்கூட பத்திரமாய் பூமி வந்திறங்குகிறது
நீ சென்ற வாகனமோ உன்னை விண்ணோக்கி அனுப்பிவிட்டு வீதியில் கிடக்கிறதே?
திருச்சி உறவு சங்கமத்திற்கு வந்து அனைவருக்கு ஹாய்…! என்றாய்
நிரந்தரமாய் பூமியை விட்டுச் சென்று விடுவாய் எனத் தெரியாமல் யாருக்கும் பை… பை… சொல்ல மறந்து போனாய்!
வாழ்க்கைப் பயணம் அலுத்துவிட்டதா?
உன் வானொலி தேடல் களைத்து விட்டதா?
காற்றுள்ள வரை ஒலி இருக்கும்
நெஞ்சிருக்கும் வரை உன் நினைவிருக்கும்!
ரயில் சிநேகம் பயணம் முடியும் வரை
உன் வானொலி சிநேகம் எங்கள் வாழ்வு முடியும் வரை
கடல் அலை ஓயாது
உன் நினைவலை மறையாது
நிதம் உன்னை நினைத்து பார்க்க நாங்கள் இருக்கிறோம்
நேரில் பேச நீ இல்லையே!
- வானொலி நேசன் வண்ணை கே. ராஜா

No comments: