Sunday, July 12, 2009

பூர்ணம் விஸ்வநாதன்

இவர் பேர் சொன்னால் இந்த தலைமுறையினருக்கு ""மகாநதி'' படம் ஞாபகத்திற்கு வரும். ஒரு தேர்ந்த குணச்சித்திர நடிகராக இன்றைய இளைய தலைமுறையினரால் அறியப்பட்டிருக்கும் பூர்ணம் விஸ்வநாதனுக்கு இன்னும் பிற முகங்களும் உண்டு.
ஆம்! நாடக நடிகர், தேர்ந்த வானொலி அறிவிப்பாளர். 50களில் பூர்ணம் விஸ்வநாதனின் குரல் மிகவும் பிரபலமானது. 50களில் அவர் குரல் மட்டுமல்ல, வானொலியும் மிகவும் பிரபலம்.

அக்காலத்தில் அந்தஸ்தின் அடையாளமாகவும், வீட்டின் அத்தியாவசிய பொருளாகவும் இருந்தது வானொலிப் பெட்டி. அப்போதெல்லாம் ஏராளமான பண்பலைகள் வரிசைகள் கிடையாது. அதனால் செய்திகள் கேட்கவும், பாடல் கேட்கவும், வீட்டுக்கு வீடு வானொலி பெட்டி அருகே குடும்பத்தினரின் அனைவரும் காத்திருப்பார்கள். அதனால் வானொலியில் ஒலிக்கும் குரல் அனைத்து நேயர்களின் இதயங்களோடு இணைந்து பேசியது.

தற்போதுள்ள லேட்டஸ்ட் வசதிகள் அக்காலத்தில் இல்லையென்றாலும், அறிவிப்பாளர்களுக்கு ராஜ மரியாதை கிடைத்தது. அப்படி கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி "தென்கிழக்கு ஆசிய நேயர்கள் மத்தியில் முத்திரை பதித்தவர் பூர்ணம் விஸ்வநாதன். இரண்டாகம் உலகப் போர் நடந்தபோது ஆங்கிலேயப் படையினரால் ஏராளமான தமிழர்கள் உலகெங்கும் இடம் மாறியிருந்தார்கள். அந்தச் சூழ்நிலையில் கடல் கடந்து வாழ்ந்த தமிழர்கள் தாய்நாட்டில் நடக்கும் நிகழ்வுகளையும், உலகச் செய்திகளையும் தெரிந்து கொள்ள நாடியது வானொலி.
சிற்றலையில் புது தில்லியிலிருந்து ஒலிபரப்பான தென்கிழக்கு ஆசிய சேவை அப்பணியை சிறப்பாகச் செய்தது.

தென்கிழக்கு ஆசிய சேவை மூலம் உலகத் தமிழர்களின் இல்லங்களிலும் உள்ளங்களிலும் ஒலித்த பூர்ணம் விஸ்வநாதன் காற்றோடு கலந்துவிட்ட ஒன்று. அவர் மறைந்தாலும் அவர் பணியை பாராட்டிக் கொண்டிருக்கும் தமிழ் கூறும் நல்லுலகம் என்றும் நினைவில் வைத்திருக்கும். காரணம், இந்தியா 1947ல் சுதந்திரம் அடைந்ததை ""தென்கிழக்கு ஆசிய சேவை'' வானொலி மூலம் உலக தமிழர்களுக்கு அறிவித்த பெருமை பெற்றவர்.
- வண்ணை கே. ராஜா

1 comment:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்