Saturday, August 08, 2009

வேரித்தாஸ் உறவுச் சங்கமம் 2009 - திருச்சி


வேடந்தாங்கல் சரணாலயத் திற்கு சீசனுக்கு பல நாடுகளிலிருந்து பறவைகள் வந்து சேரும். அது போல் பல மாவட்டங்களிலிருந்து வந்த நேயர்கள் திருச்சி நகரில் சங்கமித்தனர். திருமண விழாவில் உறவினர்கள் ஒன்று கூடி நலம்விசாரித்து மகிழ்வது போல் பங்கேற்றனர்.

காலையில் குன்றக்குடி ஆதீனம் அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு நேயர்களால் தரப்பட்டது. அதேபோல் வரவேற்புரைக்கு பின்பு திருச்சி கலைக் காவிரியின் இசை, நாட்டிய நிகழ்வுகள் அனைவர் மனதையும் கொள்ளை கொண்டன. பயணக் கலைப்பில் வந்து சேர்ந்த நேயர்களை குன்றக்குடி அடிகளாரின் பேச்சு உற்சாகமடையச் செய்தது.

ஜெரோம், டெனிஸ் வாய்ஸ் இணைந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தினர்.
பின்பு இந்த ஆண்டுக்கான பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றவர்களுக்கு சான்றி தழும், நினைவுப் பரிசும் வழங் கப்பட்டது. உணவு இடைவேளைக்கு பிறகு நேயர்கள் கூறிய நிறை, குறை, ஆலோசனைகளை ஆர்வத்துடன் குறித்துக் கொணடார் திரு. டிவோட்டோ அவர்கள்.

இரண்டு ஆண்டுக்கு முன்பு உறவு சங்கமத்தில் திரு. தாய் அவர்கள் ஒரு குறிப்பிட்ட மொழிப் பிரிவு காலை வேளையில் நிறுத்தப்படுகிறது. அந்த நேரத்தை தமிழ்பிரிவின் மாலை நேர நிகழ்ச்சியை காலை நேரத்தில் மறு ஒலிபரப்பு செய்ய ஏற்பாடு செய்வதாக கூறினார். இதுவரை நிறைவேறவில்லை.

அதே போன்ற அறிவிப்பு மீண்டும் இந்த ஆண்டு விழா மேடையில் உறுதியாக கூறப்பட்டது. இதுவாவது நிறைவேறுமா?! நேயர்களின் பல்வேறு கேள்வி களுக்கு டென்னில் வாய்ஸ் அவர்கள் சிறப்பாக பதிலளித்தார். வேரித்தாஸ் தமிழ்க் குயில் சந்தோஷினி விழாவில் மிஸ்சிங். மற்றபடி விழா உற்சாகத்தோடு சிறப்பாக நடைபெற்றது.

வழக்கமாக உறவு சங்கம விழாவில் நேயர்கள் தங்கள் பெயரை பதிவு செய்யும் போதே நினைவுப் பரிசுகள் வழங்கப்படும். இம்முறை நிகழ்ச்சி முடிந்து மாலையில் தான் தரப்பட்டது. இதற்காக நேயர்கள் மத்தியில் தள்ளுமுள்ளு ஏற்படுத்தி கலக்கமடையச் செய்து விட்டனர். வேண்டாம் இந்த விபரீதம். 
- வானொலி நேசன், வண்ணை கே. ராஜா,

No comments: