சூரியப் புள்ளியின் சுழற்சி

வரும் 2013ம் ஆண்டின் மத்தியில் சூரிய சுழற்சியின் 24 என்ற நிலை உச்சத்தை அடைய உள்ளது. வருடாந்திர சுழற்சியில் நடைபெறும் விண்வெப்பக் குழுவின் சந்திப்பானது இரு மாதங்களுக்கு முன் கொலராடோ மாகாணத்தில் நடைபெற்றது. “Solar Cycle 24” அதாவது “சூரிய சுழற்சி 24” 2013ல் புவியை நோக்கி நகரும் பொழுது அப்புள்ளிகளின் என்ணிக்கை 90 என்ற அளவில் இருக்குமாம். எனில் அந்த நாளில் நம் சிற்றலைகளின் மீதான தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பதே நம் போன்ற வானொலி நேயர்களின் எதிர்பர்ப்பு.
விஞ்ஞானிகளின் கருத்து உண்மையாகும் நிலையில், இதற்கு முன் 1928ம் ஆண்டில் வந்த ‘சூரியப்புள்ளி 16’ என்ற நிலையில் ஒரு நாளைக்கு சுமார் 78 சூரியப்புள்ளிகளின் தாக்கம் நம்மை அடைந்த நிலையே மிகவும் குறைவானது, என்ற கருத்தையும் அவர்கள் கூறுகின்றனர். இந்த குறைவான நிலையினை அடந்த சூரியப்புள்ளிகளின் தாக்கம் 1928ம் ஆண்டானது, 1750ஆம் ஆண்டுகளில் இருந்து வந்த கணக்கின் படி 9ம் நிலை ஆண்டாகும்.
சூரிய சுழற்சியின் நீட்சியானது சுமார் 11 ஆண்டுகளைக் கொண்டது. அதாவது குறைவான புள்ளிகளைக் கொண்ட சுழற்சியில் தொடங்கி மற்றொரு குறைவான புள்ளிகளைக் கொண்ட சுழற்சிக்காலம் வந்தடையும் வரை உள்ள காலமாகும். 2007ம் ஆண்டில் நலிவுற்றிருந்த காலத்தில் கூடிய இந்த ஆய்வுக்குழு 2008 மார்ச் மாதம் முதல் சூரிய சுழற்சியில் சூறாவளி தோன்றும் எனவும் அதன் தாக்கம் 2011ன் இறுதி மற்றும் 2012ம் ஆண்டின் தொடக்கத்தில் உச்ச நிலையை அடையும் எனவும் கணக்கிட்டுள்ளனர்.
எதிர்பாராமல் சூரிய புள்ளிகளின் தீவிரம் குறைவுற்றிருந்த நாளில் கூடிய குழுவானது அவர்களின் 2007ம் ஆண்டின் அறிக்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தச் செய்துள்ளது. அதன்படி அக்குழுவின் மத்தியில் ஒரு பொதுக்கருத்தும் உறருவாகியுள்ளது. சூரிய சுழற்சியின் பொழுது புள்ளிகளின் அடர்வும், தீவிரமும், புவியின் அளவிற்குக் கூட தோன்றும்.
- ARRLல் இருந்து தமிழில் ADXC 2131 வேதாரண்யம் ஏ. ரகு. ragu-a@in.com
Labels: Solar Cycle 24, சூரியப் புள்ளி, வேதாரண்யம் ஏ. ரகு






0 Comments:
Post a Comment
<< Home