Wednesday, September 12, 2012

குடியரசு தலைவர் பிரணாப் சென்னை வானொலியைப் புகழ்ந்தார்



சென்னை அகில இந்திய வானொலி (AIR) நிலையத்தினை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தினை பிரபலப்படுத்துவதில் "மகத்தான" பங்களிப்பிற்காக ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாராட்டுத் தெரிவித்தார்.
"பல ஆண்டுகளாக தரமான நிகழ்ச்சிகளை தமிழ் மொழி மற்றும் கலாச்சாரத்தினை வளர்த்தெடுப்பதில் சென்னை வானொலியின் பங்களிப்பு அபரிமிதமாக இருந்துள்ளது”. குறிப்பாக கர்நாடக சங்கீதத்திற்கு இது செய்த பங்களிப்பு மிக அதிகம்.

இது இளைஞர்களின் திறனை மெம்படுத்தும் வகையான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பி வந்துள்ளது மற்றும் பாரம்பரிய இசையை பிரபலப்படுத்த உதவி செய்திருக்கிறது. சென்னை வானொலி இன்று சமூகத்தில் பரந்துபட்ட அனைத்து மக்களுக்கும் உதவுகிறது," என்று கூறினார்.

இந்த நிலையமானது விவசாய விரிவாக்க திட்டங்கள் மற்றும் கல்வி திட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் மாணவர்களை மெம்படுத்த உதவியது என்றும் குறிப்பிட்டார். சென்னை வானொலி எழும்பூரில் ஒரு சிறிய ஸ்டூடியோவில் சென்னை மாகாணத்தின் ஆளுநர் எர்ஸ்கின் கோமகனால் தொடங்கி வைக்கப்பட்டது.

ஜூன் 16, 1938 அன்று திறக்கப்பட்ட இந்த நிலையமானது ஒரு 250W மத்திய அலை டிரான்ஸ்மிட்டர் கொண்டு தொடக்க காலத்தில் ஒலிபரப்பி வந்தது குறிப்பிட்த்தக்கது. ஜூலை 1954 ல் இருந்து இன்றுள்ள காமராசர் சாலை வளாகத்தில் இருந்து இயக்கப்பட்டு வருகிறது.

No comments: