Monday, September 10, 2012

இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டி.ஆர்.எம்


இந்தியாவின் முதல் 1000 கிலோ வாட் டிஜிட்டல் ரேடியோ மொண்டியல் (டி.ஆர்.எம்) சூப்பர் பவர் ஒலிபரப்பி குஜராத் மாநிலம் ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள லியாரே கிராமத்தில் உள்ள அகில இந்திய வானொலியில் தொடங்கப்பட்டது.

 இந்த விழாவில் பேசிய பிரசார் பாரதியின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. ஜவஹர் சிர்கார், அகில இந்திய வானொலி விரைவில் மற்ற நிலையங்களிலும் டி.ஆர்.எம் எனும் டிஜிட்டல் தொழில்நுட்ப டிரான்ஸ்மிட்டர்களை நிறுவவுள்ளது என்று கூறினார். 
இந்த டிஆர்எம் தொழில்நுட்ப சூப்பர் பவர் ஒலிபரப்பி கொண்டு ஒரே நேரத்தில்  டிஆர்எம், ஏ.எம் மற்றும் சைமல்காஸ்ட் முறைகளில் ஒலிபரப்பும் திறன் வாய்ந்தது ஆகும். இதுவே நாட்டின் முதல் சைமல்காஸ்ட் ஒலிபரப்பி என்பதில் நமக்கெல்லாம் பெருமையே. இந்தத் திட்டத்திற்காக 42 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியிருந்த்து குறிப்பிட்த்தக்கது.

இந்த ஒலிபரப்பி கொண்டு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஈரான் மற்றும் வட மேற்கு திசையில் உள்ள சில வளைகுடா நாடுகளுக்கும் ஒலிபரப்பப்படுகிறது. அகில இந்திய வானொலியின் வெளிநாட்டு சேவைகளான உருது, சிந்தி மற்றும் பெலுசி ஆகிய மொழிகள் இதன் மூலம் ஒலிபரப்பப்படுகின்றன. மத்திய அலையில் 1071 கிலோ ஹெர்ட்ஸிலும் டி.ஆ.எம் சேவையானது 1080 கிலோ ஹெர்ட்ஸிலும் ஒலிபரப்பப்படவுள்ளது. தற்சமயம் சோதனை ஒலிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இதில் உருது மற்றும் விவித பாரதியின் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாகி வருகிறது.

No comments: