Saturday, September 29, 2012

திரிகோணமலை: இலங்கை வானொலி

திரிகோணமலை: இலங்கை வானொலியானது சமீப காலமாக திரிகோணமலையில் உள்ள ஒலிபரப்பிகளைக் கொண்டு சோதனை ஒலிபரப்புகளைச் செய்து வருகிறது. இந்த ஒலிபரப்புத் தளமானது ஜெர்மன் வானொலி தனது சிற்றலை மற்றும் மத்திய அலை ஒலிபரப்புகளுக்காக பயன்படுத்தியது ஆகும்.
கடந்த ஆண்டு இந்த தளத்தினைவிட்டு ஜெர்மன் வானொலி சென்றுவிட்டதால், அந்த ஒலிபரப்பிகளை வாடகைக்கு விட இலங்கை வானொலி தீர்மானித்தது. அதன் பயனாக இப்பொழுது அட்வண்டிஸ்ட் உலக வானொலி மற்றும் குடும்ப வானொலி ஆகியவை தனது ஒலிபரப்புகளைத் இங்கே இருந்து அஞ்சல் செய்யத் துவங்கியுள்ளன. இங்கு அமைந்துள்ள மத்திய அலை ஒலிபரப்பி மிகவும் சக்தி வாய்ந்தது ஆகும்.
எனவே அதனைக் கொண்டு இலங்கை வானொலி ‘தென்றல்’ ஒலிபரப்பினைச் தமிழக நேயர்களுக்கு அஞ்சல் செய்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என தமிழக மக்கள் எதிர்பார்கின்றனர். எண்ணம் நிறைவேற ஹட்சன் சமரசிங்கே மனது வைக்கவேண்டும்.

No comments: