Monday, December 15, 2014

என்.எல்.சி., பள்ளியில் வானொலி ஒலிப்பதிவு

மந்தாரக்குப்பம்: மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் வானொலி ஒலிப்பதிவு நிகழ்ச்சி நடந்தது.புதுச்சேரி வானொலி நிலையம் சார்பில் சிறுவர் பூங்கா நிகழ்ச்சிக்கு, மந்தாரக்குப்பம் என்.எல்.சி., மேல்நிலைப் பள்ளியில் ஒலிப்பதிவு செய்யப்பட்டது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் அமுதா தலைமை தாங்கினார். ஒருங்கிணைப்பாளர் மணிவாசகம் முன்னிலை வகித்தார். தொழிற்கல்வி ஆசிரியர் சீதாராமன் வரவேற்றார். அதில், "தூய்மையான இந்தியா விழிப்புணர்வு நாடகம், பாடல்கள், திருக்குறள் காட்டும் தூய்மை நெறி, ஆற்றல் சேமிப்பு, வினாடி - வினா' உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. 15க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சி வரும் 14ம் தேதி பகல் 2:30 மணிக்கு வானொலியில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

நன்றி / தினமலர் 15/12/2014

No comments: