Tuesday, December 30, 2014

வானொலி அண்ணா' கூத்தபிரான் காலமானார்


"வானொலி அண்ணா' என்று அழைக்கப்படும் நாடகக் கலைஞர் கூத்தபிரான் (84) ஆந்திர மாநிலம், ஹைதராபாதில் செவ்வாய்க்கிழமை காலமானார்.
அகில இந்திய வானொலியில் 34 ஆண்டுகள் பணியாற்றிய அவர், "வானொலி அண்ணா' என்ற சிறுவர்களுக்கான நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்.
எண்ணற்ற வானொலி நாடகங்களை எழுதி இயக்கியுள்ள கூத்தபிரான், 7,000-க்கும் அதிகமான மேடை நாடகங்களில் நடித்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (டிச. 21) சென்னை தியாகராய நகர் ராமாராவ் கலா மண்டபத்தில் "ஒரு ரோபோவின் டைரி' என்ற நாடகத்தில் அவர் கடைசியாக நடித்தார். இந்த நாடகத்தை இயக்கியவர் அவரது மகன் என். ரத்தினம் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு நிகழ்ச்சிக்காக ஹைதராபாத் சென்றவர் அங்கேயே மாரடைப்பால் காலமானார். அவரது உடல் செவ்வாய்க்கிழமை இரவு சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்துக்குக் கொண்டு வரப்பட்டது.
புதன்கிழமை (டிச. 24) பிற்பகலில் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். மறைந்த கூத்தபிரானுக்கு கணேஷ், ரத்தினம் என இரண்டு மகன்கள் உள்ளனர். இருவரும் நாடகக் கலைஞர்கள்.
தொடர்புக்கு: 94447 43084.
நன்றி தினமணி 24 December 2014

No comments: