Sunday, February 22, 2015

பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரை

மனதின் குரல்: இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரை


பிரதமர் நரேந்திர மோடி இன்று  ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு மனதின் குரல் என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் ஐந்தாவது முறையாக உரையாற்ற உள்ளார்.
இதில் தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கான கருத்துக்கள் இடம்பெறும். இந்நிகழ்ச்சி நாடெங்கும் உள்ள அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாகும்.
பிரதமர் உரையின் தமிழாக்கத்தை நாளை 23 -ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பும். இந்த இரு நிகழ்ச்சிகளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்கின்றன.

நன்றி தினமணி

No comments: