Monday, February 23, 2015

சமூக வானொலிகள் ஆற்றும் பணிகள்

நாட்டில் வேறு எங்கும் இல்லாத மிகவும் "மக்கள் சக்தி" வாய்ந்த ஒரு பண்பலை சமூக வானொலி ஒடிஸ்சாவில் இயங்கி வருகிறது. 'ரேடியோ நமஸ்கார்' என்ற இந்த வானொலி 50 வாட் மின் அலை செலுத்தி (Transmitter) மூலம் 20 கி. மீட்டர் சுற்றளவுக்கு ஒலிபரப்பி வருகிறது.
சமூக வானொலிகள் ஆற்றிய சில சமூகப் பணிகளை இங்கே பார்ப்போம்.
Case No.1
2011 ஆம் ஆண்டு இந்த ரேடியோ நமஸ்கார் அரசின் "குழந்தை வளர்ச்சித் திட்டம்" பற்றி ஒலிபரப்பி வந்தது. இதன் மூலம் பலர் அத்திட்டத்தில் சேர்ந்தனர்.
ஆனால் விநியோகிக்கப்பட்ட தானியங்கள் வண்டரித்து பழுதடைந்தவையாக இருந்தன. தாய்மார்கள் இந்த தானியங்களை எடுத்துக்கொண்டு வானொலி நிலையத்துக்கு வந்தனர். அவர்களது முறையீட்டை வானொலி நிலையம் தொடர்ந்து ஒலிபரப்பியது.
விசாரணைகள் நடைபெற்று 2000 கோடி ரூபா ஊழல் கண்டு பிடிக்கப்பட்டது. உணவுப் பொருள் விநியோக முறையும் மாற்றப்பட்டது.

Case No.2
ஹரிஷ் கோத்தாரி என்பவர் உத்தராகண்ட் மாநிலம் கார்வால் மாவட்டம் ஹதம் மல்லா கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான மின்சார சபை ஊழியர்.
ஒரு சமயம் இவர் மின் கம்பத்திலிர்ந்து தவறி விழுந்தார். அதனால் அவரது முதுகெலும்பு உடைந்து 3 வருடங்கள் மயக்க (கோமா) நிலையிலிருந்தார். பின்னர் பிழைத்தெழுந்த அவரால் நடக்க முடியவில்லை. எழுதவும் முடியவில்லை. ஆனால் பேச முடிந்தது. இவர் படுக்கையில் இருந்தபடியே "ஹென்வல்வாணி" பண்பலை சமூக வானொலியை கேட்டு வந்ததோடு நிலையத்தோடு தொடர்பும் கொண்டார். இவரது நிலையை அறியாத வானொலி நிலையத்தினர் அவரை நிலையத்துக்கு அழைத்தனர். அவருக்கு வானொலி நிலையம் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
இப்போது அவர் அந்த வானொலியின் பிரபலமான சீதி பாட் (Seedhi Bhat) என்ற நிகழ்ச்சியை அவர் தயாரித்து அளிப்பதோடு, வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி வருகிறார்.

Case No.3
இராஜஸ்தான் மாநிலத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
அஜ்மீரிலுள்ள பெயார்ஃபுட் கல்லூரியில் (Barefoot College) உள்ள சமூக வானொலி பல தடவைகள் இந்த அடையாள அட்டை பற்றி தனது ஒலிபரப்பில் எடுத்துக் கூறியது. இதனைக் கேட்ட நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் அந்த சமூக வானொலிக்கு வந்தனர். வானொலி நிலையத்தில் இருந்தவர்கள் அவர்களுக்கு அவர்களது விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப உதவி செய்தனர்.
இந்த அட்டையை வைத்திருப்பவர்களுக்கு நலத் திட்டங்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
(http://bit.ly/18fndH9)

அன்புடன்
S S உமாகாந்தன்

No comments: