Friday, May 29, 2015

அகில இந்திய வானொலி சேவைக்கு முகநூலில் அதிகரிக்கும் வரவேற்பு

அகில இந்திய வானொலி சேவையை விரும்புவோரின் எண்ணிக்கை முகநூலில் (ஃபேஸ் புக்) அதிகரித்து வருகிறது. இதற்கேற்ப இச்சேவையை சுமார் 20 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விரும்பி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
 இதுகுறித்து அகில இந்திய வானொலி செய்திப்பிரிவு, சனிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
 நம் நாட்டின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற உடன், அகில இந்திய வானொலி சேவையை பயன்படுத்தி ஜன் தன் யோஜனா சேவை, மான் கி பாத் நிகழ்ச்சிகளுக்காக உரையாற்றி வருகிறார்.
 இது நேயர்களிடையே பெரும் வரவேற்பு பெற்றதுடன், சமூக இணையதள ஊடகங்களான முகநூல், சுட்டுரை (டுவிட்டர்) போன்றவற்றிலும் நல்ல வரவேற்பை பெற்றன. இதனால் அகில இந்திய வானொலியின் சேவை இந்தியா மட்டுமின்றி நேபாளம், பாகிஸ்தான், சவூதி அரேபியா, வங்கதேசம், மலேசியா, அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர் உள்பட சர்வதேச நாடுகளில் நல்ல வரவேற்பு கிடைத்தன.
 இதேபோல இந்திய மெட்ரோ நகரங்கள் மட்டுமின்றி, மற்ற பெருநகரங்களான ஸ்ரீநகர், போபால், ஜெய்ப்பூர், பாட்னா, இந்தூர், கான்பூர், கோவை, சூரத், டேராடூன் போன்ற இடங்களில் உள்ள நேயர்களும் அகில இந்திய வானொலி சேவை விரும்புவதாக வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
 தற்போது முகநூலில் அகில இந்திய வானொலி பக்கத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக ஒரு கோடி பேர் தங்களின் பதிவிட்டு வருகின்றனர். எந்தவொரு வணிக ஈடுபாடுகள் இன்றி நேயர்கள் இடையே அகில இந்திய வானொலி சேவை சென்று அடைந்துள்ளது.
Source: Dinamani, 16 March 2015 

No comments: