Friday, May 08, 2015

IBC தாசீசியஸ் மாஸ்டர் தாவல்

தாசீசியஸ் மாஸ்டர் தாவல்: தவித்த IBC நிறுவனம் தலையில் கை வைத்தது ஏன் ?


லண்டனில் ஐ.பி.சி வானொலி தனது தொலைக்காட்சி சேவையின் ,ஆரம்ப நிகழ்வை விமர்சையாக கொண்டாடியது. அதில் கலந்துகொண்டு உரையாற்றிய தாசீசியஸ் மாஸ்டரின் தாவல் ,ஏற்பாட்டாளரை பெரும் தவிப்பில் கொண்டுபோய் விட்டுள்ளது. கிளிப்பிள்ளைக்கு சொல்லிக் கொடுப்பதுபோல ,செல்லிக்கொடுத்து மேடைக்கு அனுப்பினாலும், கிளி குரங்காக மாறிய கதை தான். இந்த சுவாரசியமான விடையம் என்ன என்பதனை பார்க முன் , இன்னொரு விடையத்தைப் பார்ப்போம் !
ஊரில் , 60 மற்றும் 70வதுகளில் "சிங்கன்" என்னும் நாடகத்தை மேடையில் அரங்கேற்றி வந்தார்கள். யாழில் இந்த நாடகத்தைப் பற்றி அறியாதவர்கள் இருக்கவே முடியாது எனலாம். சிங்கன் என்னும் பெயரை விட "மயிரச் செத்தான் சிங்கன்" என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும். அப்படியா ? அது என்ன ? என்று நீங்கள் கேட்ப்பீர்கள். அது என்னவென்றால் , சிங்கன் ஒரு மன்னன். அவன் இறுதியில் ஒரு போரில் ,எதிரி நாட்டு மன்னனோடு போர் புரிந்து , வாளால் குத்துண்டு இறக்கிறான். அத்துடன் நாடகம் முடிவடையும். ஆனால் ஒரு நாள் சிங்கனாக நடிக்கும் நபர் , சற்று வெறியைப் போட்டுவிட்டு வந்துவிட்டார். குடிபோதையில் சிங்கன் இருக்கிறார் என்று தெரிந்தும் நாடக கம்பெனி அவரை நடிக்க அனுமதித்தார்கள். இறுதிவரை நன்றாக நடித்த சிங்கன் , எதிரி நாட்டு மன்னனுடன் வாள் சண்டை வரும்போது மட்டும் ,விடாமல் சண்டை பிடிக்க ஆரம்பித்துவிட்டான்.
இதனால் எதிரி நாட்டு மன்னனாக நடித்தவரால் சிங்கனை கத்தியால் குத்துவது போன்று நடிக்க முடியவில்லை. ஏன் என்றால் சிங்கன் நிஜமான போர் நடப்பதுபோல விடாமல் அடிபட ஆரம்பித்துவிட்டார். இன் நிலையை புரிந்துகொண்ட நாடக கம்பெனி ஆட்கள் ,முன்னால் உள்ள திரைச் சீலையை இழுத்து மூடி, "இவ்வாறு நடந்த போரில் சிங்கன் உயிரிழந்தார்" என்று அறிவித்தார்கள். ஆனால் அதனைக் கேட்ட சிங்கன், அப்படியே திரைச் சீலையை விலக்கி மக்கள் மத்தியில் தோன்றி "மயிரைச் செய்த்தான் சிங்கன்" என்று கூறி நின்றார். அது அன்று நடந்த மாபெரும் பகிடி. இதனைக் கூறி இன்று கூட பலர் சிரிப்பார்கள் என்றால் பாருங்களேன் ! அந்த அளவு அவர் அன்று வெறியில் இருந்துள்ளார். சரி விடையத்திற்கு வருவோம் ,
லண்டனில் புதிதாக ஐ.பி.சி என்னும் TV ஐ ஆரம்பிக்கிறோம் என்று கூறி அன் நிறுவனம் ஒரு விழாவை ஏற்பாடு செய்தது. ஐ.பி.சி வானொலி மற்றும் TV க்குப் பின்னால் லிபரா மோபைல் நிறுவனமே நின்று நிதி உதவியைச் செய்கிறது என்பது ஊரறிந்த விடையம். ஆனால் கேட்டால் , அவர்கள் வேறு நாம் வேறு என்று சொல்வார்கள் அங்கே வேலைசெய்யும் ஆட்கள். இதனை வெளிக்காட்ட லிபரா மோபைல் நிறுவனமும் விரும்பவில்லை. ஞாயிற்றுக் கிழமை அன்று , மேடையில் பேச தாசீசியஸ் மாஸ்டர் தயாராக இருந்தார். அந்த நேரத்தில் அவரை அணுகிய சிலர், அண்ணா "லிபரா" பற்றி வாய் திறக்க வேண்டாம். ஐ.பி.சி யைப் பற்றி மட்டும் பேசுங்கள். தயவு செய்து லிபரா பற்றி பேசவேண்டாம் என்று பாடம் நடத்தினார்கள்.
அவரும் ஓம் .. ஓம் என்று தலையசைத்துவிட்டு மேடைக்குச் சென்றார். அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை மீறி அவர் பேசிக்கொண்டு இருக்க , உங்கள் நேரம் முடிந்துவிட்டது என்ற வாசகம் அடங்கிய சிறிய துண்டுகளை சிலர் கொண்டுபோய் ,அவரது மைக்கிற்கு முன்னால் வைத்தார்கள். ஆனால் மனுஷன் பேச்சை நிறுத்திய பாடாக இல்லை. கடைசியில் எதனைச் சொல்லவேண்டாம் என்று சொல்லி அனுப்பினார்களோ அதில் கை வைத்துவிட்டார் போங்கள். "லிபரா" தான் ஐ.பி.சியை இயக்குகிறது. அவர்களுக்கு பூ போட்டு கும்பிடவேண்டும் என்று எல்லாம் அலட்டி , இறுதியாக எல்லாவற்றையும் போட்டு உடைத்துவிட்டார். மேடைக்கு பின்னால் நின்ற ஏற்பாட்டாளர்கள் பலர் தலையில் கைவைத்துக்கொண்டு ,முக்காடு போடாத குறையாக இருந்துள்ளார்கள்.
இதில் இன்னும் ஒரு விடையம்... இனி என்ன பேசப்போகிறார் என்பது தெரியாமல் அவர்கள் மண்டையை போட்டு உடைத்துக்கொண்டு இருந்துள்ளார்கள். உள்ளக விடையங்களை , அல்லது சீக்கிரெட்டான விடையங்களை இவர் எங்கே மோடையில் சொல்லிவிடுவாரோ என்று , ஏற்பாட்டாளர்கள் திணறியுள்ளார்கள். சில தமிழர்களிடத்தில் ஒரு பழக்கம் உள்ளது. மைக் (ஒலி வாங்கியை) கொடுத்தால் போதும் , மணித்தியாலக் கணக்கில் பேசுவார்கள். இந்த ரகத்தை சேர்ந்த தாசீசியஸ் மாஸ்டரை , விழாவுக்கு அழைத்து அவர் வாயால் வாங்கிக் கட்டியுள்ளார்கள். ஏன் மக்களுக்கு விடையங்களை மறைக்கவேண்டும் ? அப்படி மறைக்க முற்பட்டால் உண்மை ஏதோ ஒரு ரூபத்தில் வெளியாகும் என்பார்கள். அது இவர் ரூபத்தில் நின்று நேற்று கோர தாண்டவம் ஆடியுள்ளது.
அதிர்விற்காக ,
வல்லிபுரத்தான். 
Source: http://www.athirvu.com/, Apr 21, 2015

No comments: