சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Friday, December 11, 2015
WRTH 2016
புத்தகத்தை வாங்க
Thursday, December 10, 2015
ஹாம் வானொலி இருந்திருந்தால்…
ஒரு சிலர் தங்கள் வீட்டில் இன்வெட்டர்
இருந்ததால் அடுத்த ஒரு நாளுக்கு பயமின்றி இருந்தனர். அதுவும் காலியானதும் மீண்டும்
பயம் தொற்றிக் கொண்டது. இப்பொழுது போன் பேச பேட்டரி இல்லை. நண்பர்களையும் உறவினர்களையும்
தொடர்பு கொள்ள முடியவில்லை, முதலில் இதனால் பெரிய சிரமம் ஒன்றும் இல்லை. ஆனால் ஒரு
கட்டத்தில் பத்திரிகை செய்திகளில் வெள்ளத்தின் விபரங்கள் படத்துடன் வெளியாகத் தொடங்கியவுடன்
நண்பர்களையும் உறவினர்களையும் அழைத்து விசாரிக்க எண்ணிய போது தான் விபரீதம் புரிந்தது.
தாங்கள் அனைவரும் வெள்ள நீரால் சூழப்பட்டது மட்டுமல்லாமல் தொலைதொடர்பு வசதிகள் இல்லாததால்
தங்களின் நிலைமையை நண்பர்களுக்கும் சொல்ல முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது.
எனக்கு 75 வயது மதிக்கதக்க ஒரு வானொலி
நண்பர் உள்ளார். அவர் தனக்கு எப்பொழுதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்பொழுதொல்லாம் வானொலியைக்
கேட்டுக்கொண்டே இருப்பார். ஒரு சில நேரங்களில் தான் வேலை செய்துகொண்டு இருக்கும்போது
கூட வானொலிப் பெட்டி ஒலித்துக்கொண்டே இருக்கும். அவர் இருப்பது வெள்ளம் அதிகம் பாதித்த
தாம்பரம் பகுதியில். தனியொருவராக தங்கியுள்ளார். இந்த வெள்ளத்தில் என்ன ஆனரோ என்று
தொடர்ந்து நான்கு நாட்கள் முயன்று ஐந்தாவது நாள் தான் அவரைப் பிடிக்க முடிந்தது. எப்படி
இருக்கிறாரோ என்று பயந்த எனக்கு அவர் கூலாகச் சொன்னார் வானொலி கேட்டுக்கொண்டு இருப்பதாக.
நகரமே நீரில் மூழ்கிக் கொண்டு இருக்கிறது நீங்கள் வானொலி கேட்டுக் கொண்டு இருக்கிறீர்களே
என்றேன். அதற்கு அவர் கூறினார், இதைத்தான் அவர்கள் வானொலியில் தொடர்ந்து அறிவித்து
வந்தனரே!
இன்னும் ஒரு நண்பர் ஊரபாக்கத்திற்கு
அருகில் உள்ளார். அவரும் வானொலிப் பிரியர். இலங்கை வானொலி என்றால் அவருக்கு உயிர்.
எனக்கும் தான். வானொலி நேயர்களுக்காக என்றே ஒரு இதழை ‘தமிழ் ஒலி’ என்றப் பெயரில் நடத்தினார்.
நானும் ‘சர்வதேச வானொலி’ என்ற இதழை நடத்தி வருபவன் தான். அவரது பகுதியிலும் ஐந்து நாட்களாக
மின்சாரம் இல்லை. அவருக்கும் கடந்த நான்கு நாட்களாக உற்றத் துணைவன் அவரின் கையடக்க
வானொலிப் பெட்டிதான். ஊரே பயந்து நடுங்கிக்கொண்டு இருக்கிறது. இவரோ கூலாக வானொலிக்
கேட்டுக்கொண்டு இருக்கிறார். அதுவும் அவரது வீட்டிற்கு அருகில் உள்ள ஏரிக்கரையில் அமர்ந்தவாறு.
உரிமம் வாங்கி பயன்படுத்துபவர்ளைத்
தான் நாம் ஹாம் வானொலி உபயோகிப்பாளர்கள் என்கிறோம். இது போன்ற ஆபத்து காலங்களில் இந்த
ஹாம் வானொலி தான் தகவல் தொடர்புக்கு உலகெங்கும் கைக் கொடுத்தது, கொடுத்தும் வருகிறது.
தொடர்ந்து சுனாமியும், நில நடுக்கமும் வரும் ஜப்பானில் தான் உலகிலேயே அதிக ஹாம் வானொலி
உபயோகிப்பாளர்கள் உள்ளனர். ஹாம் வானொலியைப் பயன்படுத்த எந்த ஒரு செல் போன் டவர்களும்
தேவையில். மின்சாரமும் குறைந்த அளவேத் தேவை. எங்கே இருக்கிறோமோ அந்த நொடியில் அங்கு
இருந்து உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடியும். மாதம் ஆனதும் சர்வதேச அழைப்புகளுக்கு
பில் தொகை எகிருமே என்ற கவலையும் வேண்டாம்.
எனக்குத் தெரிந்து சென்னையில் உள்ள
எந்த ஊடகமும் ஹாம் வானொலிப் பிரிவைத் தன்னகத்தே கொண்டதாகத் தெரியவில்லை. எனக்கு தெரிந்த
ஒரு ஊடக நண்பர் ஒரு சில முக்கியத் தகவல்களை ஹாம் வானொலித் துணைக் கொண்டு என்னிடம் பெற்றுத்
தருமாறு கூறினார். இதுவே அவர்களுக்கு இந்த ஹாம் வானொலிப் பெட்டிகள் இருந்திருந்தால்!
இனிமேலாவது அனைத்து ஊடக நண்பர்களும் ஹாம் வானொலித் தேர்வினை எழுதி ஒவ்வொருவரும் தங்களின்
வீட்டில் ஒரு வயர்லெஸ் கருவியை வைத்துக் கொள்வோம். ஊடக நண்பர்கள் மட்டுமல்லாமல் எட்டாம்
வகுப்புத் தேர்வான அனைவரும் ஹாம் வானொலித் தேர்வினை எழுதத் தகுதி வாய்ந்தவர்கள். தேர்வுக்கு
தயாரிக்க சென்னையிலேயே பல தன்னார்வ ஹாம் கிளப்புகள் உள்ளன. சென்னைப் பல்கலைக்கழகத்தின்
இதழியல் துறையும் கற்றுக் கொள்ள ஆர்வமுள்ள ஊடக நண்பர்களுக்கு இலவச பயிற்சியை வழங்கத்
தயாராக உள்ளது. சென்னையில் உள்ள எப்.எம் வானொலிகள்
Wednesday, December 09, 2015
பேரிடர் வேளையில் வானொலி
சென்னை மழையில் உதவிய பழைய தொழில்நுட்பம் !
வடகிழக்கு பருவமழை காரணமாக இந்தாண்டு சென்னை கடும் மழை மற்றும் வெள்ளத்தால் பெரும் பாதிப்புக்குள்ளானது. இந்த நிலையை சற்றும் கண்டிராத, எதிர்பார்த்திடாத சென்னையில் தங்கியிருந்த மக்கள், தற்போது சொந்த ஊருக்கே சென்றுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏற்கனவே மழை வெள்ளத்தால் சிரமப்பட்ட சென்னை வாசிகளுக்கு கடந்த திங்கட்கிழமை (நவம்பர் 30) தொடங்கிய தொடர்மழை தான் பேராபத்தை தந்தது. பெருமழை தொடர்ந்து 2 நாட்கள் வெளுத்துக்கட்டியது.
சென்னைக்குள் வெள்ளம் சூழ்ந்ததால், எல்லா புறமும் மக்களை நகர விடாமல் தவிக்கவிட்டது.
இன்று எட்டாவது நாள்.
சற்று மக்கள் மீண்டு வந்தாலும், உணவு இன்றி, தங்க இடமின்றி, உடுத்த உடையின்றி பெரும்பாலானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர், சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்றுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
கடந்த வாரம், சென்னை மக்களின் அவதிக்கு மழை காரணமாக இருந்தாலும், தொலைத்தொடர்பும், போக்குவரத்தின்மையும் அவர்களை மேலும் துயரத்திற்கு ஆளாக்கியது.
ஆனால், இந்த பேரிடர் வேளையில் வானொலி நிறைய பேருக்கு ஆறுதல் அளித்ததாக சென்னைக்குள் இருந்தவர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, எந்த பகுதியில் என்ன நடந்தது. எங்கு வெள்ளம் சூழ்ந்தது உள்ளிட்ட தகவல் அறிவிப்பாளர்கள் தெரிவித்தவண்ணம் இருந்தனர். மின்சாரம் இல்லாததால் தொலைக்காட்சி சேவையும் துண்டிக்கப்பட்டது.
வெள்ளம் புகுந்ததால் சில தொலைக்காட்சி நிறுவனங்கள் தற்காலிகமாக சேவையை நிறுத்தின.
சென்னைக்கு வெளியே, போக்குவரத்து துண்டிக்கப்பட்டதால், ஆங்காங்கே நெடுஞ்சாலையில் நின்ற வாகனங்களில் இருந்தவர்களும், வானொலி சேவை மூலமே நிலைமையை தெரிந்துக்கொண்டனர்.
அகில இந்தியா வானொலியான அரசு பண்பலை சேவையில் மணிக்கொரு முறை ஒலிபரப்பான செய்திகள் அவர்களுக்கு தகவல்களை அறிந்துக்கொள்ள உதவியது.
மழை வெள்ளத்தில் மூழ்கிய நிலையிலும், அகில இந்தியா வானொலி நிலையம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து, ஊருக்கு திரும்பி செல்வதை முடிவெடுத்த வெளியூர் மக்கள், சென்னைக்குள் வெள்ளத்தில் சிக்காமல் தப்பினர்.
கடந்த வாரத்தின் திங்கட் கிழமை மாலையில் இருந்து மூன்று நாட்கள் எந்த செல்பேசி தொடர்பும் இல்லாமல், போக்குவரத்தும் இல்லாமல், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த நிலைக்கு அழைத்து சென்றுவிட்டது இந்த மழை....
அதேசமயம், படிப்படியாக மின்சாரம், தொலைபேசி சேவை, இணைய சேவை, போக்குவரத்து சீரானதால், 21ம் நூற்றாண்டுக்குள் சென்னை முழுவதுமாக மீண்டு வந்தது என்றே கூறலாம்.
Source: http://ns7.tv/ta/how-fm-radios-help-flooded-chennai.html
ஒரு வானொலி இருந்திருந்தால்...

ஏன் ஊடகங்கள் வெள்ளத்தில் அமைதியானது? கேள்விக்கான பதில் இதோ



Amateur radio turns vital link when gadgets fail in floo...
Amateur radio turns vital link when gadgets fail in flood-hit Chennai
| |||||
Preview by Yahoo
| |||||
Monday, December 07, 2015
வெள்ள நிவாரணத்தில் வானொலி அறிவிப்பாளர்கள்
ஆர்.ஜே ரஞ்சித் :-
தனியார் வானொலி ஒன்றில் வேலை செய்யும் ரஞ்சித் உணவு மற்றும் மருந்துகள் விநியோகத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார். கொசுக்கடி, சளி, காய்ச்சல் எனப் பலரும் அவதிப் படுகின்றனர், இவர்களுக்கு தொடர்ந்து இடைவிடாது காலை முதல் இரவு வரை ஒவ்வொரு பகுதியையும் தேர்ந்தெடுத்து அங்குள்ள மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருகின்றனது இவரது குழு.
தண்ணீர் பாட்டில்கள், நாப்கின் போன்றவற்றையும் இவரது குழு விநியோகிக்கிறார்கள். ஸ்டேட்டஸ் தட்டுவதை விட இவர் வீடியோ பதிவாக போடுவதால், பலருக்கு தகவல் சென்றடைகிறது. தன்னார்வலர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது, நிறைய தன்னார்வலர்கள் வந்தால் நிறைய பேருக்கு உதவமுடியும் என்கிறார் ரஞ்சித்.
https://web.facebook.com/RJ.RANJITH.0303/?fref=photo
ஆர்.ஜே பாலாஜி :-
ஆர்.ஜே பாலாஜி பற்றிய அறிமுகம் தேவையில்லை. தான் வேலை பார்க்கும் எஃப்.எம் மூலமாக பல தன்னார்வாலர்களை ஒருங்கிணைத்தார் பாலாஜி.
மேலும் டுவிட்டர், ஃபேஸ்புக் மூலமாகவும் தொடர்ந்து யார், எங்கே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், எங்கே உணவு தேவைப்படுகிறது, யார் உணவு வழங்க தயாராக இருக்கிறார்கள் போன்ற விவரங்களை அப்டேட் செய்து கொண்டே இருந்தார்.
மேலும் மக்களுக்கு அவசியம் தேவைப்படக்கூடிய போர்வை, தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை பல இளைஞர்களோடு சேர்ந்து இணைந்து வாங்கி பல்வேறு பகுதியில் இருக்கும் மக்களுக்கு விநியோகம் செய்தார். ஆர். ஜே.பாலாஜியின் முயற்சி காரணமாக ட்விட்டரில் சென்னையில் மழை என்பது தேசிய அளவில் டிரென்ட் ஆனது. நடிகர் சித்தார்த், விஷ்ணு விஷால் ஆகியோரோடும் இணைந்து தொடர்ந்து இடைவெளியின்றி மீட்பு பணியில் ஈடுபட்டார் ஆர்.ஜே.பாலாஜி.
நன்றி: அபராஜிதன்
வானொலியின் அருமை
Wednesday, December 02, 2015
திருநெல்வேலி வானொலியின் 53 ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்
திருநெல்வேலி வானொலி 1.12.1961 அன்று தொடங்கப்பட்டு 53 ஆம் ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு 1.12.2015 மாலை 3 மணிக்கு திருநெல்வேலி அகிலஇந்திய வானொலி வளாகத்தில் ஆண்டுவிழா நடைபெற்றது.




