Monday, December 07, 2015

வெள்ள நிவாரணத்தில் வானொலி அறிவிப்பாளர்கள்

ஆர்.ஜே ரஞ்சித்  :-
 தனியார் வானொலி ஒன்றில் வேலை செய்யும் ரஞ்சித் உணவு மற்றும் மருந்துகள் விநியோகத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார். கொசுக்கடி, சளி, காய்ச்சல் எனப் பலரும் அவதிப் படுகின்றனர், இவர்களுக்கு தொடர்ந்து இடைவிடாது காலை முதல் இரவு வரை ஒவ்வொரு பகுதியையும் தேர்ந்தெடுத்து  அங்குள்ள மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருகின்றனது இவரது குழு.

r%20j%20ranjith%20.jpgதண்ணீர் பாட்டில்கள், நாப்கின் போன்றவற்றையும் இவரது குழு  விநியோகிக்கிறார்கள்.  ஸ்டேட்டஸ் தட்டுவதை விட இவர் வீடியோ பதிவாக போடுவதால், பலருக்கு தகவல் சென்றடைகிறது. தன்னார்வலர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது, நிறைய தன்னார்வலர்கள் வந்தால் நிறைய பேருக்கு உதவமுடியும் என்கிறார் ரஞ்சித்.
https://web.facebook.com/RJ.RANJITH.0303/?fref=photo


ஆர்.ஜே பாலாஜி  :-
ஆர்.ஜே பாலாஜி பற்றிய அறிமுகம் தேவையில்லை. தான் வேலை பார்க்கும் எஃப்.எம் மூலமாக பல  தன்னார்வாலர்களை ஒருங்கிணைத்தார் பாலாஜி.

மேலும் டுவிட்டர், ஃபேஸ்புக் மூலமாகவும்  தொடர்ந்து யார், எங்கே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், எங்கே உணவு தேவைப்படுகிறது, யார் உணவு வழங்க தயாராக இருக்கிறார்கள் போன்ற விவரங்களை அப்டேட் செய்து கொண்டே இருந்தார்.

மேலும் மக்களுக்கு அவசியம் தேவைப்படக்கூடிய போர்வை, தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை பல  இளைஞர்களோடு சேர்ந்து இணைந்து வாங்கி பல்வேறு பகுதியில் இருக்கும் மக்களுக்கு விநியோகம் செய்தார். ஆர். ஜே.பாலாஜியின் முயற்சி காரணமாக ட்விட்டரில் சென்னையில் மழை என்பது தேசிய அளவில் டிரென்ட் ஆனது. நடிகர் சித்தார்த், விஷ்ணு விஷால் ஆகியோரோடும் இணைந்து  தொடர்ந்து இடைவெளியின்றி மீட்பு பணியில் ஈடுபட்டார் ஆர்.ஜே.பாலாஜி.   

நன்றி: அபராஜிதன்

No comments: