Monday, February 27, 2012

காலநிலையை மட்டும் அறிவிக்க வானொலி


ஆஸ்திரேலியா: உலகெங்கும் காலநிலையை மட்டும் அறிவிக்க என்று
தனியாக வானொலிகள் செயல்பட்டு வருகின்றன. ஒரு சில சமயம்
சிற்றலையிலும் இந்த வானொலிகளைக் கேட்கலாம். இந்த வானொலிகளின் முக்கிய நோக்கமே கடலில் பயணிக்கும் மாலுமிகள் மற்றும் மீனவர்களுக்கு இவர்கள் அவ்வப்போதைய காலநிலைகளை அறிவித்த வண்ணம் இருப்பர்.

இந்த வானொலிகளை இங்கு தமிழ்நாட்டிலும் அவ்வப்போது கேட்கலாம். ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகும் இந்த வானொலிக்கு நிகழ்ச்சி தர அட்டவணை அனுப்பினால், அருமையான வண்ண அட்டையை லேமினேஷன் செய்து அனுப்புகின்றனர். அவர்களது ஒலிபரப்பினை இந்திய நேரம் காலை 8
மணிக்கு (0230 UTC) ஆங்கிலத்தில் 11030, 13920 அலைஎண்கள் 25 மீட்டரில்
ஒலிபரப்பாகிறது. தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:

GPO Box 1289,
Melbourne, VIC
3001C, Australia.
(700 Collins Street, Docklands)
Web: http://www.bom.gov.au/inside/offices/
(Alokesh Gupta)

Tuesday, February 21, 2012

அமெரிக்கா WTJC இருந்து வண்ண அட்டை



WTJC Family Christian Radio தனது நேயர்களுக்கு தற்பொழுது அமெரிக்காவில் இருந்து வண்ண அட்டையை உடனுக்குடன் அனுப்பி வருகிறது. இவர்களது நிகழ்ச்சியானது இந்திய நேரம் காலை 8 மணிக்கு (0130 UTC) ஆங்கிலத்தில் 9370 அலைஎண்கள் 31 மீட்டரில் ஒ−பரப்பாகிறது. தொடர்பு கொள்ள இவர்களது முகவரி:
WTJC, Fundamental Broadcasting Network,
#520, Roberts Road, Newport,
NC 28570,
USA.
Email: fbn@fbnradio.com
Web: www.fbnradio.com
(Babul Gupta)

Monday, February 20, 2012

செய்தி சாம்ராஜ்யத்தின் மன்னன் – பகுதி 1




நீண்ட நாட்களாக ஒரு எண்ணம். பி.பி.சி-யில் பணிபுரியும் போதே இந்த எண்ணம் இருந்தாலும் அதனை நடைமுறைப்படுத்த இவ்வளவு நாட்கள் ஆயிற்று. ஆம், செய்தி சாம்ராஜ்யத்தின் மன்னன் என அனைவராலும்
புகழ்ந்து கூறப்படும் பி.பி.சி. உலக சேவை பற்றிய முழுமையான வரலாறு தமிழில் இல்லை. எனவே அதை எழுத இந்த களம் சரியாக இருக்கும். மேலும்
பல வானொலி நேயர்களின் எண்ண ஓட்டங்களையும் இந்தத் தொடர் நிச்சயம் நிறைவேற்றும் என நம்பலாம்.

நீங்கள் அறிந்திராத பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தகவல்களை தாங்கி வரவுள்ள இதில் நிச்சயம் நீங்கள் அதிசயிக்கக் கூடிய பி.பி.சி. பற்றிய பல அறியத் தகவல்கள் இருக்கும்.

1920 
முதல் செய்தி அறிக்கை


ஸ்ரான்ட் பகுதியில் இருந்த மார்க்கோணி ஹவுஸில் பி.பி.சி.-யின் ஒலிபரப்பு தொடங்கப்பட்ட போது அதன் மொத்த பணியாளர்களின் எண்ணிக்கை என்ன தெரியுமா?. வெரும் நான்கு அலுவலர்கள். அப்பொழுது பி.பி.சி.-க்கு பெயர் பிரிட்டிஸ் புராட்காஸ்டிங் கம்பெனி. அதன் பின்னரே பி.பி.சி.யானது கார்ப்பசேனாக மாறியது.

வரலாற்றில் முதன் முறையாக செய்தி அறிக்கைகள் பி.பி.சி.-யில் இரண்டு முறை ஒலிபரப்பப்பட்ட பின் தான் அந்த தகவலினை அங்கு வெளிவந்த புகழ்பெற்ற நாளிதழ் ‘டெய்லி நியூஸ்’ வெளியிட்டது. வயர்லெஸ் உபகரணங்களைத் தயாரிப்பவர்கள் இந்த நிலையத்தினை வடிவமைத்த இரண்டு வாரங்களில் வானொலி ஒலிபரப்பானது தொடங்கப்பட்டது.

முதலில் இரண்டு செய்தி அறிக்கைகள் வாசிக்கப்பட்டது. முதல் செய்தி அறிக்கையானது மெதுவாகவும், அடுத்த செய்தி அறிக்கையானது வேகமாகவும் வாசிக்கப்பட்டது. இதனை வாசித்தவர் அன்றை பி.பி.சி.-யின் நிகழ்ச்சிகளுக்கு இயக்குனராக இருந்த ஆர்தர் பாரோவ்.

“அன்றைய தினம் செய்தி வாசித்தது பல்வேறு புதிய அனுபவங்களைக் வழங்கியது. காரணம் புதிய பெயர்களை உச்சரிக்கும் போது எந்தத் தவறுகளையும் செய்துவிடக்கூடாது என்ற கவனத்தில் குழந்தைகள் படிப்பது போன்று எழுத்துக்கூட்டி படித்தேன்.” அந்த சமயத்தில் தேர்தல் முடிவுகள் பிரிட்டிμல் வெளியாகிக் கொண்டு இருந்தது. அந்த காலகட்டத்தில்
மொத்தமே தோராயமாக 30,000 மக்களிடம் மட்டுமே வானொலிக் கேட்பதற்கான உரிமம் இருந்தது. தேர்தல் முடிவின் போது அனைத்து அரசியல் கட்சியினரும் வானொலியைக் கேட்டவாறு இருந்தனர் என ‘த டைம்ஸ்’ இதழ் செய்தி வெளியிட்டது.

*****
செய்திகளுக்குத் தடை


செய்திகள் என்றாலே பி.பி.சி. என்ற ஒரு நிலை இருந்த தொடக்க காலகட்டம். ஆனால் பி.பி.சி. செய்திகளுக்கே ஒரு காலகட்டத்தில் தடை விதிக்கப்பட்டது என்றால் நம்புவீர்களா?. அந்த கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் எல்லாம் காரசாரமாக பேசிக்கொண்டு இருந்தனர்.

கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அனைவரும் பத்திரிகை ஆசிரியர்கள் மற்றும் முதலாளிகள் ஆகும். அவர்களில் ஒரு மூத்த பத்திரிகையாளர் “இனி பி.பி.சி. வானொலியில் செய்திகளை படிக்கக்கூடாது” என்று தனது வாதத்தினை வைத்துக்கொண்டு இருந்தார்.

அவரது அந்தக் கூற்றினை அங்கே கூட்டத்தில் இருந்த அனைவரும் ஆதரித்தனர். பி.பி.சி.யில் செய்திகளை வாசிக்கக்கூடாது என்று அவர்கள் கூறியதற்கான காரணத்தனை கேட்டால், இன்றைய காலகட்டத்தில் நகைச்சுவையாக இருக்கும். ஆம், அவர்கள் கூறியது இது தான், “பி.பி.சி. செய்திகளை முன்கூட்டியே ஒலிபரப்பி விடுவதால் எங்களது நாளிதழின்
விற்பனை சரிந்து வருகிறது. தொடர்ந்து இது போன்று ஒலிபரப்பினால் நாங்கள் அனைவரும் நாளிதழ்களை மூடிவிட்டு செல்ல வேண்டியது இருக்கும்.”

இதற்காக ஒரு தீர்வினையும் அவர்களே வழங்கினர். அதாவது நாளிதழ்கள் அனைவருக்கும் கிடைத்த பின்னரே செய்தி அறிக்கைகள் வாசிக்கப்பட வேண்டும் என்பது அவர்கள் தரப்பு வாதம். அந்த வாதத்தினை ஏற்றுக்கொண்ட அன்றைய பி.பி.சி. பொது மேலாளர் ஜான் ரீத், “செய்திகளை அவ்வளது சீக்கரத்தில் ஒலிபரப்புவதால் நேயர்களும் நன்மையில்லை” என்றார்.

33 வயதே ஆன ஜான் ரீத் பொது மேலாளர் பதவி ஏற்றதும் சந்தித்த முதல் பிரச்சனை இது. ‘பொது செய்தி அறிக்கை’ எனும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு ஒரு வாரம் ஆகிய நிலையிலேயே இந்தப் பிரச்சனை பூதாகாரமானது. காரணம் நாளிதழ்களில் வரும் அனைத்து செய்திகளும் இதில் வாசிக்கப்பட்டது. ஆனால் இதற்கு பி.பி.சி.-யின் சர் வில்லியம் நோபுள் கூறிய காரணம் ஒரு சில பத்திரிகையாளர்களை யோசிக்க வைத்தது.

 “பி.பி.சி.-யின் பொது செய்தி அறிக்கையை கேட்கும் நேயர்கள் கூடுதல் செய்திகளுக்காக நாளிதழ்களை தொடர்ந்து வாங்குவர். அதனால் நாளிதழ்களின் விற்பனையும் கூட அதிகரிக்கும்” என்றார். செய்திகளை வழங்கிய ஏஜன்சிகளும் நாளிதழ்களுக்கு சாதகமாகவே இருந்தன. காரணம்
பி.பி.சி.யைத் தவிர வேறு வானொலிகள் செய்திகளை நியூஸ் ஏஜன்சிகளிடம் இருந்து வாங்குவதில்லை.

மாறாக ஏராளமான நாளிதழ்கள் அவர்களின் வாடிக்கையாளர்களாக
இருந்தனர். “இனால் செய்திகளுக்கு விலை மிக அதிகம் கொடுத்து வாங்க
வேண்டியிருந்ததாக” ஜான் ரீத் தனது சுய சரிதையில் கூறுகிறார். அந்த காலகட்டத்தில் மற்றும் ஒரு பிரச்சனையும் பி.பி.சி.க்கு இருந்தது. அதாவது செய்திகளை ஒலிபரப்பும் போது, இந்த செய்தியானது காப்புரிமை
செய்யப்பட்டது என வானொலி ஒலிபரப்பின் போதேக் கூறவேண்டும்.

இன்னும் தெளிவாக சொல்வதானால், “இந்த செய்தியானது ராய்டர், பிரஸ் அசோசியேசன், எக்ஸ்சேன்ஜ் டெலிகிராப் மற்றும் சென்ட்ரல் நியூஸ்
ஆகிய நிறுவனங்களின் காப்புரிமைக்கு பாத்தியப்பட்டது” என ஒவ்வொரு செய்தி அறிக்கையின் ஆரம்பத்திலும் முடிவிலும் கூறவேண்டியிருந்தது.
அன்றைய காலகட்டத்தில் செய்திகளை வானொலியில் ஒலிபரப்புவது ஒன்றும் அவ்வளவு எளிதானதாக இருந்துவிடவில்லை.

ஒரு பிரச்சனை முடிந்த பின் மீண்டும் ஒரு பிரச்சனை தலைத்தூக்கியது. ஆம், இனி பி.பி.சி.-யில் விளையாடடு செய்திகளை நேரடியாக ஒலிபரப்பக் கூடாது என்பது தான் அது. அதற்கும் பி.பி.சி. வளைந்து கொடுத்து சென்றது.
அதன் பின் 1926-ல் டெர்பியில் நடந்த ஒரு விளையாட்டுப் போட்டியை நேரடியாக ஒலிபரப்பியது. ஆனால் அந்த நேரடி ஒலிபரப்பு விசித்திரமாக இருந்தது. விளையாட்டு மைதானத்தில் இருந்த ரசிகர்கள் செய்த ஆரவாரமும் கைத்தட்டல்களுமே ஒலிபரப்பப்பட்டது. ஆனால் அந்த ஆரவாரம் எதற்கானது என்று அறிந்து கொள்ள நேயர்கள் அன்றைய இரவு பொது செய்தி அறிக்கை வரைக் காத்திருக்க வேண்டும்.

இப்படியெல்லாம் காத்திருந்து வானொலியைக் கேட்டுள்ளனர் அந்த கால பிரிட்டிஷ் மக்கள். இந்த பிரச்சனை முடிந்து ஆறுவதற்குள் மற்றும் ஒரு பிரச்சனையானது பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் பூதாகாரமானது. 1926 ஏப்ரல் 30, சுவாரஸ்யமான இசை நிகழ்ச்சி ஒன்றினை நேயர்கள் ரசித்துக்கொண்டு இருந்தனர். தீடிரென பாடலின் இடையே ஒரு அறிவிப்பு. அறிவிப்பு கொடுத்தவரின் குரல் அனைவருக்கும் பரிச்சியமாக இருந்தது.

பிரிட்டிஷ் சுரங்கத் தொழிளாலர்களின் வேலை நிறுத்தம் பற்றியது தான் அந்த பிளாஷ் நியூஸ். அந்த செய்தியனை வானொலியில் நேரடியாக அறிவித்தவர் வேறு யாருமல்ல, ஜான் ரீத். செய்தியை ஒலிபரப்பியது தான் தாமதம். அரசியல் கட்சிகள் சும்மா விடுமா என்ன? சர்ச்சில் தலைமையிலான அரசு எதிர்கட்சிகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திண்டாடியது.

அது தவறான செய்தி என ஆளுங்கட்சி வாதாடியது. அப்படி சொன்னதோடு மட்டுமல்லாமல் தற்பொழுது பி.பி.சி தவறான செய்திகளையும் ஒலிபரப்ப ஆரம்பித்து விட்டது என்றார்கள். எனவே பி.பி.சி இனி ‘பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கார்பரேசன்’ எனக்கூறுவதை விட ‘பிரிட்டிஷ் பால்ஸ்காட்டிங் கார்பரேசன்’ எனக் கூறலாம் என்றனர்.

அந்த வேலை நிறுத்தத்தின் நிறைவில் அந்த பிரச்சனையும் முடிவுக்கு வந்தது. அந்த செய்தியைப் பற்றி நாளிதழ்களும் பலவாறு செய்திகளை வெளியிட்டன. அன்றை பிரிட்டிஷ் பேரரசின் பிரதமர் ஸ்டான்லி பால்ட்வின் பி.பி.சி.-யைப் பாராட்டி கடிதம் ஒன்றை எழுதினார். அதில் அவர் கூறிய கருத்தின் சாராம்சம் இது தான், “பி.பி.சி. என்றுமே அரசுக்கு சாதகமாகவே செயல்பட்டு வந்துள்ளது.”

பெயர் மாற்றம் உலகின் எந்த மூலையில் இருந்தும் செய்திகளை பெற்று உடனுக்குடன் ஒலிபரப்பக் கூடிய திறனை 1927-ல் பெற்றது பி.பி.சி. 1927 ஜனவரி 1-ல் தனது பெயரிலும் ஒரு மாற்றத்தினை செய்தது பி.பி.சி. அது நாள் வரை பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கம்பெனி என அழைக்கப்பட்டு வந்த பி.பி.சி.யானது இனி பிரிட்டிஷ் புராட்காஸ்டிங் கார்ப்பரேசன் என அழைக்கப்படும் என அறிவித்தார் ஜான் ரீத்.

ஒரு குறிப்பிட்ட நிகழ்ச்சிக்கு மட்டுமே இயக்குனராக இருந்த ஜான் ரீத் அவர்களின் பதவியும் உயர்தப்பட்டு டைரக்டர் ஜெனரலாக பணியமர்தப்பட்டார். செய்தி அறிக்கைகளும் அதிகரிக்கப்பட்டன. செய்தி நிறுவனங்கள் மற்றும் நாளிதழ்களிடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தினை அடுத்து விளையாட்டு செய்திகள் நேரடியாக ஒலிபரப்பப்பட்டன.

அதுநாள் வரை அரசின் ஒரு சில கொள்கைகளில் பி.பி.சி.-க்கு உடன்பாடு இல்லாவிட்டாலும் அவற்றை ஆதரித்து வந்தது. ஆனால் அது உண்மை செய்திகளுக்கு உலை வைப்பதாகவே இருந்தது. இந்த பிரச்சனைகளுக்கு 1928-ல் ஒரு முடிவு கிடைத்தது. அது வரை அரசியல், தொழில் மற்றும் மதசார்ந்த செய்திகளுக்கு இருந்த கட்டுப்பாடு தளர்த்தப்பட்டது. 1929 அடுத்தக்கட்ட பயணத்திற்கு தயாரானது பி.பி.சி. ஆம் தொலைகாட்சியின் வரவு பி.பி.சி.-யை
வெகுவாக மாற்றும் என்று அவர்களே அன்றைய காலகட்டத்தில் நினைக்கவில்லை. தொழில்நுட்பமானது அசுர வேகத்தில் வளர்ச்சியடைந்தது.

1930
உலக நாடுகள் பலவும் சிற்றலையில் சீறிப்பாய்ந்த நேரமது. உலகையே தன் கைக்குள் வைத்திருந்த பிரிட்டிஸ் பேரரசு மட்டும் சும்மா இருக்குமா என்ன. அதுவும் அந்த காலகட்டத்தில் சிற்றலை ஒலிபரப்பின் வீச்சு அபாரமானதாக இருந்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை, சிற்றலைத் தொழில்நுட்பமானது தொலைதூர நாடுகளையும் சென்றடைவதாக இருந்தது. ஐரோப்பிய நாடுகள் பலவும் ஏற்றகனவே தனது சர்வதேச சிற்றலைச் சேவையை செய்யத் துவங்கியிருந்தன.

அப்படியிருக்க பேரரசு சும்மா இருக்குமா என்ன? பிரிட்டிஸ் அரசாங்கம் சிற்றலை வானொலியைத் தொடங்க அனுமதியளித்த அதே சமயத்தில் பிரிட்டிஸ் ஆட்சிக்குட்பட்ட நாடுகளும் இதற்கு ஆதரவு அளித்தன. 1927ல் நடைபெற்ற காலனிய கருத்தரங்கம் பி.பி.சி. ஆரம்பிக்க முழு மனதாக ஆதரவு வழங்கினாலும் அதற்கான பணத்தினை வழங்க யோசித்தது.

அப்படியே பணம் போட்டாலும் அந்த ஒலிபரப்பானது உலகம் முழுமைக்கும் கேட்குமா என்ற சந்தேகமும் இருக்கத்தான் செய்தது. குறிப்பாக அந்த ஒலிபரப்பானது காலனிய நாடுகளுக்கு கிடைக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்தது.

ஒரு காலை நேரத்தில் தனது வழக்கமான பணிகளுக்கு நடுவே ஒரு சிந்தனை தோன்றியது அவருக்கு. ஆம், பி.பி.சி-யின் முதல் இயக்குனராக பணியமர்த்தப்பட்ட சர் ஜான் ரீத் ஒரு முடிவுக்கு வந்தார். அவரது முடிவு ஒரு சிலருக்கு ஆச்சர்யத்தினை ஏற்படுத்தியது. ஆனால் ஒரு சிலர் அதனை வரவேற்றனர். அப்படி எடுக்கபட்ட முடிவு ஆண்டுகள் பல கடந்தும் இன்றும்
நடைமுறையில் உள்ளது ஆச்சர்யம் அளிக்கிறது. “பிரிட்டிஸ் ஆளுகைக்கு உட்பட்ட அனைவரும் வானொலி வைத்திருந்தால் ஆண்டிற்கு ஒரு முறை வரி செலுத்த வேண்டும். மேலும் பெறப்படும் அந்த வரியின் மூலமே பி.பி.சி ஒலிபரப்பிற்கு தேவையான செலவினங்களைப் பூர்த்தி செய்து கொள்ளவேண்டும்” என முடிவெடுக்கப்பட்டது.

ஜான் ரீத் ஒரு உறுதி மொழியையும் அப்பொழுது வழங்கினார். அதாவது, “பி.பி.சி-யின் நிகழ்ச்சிகள் அனைத்தும் உங்கள் அனைவரையும் தெளிவாக வந்தடையும். ஆனால் அதே சமயத்தில் அதில் ஒலிபரப்பாகும் அனைத்து நிகழ்ச்சிகளும் உங்களுக்கு பிடித்தமானதாக இருக்க வேண்டும் என்று எண்ணிவிட வேண்டாம்” என்று கண்டிப்பாக கூறினார். இது தான்
இன்றளவும் பி.பி.சி-யின் தனித்துவத்திற்கு காரணமாக இருக்கிறது. அரசாங்கம் பணம் கொடுக்கிறதே என்பதற்காக அரசாங்கம் செய்கின்றத் தவறுகளைச் சுட்டிக்காட்டத் தவறியதில்லை பி.பி.சி.

அவர் அவ்வாறு கூறியதற்கு காரணம் இல்லாமல் இல்லை, “பணம் கட்டி நிகழ்ச்சிகளை கேட்கும் எங்களுக்கு பிடித்தமான நிகழ்ச்சிகள் இல்லாத பட்சத்தில் நாங்கள் பணம் கட்ட முடியாது” என்று அங்கொன்றும் இங்கொன்றுமாக குரல்கள் ஒலித்தவண்ணம் இருந்தது. இதன் காரணமாக அவர் ஒரு சிலவற்றை மக்களுக்குத் தெளிவுப்படுத்த வேண்டி இருந்தது.
(தொடரும்..)

Sunday, February 19, 2012

சந்தைக்கு புதுசு

இந்த வாரம் முதல், சந்தையில் புதிதாக அறிமுகம் ஆகும் புதிய வானொலிகளைப் பற்றி விபரங்களை வெளியிட உள்ளோம். அனேகமாக, ஆர்வளர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும் என நம்புகிறோம்.
INQUIRE NOW
Digital Audio Broadcasting Radio with 300Hz to 20kHz Speaker Frequency and 0.6W Output Power 

FOB Price:  Get Product Price 

Shenzhen Xinhao Precise Groupware Co. Ltd 
 

ஒலி அலைகலைத் தேடி


வாய்ப்பு ஒரு முறைதான் கிடைக்கும். அந்த வாய்ப்பினை சரியான
வகையினில் பயன்படுத்திக் கொண்டால், அந்த அனுபவமானது நமது
நினைவுகளோடு தொடர்ந்து பயணிக்கும். இந்தியாவின் மெட்ரோபொலிட்டன் நகரங்களாக நான்கு நகரங்களைக் கூறுகிறோம். ஆனால் எனது அதிர்ஷ்டமோ முப்பது வயதிற்கு பிறகு தான் இந்தியத் தலைநகர் உட்பட நான்கு மெட்ரோபொலிட்டன் நகரங்களைப் பார்ப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த வாய்ப்பும் நிறைய நண்பர்களுக்கு கிடைப்பதில்லை.

இன்னும் நமது தமிழகத்தின் தலைநகரான சென்னையைக் கூட நேரில் சென்று பார்க்க இயலாதவர்கள் பலர் உள்ளனர். அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஒவ்வொருவருக்கும் சூழ்நிலை பல்வேறு வகைகளில் விளையாட்டு காட்டுகிறது. அந்த வாய்ப்பு கிடைக்காதவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு விதத்தில் அந்த இடங்களுக்கு செல்லாமலேயே, அங்கு சென்று வந்த அனுபவத்தினை ஏற்படுத்தும். அந்த நோக்கத்திலேயே இந்த மாத ஒலி
அலைகளைத் தேடி உங்களை நாடிவருகிறது.

வானில் செல்லும் விமானங்களைப் பார்க்கும் பொழுது, பொதுவாக நம் எல்லோறுக்கும் என்னத் தோன்றுமோ, அதுவே தான் எனக்கும் தோன்றியது. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போன்று, இன்று விமானத்தில் செல்வது ஒன்றும் குதிரைக் கொம்பான காரியம் இல்லை. நமது சொந்த பணத்திலேயே விமான டிக்கெட் எடுத்து இன்று விமானத்தில் செல்வது சாத்தியமாகியுள்ளது. அந்த வகையில் எனது முதல் விமானப் பயணம் சென்னையில இருந்து புது தில்லிக்கு செல்வதாக அமைந்தது.

சென்னை விமான நிலையத்திற்கு பலமுறை நண்பர்களையும் உறவினர்களையும் வழியனுப்பவும், வரவேற்கவும் சென்று வந்துள்ளேன். ஒரு கட்டத்தில், என்று நான் விமானத்தில் பயணம் செய்கிறேனோ, அப்பொழுது தான் விமான நிலையத்தின் வாசலை மிதிப்பேன், அதுவரை, அந்த வழியாக போனால் கூடப் பார்க்கக்கூடாது என்று மனதளவில்
சபதம் ஏற்றதுண்டு. ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை என்பது வேறுவிஷயம்.

ஆனால் இந்த முறை நான் பயணம் செய்வதற்காக விமான நிலையத்திற்கு உள்ளே நுழைகிறேன்; என்றபோது சற்றே மகிழ்வாக இருந்தேன் என்பதை மறைக்கக்கூடாது. பொதுவாக விமானப் பயணத்திற்கான திட்டமிடல் மிகப்பெரிதாக இருந்த காலமெல்லாம் சென்றுவிட்டது. உங்களிடம் இணையத்தொடர்புடன் கூடிய கைப்பேசி இருந்தாலே விமான டிக்கெட்டை எடுத்துக் கொள்ளலாம். அந்த அளவிற்கு எளிமையாகி விட்டது.

எனது விமான டிக்கெட்டும் அப்படியே எடுக்கப்பட்டது தான். அதாவது நாளை மதியம் புறப்படும் விமானத்திற்கு இன்று மதியம் டிக்கெட்டை எடுக்கிறேன். அதுவும் மிகக் குறைந்த கட்டணத்தை எந்த நிறுவனம் கொடுக்கிறதோ அந்த விமானத்தில் டிக்கெட் எடுத்துக் கொள்வதற்கும் வாய்ப்பினை வழங்குகிறது இணையம். இன்னும் சொல்லப்போனால், நமக்கு விமானத்தினில் எந்த சீட் வேண்டும், விமானத்தினில் எந்த வகையான உணவு வேண்டும் என்பதனைக்கூட முன் கூட்டியே பதிவுசெய்துகொள்ளும் வசதிகள் வந்துவிட்டன.

நான் புது தில்லி செல்ல தேர்வு செய்த விமான நிறுவனத்தின் பெயர் ஸ்பைஸ் ஜெட். “மிளகாய் வேகம்” எனத் தூயத் தமிழில் சொல்லலாமா? இவர்களைத் தேர்வு செய்யக் காரணம் மற்ற நிறுவனங்களை விட ஸ்பைஸ் ஜெட் குறைந்த கட்டணத்தினில் டிக்கெட்டினை வழங்கியது. பயணத்தின் முதல் நாளில் புக் செய்த டிக்கெட் என்பதனால் ரூ. 6050 என டிக்கெட் வழங்கப்பட்டது. இதனையே மூன்று மாதத்திற்கு முன் முன்பதிவு செய்திருந்தால் ரூ.3000-க்கும் குறைவாகவே டிக்கெட்டினை எடுத்திருக்கலாம்.

இங்கு இன்னும் ஒன்றையும் கூறியாக வேண்டும். நான் பயணம் செய்யத்
தேர்வு செய்த விமானம் சன் டி.வி குழுமத்திற்கு சொந்தமானது ஆகும்.
எனது பயணத்திட்டமானது ஒரு நாளுக்கு முன்னதாகத் தான்
முடிவானது. காரணம் எங்களது பல்கலைக்கழகம் இந்தியா முழுவதும்
இளங்களை மற்றும் முதுகலைத் தேர்வுகளை நடத்தி வருகிறது. அங்கே தேர்வு நடக்கும் இடங்களைப் பார்ப்பதற்காக எங்களைப் போன்ற துணை பேராசிரியர்களை “பறக்கும் படை” அதிகாரிகளாக நியமித்து இருந்தது.

கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) இல்லாமலேயே உள்நாட்டு விமானங்களில் பயணிக்கலாம். இருந்தாலும் அடையாளத்திற்காக கடவுச்சீட்டினை எடுத்துக்கொண்டு 11.30 விமானத்திற்கு 10.30-க்கு சென்னை காமராஜர் உள்நாட்டு விமான முனையத்திற்கு சென்றேன். கட்டுமானப்பணிகள் நடைபெறுவதால் வழக்கமான பாதைகள் மாற்றி அமைக்கப்பட்டு
இருந்தன. உள்ளே செல்லும் முன் எனது விமான டிக்கெட் மற்றும் அடையாள அட்டை சோதிக்கப்பட்டது.

தற்பொழுது விமான டிக்கெட் என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தது போன்ற புத்தகமாக இல்லை. சாதாரண ஏ4 தாளில் பிரின்ட் எடுக்கப்பட்டது. நமது ரயில் பயணத்திற்கு இணையத்தில் பதிவு செய்தால் எப்படி டிக்கெட்டை பிரின்ட் எடுக்கிறோமோ, அதே வடிவில் தான் இந்த டிக்கெட்டும் உள்ளது.
விமான நிலையத்தில் நாளிதழ்களும், பத்திரிகைகளும் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருந்தது.

வேண்டியவற்கள் எடுத்து படித்துக் கொள்ளலாம். எனது சோல்டர் பேக் தவிர மற்றவற்றை குறிப்பிட்ட விமான நிறுவனத்தின் கவுண்டரில் ஒப்படைத்துவிட வேண்டும். அவை நேரடியாக நாம் செல்லும் விமானத்திற்கு சென்றுவிடும். நான் ஏறவேண்டிய விமானத்திற்கு இன்னும் ஒரு மணி நேரம் இருந்ததால், விமான நிலையத்தினுல் ஒரு நடை போட்டேன்.

அங்கு விற்கும் பொருட்கள் எதனையும் நம்மைப் போன்ற நடுத்தர மக்கள் வாங்கக்கூடிய விலையில் இல்லை. வெருமனே நோட்டம் விட்டேன்.
விமானம் புறப்பட வேண்டிய நேரமான 11.30 ஆகியும், எந்த அறிவிப்பும் இல்லை. எனவே மனதளவில் சிறிது பயம் தொற்றிக்கொண்டது. விமான நிலையத்தினில் வைக்கப்பட்ட தொலைக்காட்ச்சியில் பதிவு செய்யப்பட்ட என்.டி.டி.வி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வந்தது.

எனது காதுகளைக் கூர்மையாக்கிக் கொண்டு ஏதேனும் அறிவிப்பு கொடுக்கப்படுகிறதா என கவனித்தேன். ஆனால் எந்த அறிவிப்பும் இல்லை.
அறிவிப்பு ஏதும் இல்லாததால் நேரடியாக ஸ்பைஸ் ஜெட் உதவியாளர் நின்ற இடத்திற்கு சென்று காரணத்தினை விசாரித்தேன். குழைவான ஆங்கில வார்த்தைகள் அவரது குரலில் இருந்து வழுக்கி விழுந்தன. இன்னும் பத்து நிமிடத்தில் விமானம் வந்துவிடும் எனக் கூறியப்பின்னரே மனநிம்மதி அடைந்தேன்.

விமானம் வரும் வரை சற்றே பின்னோக்கி செல்வோம்….ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கொல்கத்தாவிற்கு சென்றதை இதே ஒலி அலைகளைத் தேடியில் எழுதியுள்ளேன். அதுவே எனது மெட்ரே நகர பயணங்களில் சென்னையை அடுத்த பெரிய நகரம். புது தில்லி மற்றும்
மும்பை நகரங்களுக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைப்பதற்கு அடுத்த ஐந்து ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று.

பல்கலைக்கழக பணியில் அமர்ந்த பின் ஒரு வருடத்தில் மும்பை, புனே, அஹமதாபாத், காந்தி நகர், விஜயவாடா, புது தில்லி, சண்டிகர், டேராடூன் மற்றும் ஹரித்துவார் போன்ற நகரங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. இது பி.பி.சி-யில் இருந்த போது கிடைக்கவில்லை. எனவே தான் கூறினேன், வாய்ப்பு கிடைக்கும் போது சரியான வகையில் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். பயன்படுத்திக் கொண்டேன்.

விமான நிலையத்தில் உள்ள ஒலி பெருக்கி ஸ்பைஸ் ஜெட் எனக் கூறக் கேட்டு கனவு உலகில் இருந்து மீண்டு வந்தேன். புது தில்லி செல்ல உள்ள ஸ்பைஸ் ஜெட் விமானம் வந்து விட்டதாகவும், அதில் செல்ல உள்ளவர்கள் செல்லும் வழியையும் அறிவித்துக் கொண்டு இருந்தனர். அவர் குறிப்பிட்ட அந்த வழியில் சென்ற போது எனக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. வாயிலில் நின்ற காவலாளி என்னை உள்ளே அனுமதிக்க மறுத்துவிட்டார். அதற்கான காரணத்தினை அவர் கூறியபோது தான் அறிந்தேன் என்னுடையத் தவறினை.
(தொடரும்…)

Saturday, February 18, 2012

டி. எக்ஸ் போட்டி – 2012


யுனஸ்கோவினால் முதலாவது உலக வானொலி நாள் இந்த வருடம் முதல் கொண்டாடப்படுகிறது. அதனை ஒட்டி இந்த ஆண்டிற்கான டி.எக்ஸ் போட்டியை நடத்துகிறது ஆர்டிக் டி.எக்ஸ் கிளப். போட்டியில் கலந்துகொள்ளும் ஒவ்வொருவருக்கும் அகில இந்திய வானொலியின் சிறப்பு வண்ண அட்டை மற்றும் ஞானவாணி-யின் முத்திரை பதிக்கப்பட்ட பெனண்ட்டும் அனுப்பி வைக்கப்படும். 

போட்டிக்கான கேள்விகள் இதோ.

1. டந்த 31 ஜனவரி 2011-டன் தனது சிற்றலை ஒலிபரப்பினை நிறுத்திக் கொண்ட வானொலி எது?
a) Radio Afghanistan, b) Radio Bulgaria, c) DW d) RNZI.


2. தனது 70-வது ஆண்டு விழாவினை 2011-ஆம் ஆண்டில் கொண்டாடிய வானொலி எது?
a) AIR, b) NHK, c) CRI, d) BBS.


3. சோமாலியாவில் இருந்து ஒலிபரப்பி வரும் கீழ்கண்ட ஒரு வானொலி தனது ஒலிபரப்பினை 2012-ல் நிறுத்திக்கொள்வதாக அறிவித்துள்ளது. அது எந்த வானொலி?
a) Radio Mogadishu, b) Radio Al-Furqaan, c) Radio Horn Afrik, d) Radio Bar Kulan.


4. ரேடியோ மயாமி இண்டர்நேசனல் கடந்த 7 ஜனவரி 2012 அன்று எந்த இடத்தில் இருந்து சோதனை ஒலிபரப்பினைச் செய்தது?
a) USA, b) Madagascar, c) Costa Rica, d)Guam.


5. தென் ஆப்பிரிக்க அமெச்சூர் ரேடியோ லீக் 1730 யுடிசி-யில்  4895 அலை எண்களில் எந்த ஒலிபரப்பு தளத்தில் இருந்து தனது சேவையைச் செய்கிறது?
a) Meyerton,  b)Sitkunai, c) Shepparton, d) Tinian.


6. தெற்கு பசுபிக் பெருங்கடலில் அமைந்துளள இரண்டு நாடுகள் தனது நாட்டின் நேரத்தினை சமீபத்தில் மாற்றின. அவை எந்த நாடுகள்?
a) Samoa and Tokelau, b) Tokelau and Vanuatu, c) Samoa and Nauru, d) Norfolk and Samoa.


7. மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தனது ஒலிபரப்பினைத் தொடங்கிய உகாண்டா நாட்டு வானொலியின் பெயர் என்ன?
a) Radio podillia Tsentr, b) Radio Skifia Tsentr, c) Radio Tavira, d) Radio Dunamis.


8. இந்தியாவில்ஹாம் திருவிழா 2011” எந்த நகரத்தில் நடைபெற்றது?
a) Bangalore, b) Kochi, c) Pollachi, d) Chennai.


9. எலக்ட்ரானிக் டி.எக்ஸ் பிரஸ் எத்தனையாவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறது?
a). 15, b) 14, c) 16, d) 17.


10. எட்டாவது அகில உலக சிற்றலை ஒருங்கிணைப்பு கருத்தரங்கம் எந்த இடத்தில் நடைபெற்றது?
a) New Delhi, b) Johannesburg, c) Kuala Lumpur, d) Tokyo.


11. சமீபத்தில் 3டி வண்ண அட்டையை வெளியிட்ட வானொலி எது?
a) BBC, b) VOA, c) RNW, d) NHK.


12. ஆகாஷ்வாணி சுமங் லீலா திருவிழா எந்த நகரத்தில் நடைபெற்றது?
a) Imphal, b) Leah, c) Imphala, d) Mumbai.


13. காரில் பொருத்தக் கூடிய டி.ஆர்.எம். வானொலியை அறிமுகப்படுத்திய நிறுவனம் எது?
a) Philips, b) Delphi, c) Sony, d) Himalaya.


14. பாப்காக் இண்டர்நேசனல் குழுமம் கீழ்கண்ட எந்த வானொலியோடு தொடர்பு கொண்டது?
a) BBC, b) IBB, c) RNZI, d) BBG.


15. ரேடியோ ரோமேனியா இண்டர்நேசனல் எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?
a) 1 Dec 1930, b) 1 Nov 1928, c) 1 Oct 1928, d0 1 Dec 1930.


16. உலகின் முதல் சக்தி வாய்ந்த ஒலிபரப்பு எந்த ஆண்டு, எந்த அலைவரிசையில் தொடங்கப்பட்டது?
a) 1950-7160, b) 1951-7200, c) 1951-7670, d) 1950-7670.


17. ரேடியோ சின்ஹுவா எந்த நாட்டில் இருந்து ஒலிபரப்பாகிறது?
a)Taiwan, b)Japan, c) China, d) Mangolia.


18. ”ஓ ஹோலி நைட்” எதனோடு தொடர்பு உடையது?
a) BVB, b) Marconi, c) WYFR, d) Reginald Fessenden.


19. இந்திய டி.எக்ஸ். கிளப் இண்டர்நேசனல் 2012 ஆண்டிற்கான டி.எக்ஸ். பெடிசனை எந்த மாநிலத்தில் நடத்தியது?
a) Orissa, b) West Bengal, c) Tamil Nadu, d) Assam.


20. கேரிபீரிட் எதனோடு தொடர்புடையவர்?
a) K9AY, b) DX program, c) Broadcaster, d) QSL Collector.


21. எந்தத் தமிழ் வானொலிக்கு ’வானொலி 6’ என்றப் பெயர் வழங்கப்பட்டது?
a) RTVM, b) SLBC, c) BBC, d) CRI.


22. உலக வானொலி நாள் யுனஸ்கோ-வினால் எந்த தேதியில் கொண்டாடபடுகிறது?
a) 13 March, b) 13 January, c) 13 February, d) 13 December.


23. கீழ்கண்ட முத்திரை, எந்த சர்வதேச வானொலியோடு தொடர்புகொண்டது?














a) VOA, b) RCI, c) ABC, d) BBC.

24. கீழ்கண்ட வண்ண அட்டையை அனுப்பிய வானொலி எது?







a) SLBC, b) AIR, c) Radio Botswana, d) Bangladesh Betar.


25. பி.சி.டி.எக்ஸ்.நெட்-டை சமீப காலமாக ஒருங்கிணைத்து ஒலிபரப்பி வருபவர் யார்?
a) VU2FOT, b) VU3SIO, c) VU3BGK, d) 4S7VK.


போட்டிக்கான நிபந்தனைகள்:
  1. விடைகள் 31 மார்ச் 2012-ற்கு முன் கீழ்கண்ட முகவரியை வந்தடைய வேண்டும்.
  2. விடையுடன் ஏதேனும் ஒரு அகில இந்திய வானொலியின் ஒலிபரப்பினைக் கேட்டு, அதற்கான நிகழ்ச்சி தர அட்டவணையை அனுப்ப வேண்டும்.
  3. நிகழ்ச்சி தர அட்டவணையில், வானொலி நிலையத்தின் ஊர், ஒலிபரப்பினை கேட்ட நாள், இந்திய நேரம், அலை எண், நிகழ்ச்சியின் விபரம், ஒலிபரப்பின் தரம் ஆகியவற்றை மறவாமல் எழுத வேண்டும்.
  4. விடைகளுடன், எதேனும் ஒரு சர்வதேச வானொலி அனுப்பிய வண்ண அட்டை ஒன்றைக் கண்டிப்பாக இணைக்க வேண்டும்.
  5. அத்துடன் எதேனும் ஒரு சர்வதேச வானொலி அனுப்பிய ஸ்டிக்கர் ஒன்றையும் இணைக்க வேண்டும்.
  6. போட்டியின் நுழைவுக் கட்டணமாக இந்திய நேயர்கள் ரூ.25/-ற்கான தபால் தலைகளை இணைப்பது அவசியம்.
  7. வெளிநாட்டு நேயர்கள் இரண்டு ஐ.ஆர்.சி. அல்லது இரண்டு அமெரிக்க டாலரை நுழைவுக் கட்டணமாக இணைப்பது அவசியம்.
  8. போட்டிக்கான விடைகளை அனுப்ப வேண்டிய முகவரி:
த. ஜெய்சக்திவேல்,
ஞானவாணி 105.6 எப்.எம்,
தொடர்பியல் துறை,
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்,
திருநெல்வேலி – 627 012.

போட்டிக்கான அனுசரனையாளர்கள்:




பத்திரிகைகளில் வானொலி



  • விகடன் வரவேற்பறை: தமிழ் அலைவரிசை – ஆனந்த விகடன், ப47, 17 ஆகஸ்டு 2011 | 
  • ஒரு சங்க முழக்கம் – புதிய தலைமுறை, ப44, 28 ஜூலை 2011 | 
  • எப்.எம் ஏஞ்சல்ஸ் – மங்கையர் மலர், ப20, ஜூன் 2011 | 
  • வானொலி: நாடக உலகின் வாடா மலர் சுகி. சுப்பிரமணியம் - தினமணி, ப6, 21 ஆகஸ்டு 2011 | 
  • ஹலோ எப்.எம் 106.4ன் சிறந்த மனிதர் யார்? -தினத்தந்தி, ப24, 31 டிசம்பர் 2011 |
  • ஹலோ எப்.எம். 2010 பட்டம் யாருக்கு? - தினத்தந்தி, ப8, டிசம்பர் 2011
  • ரேடியோ மிர்ச்சி: பறந்து போன மதுரை மாப்பு…- என் விகடன், ஆனந்த விகடன், 3 மார்ச் 2011 | 
  • ஹலோ எப்.எம்-மின் நான்கு முழு பக்க விளம்பரங்கள் – ஆனந்த விகடன், 16 மார்ச் 2011 | 
  • மூங்கில் மூச்சு: இலங்கை வானொலி பற்றிய கட்டுரை – ஆனந்த விகடன், ப46, 9 மார்ச் 2011
  • ஹலோ தமிழா: இரண்டு முழு பக்க விளம்பரம் - ஆனந்த விகடன், ப26, 30 மார்ச் 2011 |
  • அகில இந்திய வானொலி அலுவலர் சங்க மாநாடு – தினகரன், ப18, 27 பிப்ரவரி 2011 |
  • பல்லாங்குழி ரகசியம் – என் விகடன், ஆனந்த விகடன், ப123, 9 மார்ச் 2011 | 
  • பேச்சுதான் என் மூச்சு - என் விகடன், ஆனந்த விகடன், ப122, 9 மார்ச் 2011 | 
  • நெல்லை படிப்பு பார்ட்டி - என் விகடன், ஆனந்த விகடன், ப124, 16 மார்ச் 2011 | 
  • அஞ்சறை பெட்டி: இரண்டு முழு பக்க விளம்பரம் - என் விகடன், ஆனந்த விகடன், ப26, 6 ஏப்ரல் 2011 | 
  • ரேடியோ மிர்ச்சி: கோலி சோடா “பொய் சொல்லுங்க சார்” - என் விகடன், ஆனந்த விகடன், ப117, 27 ஏப்ரல் 2011 |
  • சூரியன் எப்.எம்: யாழ் சுதாகர் “துன்பம் துறந்தவன் நான்” - ஆனந்த விகடன், ப28, 20 ஏப்ரல் 2011 | 
  • பிபிசி என்பதன் விரிவாக்கம் என்ன? போட்டி - மங்கையர் மலர், ப288, பிப்ரவரி 2011 |
  • ஹலோ எப்.எம்: சம்பளத்தை கடவுள்கிட்டே கேளுங்க - என் விகடன், ஆனந்த விகடன், ப128, 30 மார்ச் 2011 | 
  • ஹலோ எப்.எம்: கவிப்பேரரசுவின் 30 ஆண்டு முத்துக்கள் (விளம்பரம்) - ஆனந்த விகடன், 27 ஜூலை 2011 | 
  • ரெக்கார்டு கலெக்ஷன் - என் விகடன், ஆனந்த விகடன், ப125, 10 ஆகஸ்ட் 2011 | 
  • ஹலோ எப்.எம்: சுடிதார் நாட்டாமை - என் விகடன் (கோவை), ஆனந்த விகடன், ப130, 16 மார்ச் 2011 | 
  • ரேடியோ மிர்ச்சி: கோவை அலார பார்ட்டி - என் விகடன் (கோவை), ஆனந்த விகடன், ப130, 16 மார்ச் 2011 | 
  • ரேடியோ மிர்ச்சி: குட்டி குஷ்பு - என் விகடன் (கோவை), ஆனந்த விகடன், ப131, 16 மார்ச் 2011 | 
  • ஹலோ எப்.எம்: படிங்க ப்ளூ கலர் பிட்டு…பிடிங்க ஹலோ எப்.எம் - என் விகடன் கிப்ட்டு - என் விகடன் (கோவை), ஆனந்த விகடன், ப103, 15 ஜøன் 2011 | 
  • ஹலோ எப்.எம்: கோவை வாலுப் பையன் - என் விகடன் (கோவை), ஆனந்த விகடன், ப125, 2 மார்ச் 2011

நேயரின் பார்வையில்


பிற்பகல் 2 மணியிருக்கும், தொலைபேசி மணி ஒலித்தது. எதிர் முனையில்
பேசியவரின் குரல் பரிச்சியமானதாக இருந்தது. ஆனால் யார் என ஊகிக்க
முடியவில்லை. அவர் கூறியதை வைத்து பிற்பாடு அவர் யார் என்பதை அறிந்து கொண்டேன். “டி.எக்ஸ் போட்டி 2011-ல் உங்களுக்கு ரேடியோ ப்ஃரீ ஆசியா வழங்கும் வானொலிப் பெட்டி பரிசாக கிடைத்துள்ளது.

அந்தப் பரிசினைத் தபாலில் அனுப்புவதால் உடைய வாய்ப்பு இருக்கிறது. ஆகவே நாளை எடப்பாடி திரு. கே.சி. சிவராஜ் அவர்களின் இல்லத் திருமணத்தில் கலந்து கொள்ள வரவுள்ளேன். தாங்கள் எடப்பாடி வர முடியுமா?” என்று கேட்ட அந்த குரலுக்கு சொந்தக்காரர் வேறு யாருமல்ல, இந்த இதழின் ஆசிரியர் தான்.

நான் கைத்தறி தொழில் செய்து வருகிறேன். தொழில் சுமைக் காரணமாக எடப்பாடி செல்ல இயலாத நிலை. இருப்பினும் ஜெய்சக்திவேலை நேரில் சந்திக்கும் வாய்ப்பினை நான் இழக்க விரும்பவில்லை. எனவே அந்த
வாய்ப்பினைப் பயன்படுத்தி நானும் எனது மகனுமான சுதர்ஸனும் பவானி
வழியாக எடப்பாடி சென்றோம்.

ஒரு காப்பி ஷாப்பில் வைத்து எங்களது முதல் சந்திப்பு நடந்தது. வானொலி நேயர்களை முதல் முறையாக சந்திப்பதே ஒரு
மகிழ்ச்சியான தருனம் தான். அதுவும் ஒரு போட்டியில் வென்று சந்திப்பது என்பது இன்னும் மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஒரு வானொலி நிலையம் வழங்கிய வானொலிப் பெட்டியை அதுவும் போட்டியில் கலந்து கொண்டு வாங்குவது இதுவே முதல் முறை. ரேடியோ ப்ஃரீ ஆசியா முத்திரையுடன் கூடிய அந்த வானொலிப் பெட்டி உண்மையிலே எங்களின் மனதினைக் கவர்ந்தது. அதன் பின் நெரிஞ்சிப்பேட்டையில் ஒரு முக்கியமான வானொலி சேகரிப்பாளரை சந்திக்கப்போவதாகவும் வரநேரமிருந்தால் வரலாம் எனவும் கூறியது தான் தாமதன்,
நாங்களும் தயாரானோம்.

எனவே முதலில் எடப்பாடியில் இருந்து முதலில் பூலாம்பட்டிக்குச் சென்று அங்கு இருந்து மறுகரையில் உள்ள நெரிஞ்சிப்பேட்டைக்கு படகில் சென்றோம். உண்மையிலேயே அது மறக்க முடியாத படகுப் பயணமாக இருந்தது. படகில் பயணம் செய்தல் எனக்கு மிகவும் பிடிக்கும். அதுவும் வானொலி நேயரைச் சந்திக்க இன்னுமொரு வானொலி நேயரோடு என்றால் சொல்லவா வேண்டும். சுதர்ஸன் பல்வேறு
கோணங்களில் புகைப்படம் எடுத்தபடி வந்தான்.

நிச்சயமாக அந்த நிகழ்வுகளை தக்க தருனத்தில் புகைப்படம் எடுத்த சுதர்ஸனை பாராட்டியே ஆகவேண்டும். மறுகரையில் எங்களுக்காக திரு. ஜெகதீஸ்வரன் காத்திருந்தார். அவரது வீடு செல்லும் வரை அவரும் ஒரு வழக்கமான வானொலி நேயராக மட்டுமே இருப்பார் என்பது பொய்த்துப்போனது. காரணம் அவரரின் வால்வு ரேடியோ கலெக்சன் பிரம்மிக்க வைத்தது. சர்தேச வானொலி நேயராக மட்டுமல்லாமல் பல்வேறு பட்ட வானொலிப் பெட்டிகளை வாங்கி சேகரித்தும் வருகிறார்கள். அவரது வீடு மிக அழகான சூழலில் தோட்டத்திற்கு மையத்தில் அமைந்து இருந்தது மனதிற்கு ஒரு விதமான சந்தோஷத்தினை கொடுத்தது.

பொதுவாக இதுபோன்ற தோட்டத்தில் அமைந்துள்ள வீடுகளில் வளர்ப்பு பிரானிகளை வளர்த்து வருவர். ஆனால் இவரது வீட்டில் அப்படியொன்றும் இல்லையே என சுற்றும் முற்றும் பார்த்தோம். ஒரு மூலையில் ஈனச்சுவரத்தில் ஒரு நாய் உளைத்துக்கொண்டு இருந்தது. இதனை நாய் என்று சொன்னால் நிச்சயம் திரு.ஜெகதீஸ்வரன் கோபித்துக்கொள்வார்.
காரணம் அவரது வீட்டில் அதுவும் ஒரு குடும்ப உறுப்பினராகே இருந்து வந்தது. சமீபத்தில் அது ஏதோ தவறுதாலாக தின்று விட்டதால், உடல் நலிந்து காணப்பட்டது.

 இன்னும் ஒன்றையும் இங்கு குறிப்பிட்டு ஆகவேண்டும். திரு.ஜெகதீஸ்வரன் வானொலி பெட்டிகள் மட்டுமல்லாது பல்வேறு நாடுகளின் ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்களையும் திரட்டி வருகிறார். சில ஞாபகங்கள் மனதில் இருந்து அகல மறுக்கும்.

அதற்குக் காரணம் அந்த நினைவுகள் நம் மனதின் ஆழத்தினில் இயற்கையாகவே பதிந்து விடும். அன்றை தின மதிய உணவானது அவரது இயற்கை சூழ்ந்த வீட்டில் அவர்களது துணைவியாரால் இன்முகத்துடன் பரிமாரப்பட்டது.

அந்த இனிய சந்திப்பு இன்றும் பல்வேறு எண்ண ஓட்டங்களை மனதில் ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையில்லை. வானொலி என்ற ஒன்று ஒரு பொழுது போக்கு ஊடகம் மட்டுமல்ல, அது பல்வேறு நண்பர்களையும் நமக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த நண்பர்கள் மூலம் நமக்கு கிடைக்கும் தகவல்கள் எங்கும் காணக்கிடைக்காத ஒன்று.

எங்கள் சந்திப்பு மாலையில் நிறைவடைந்து பிரியா விடைபெற்றோம். சந்திப்பில் மறக்க முடியாத பல சம்பவங்கள் நடந்தன. ஆனால் அவை அனைத்தினையும் ஒருசேர இங்கு பதிவுசெய்ய முடியாது. விடைபெற்று வாசலுக்கு வெளியே வரும் போது, அந்த நாயின் இருமல் அதிகமாகி இருந்தது மனதினை ஏதோ செய்தது. காரணம் அது அவர் வீட்டில் நாயாக  வளர்க்கப்படவில்லை. - என்.டி. சண்முகம்
(கட்டுரை ஆசிரியரைத் தொடர்பு கொள்ள 8883461856. கட்டுரை ஆக்கத்தில் உதவி ச. சுதர்ஷன்)

பிரசார் பாரதி அமைப்பிற்கு புதிய தலைவர்

பிரசார் பாரதி அமைப்பிற்கு புதிய தலைவராக மேற்கு வங்காளத்தினைச் சார்ந்த திரு. ஜவஹர் சிர்கார் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் தலைவர் லாலி காமன்வெல்த் ஊழல் வழக்கில் பெயர் சேர்கப்பட்டுள்ளதால், அவரது பதவி பறிக்கப்பட்டது. மூன்று நபர்கள் கொண்ட தேர்வு கமிட்டி தற்பொழுது ஜவஹர் சிர்கார் அவர்களை குடியரசுத் தலைவருக்கு பறிந்துறைத்ததன் பேரில் இவர் நியமிக்கப்பட்டுள்ளார். அரசின் பொதுத்துறை ஊடகமான அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷானுக்கு இவர் தலைவராக இருப்பார்.

Wednesday, February 15, 2012

பிபிசி மன்னிப்பு கேட்டது

பிபிசி மன்னிப்பு கேட்டது

மலேசியா தொடர்பான ஒரு செய்தியை 2009ல் ஒலிபரப்பியதற்காக பிபிசி சமீபத்தில் மன்னிப்பு கேட்டது.
அந்த செய்தியானது மலேசிய நிறுவனத்தினை விளம்பர படுத்துவதாக அமைந்துவிட்டதாக பிபிசி வோல்டு வைடு மன்னிப்பு கேட்டுள்ளது. குறிப்பிட்ட அந்த நிகழ்ச்சியானது ஒரு தனியார் நிறுவனத்தினால் தாயாரிக்கப்பட்டு, பிபிசி வோல்டு தொலைக்காட்சியில் ஒலிபரப்பப்பட்டது.
 

Monday, February 13, 2012

71-year-old cheers the radio on

Prof. V. Balasubramanian, an ardent listener of foreign radio stations tunes his valve radio. 	— DC
Prof. V. Balasubramanian, an ardent listener of foreign radio stations tunes his valve radio. — DC
When John F. Kennedy was assassinated in Texas, Prof. V. Balasubramanian knew about it in a few minutes sitting in Chennai thanks to his Murphy valve radio to which he has been glued for the last six decades.
Prof. Balasubramanian has been an avid radio listener who has a collection of over 5,000 cassettes with recordings for over three decades.
DC spoke to Prof. Balasubramanian on the occasion of World Radio Day (February 13). It was his hobby that helped the 71-year-old Mr Balasubramanian get his first pen-friend abroad. "I befriended Mr Ronald James from New Zealand through Radio Australia's mailbag programme," said Balu Sir as he is fondly called in the radio listeners' circle.
Attributing his desire to develop an English vocabulary as his main reason behind tuning into stations like British Broadcasting Corporation (BBC) and Voice of America (VOA), Prof. Balasubramanian said that during 1950s, it was not possible to get an English magazine in Chennai so with no other option left, he had tuned into foreign radios.
"We use to listen to the West Indies-Australia match commentary on BBC during 1960s at our college hostel and note down the scores for debating about it in our free time," Prof. Balasubramanian, a 1959 batch Mechanical Engineering student of the prestigious College of Engineering, Guindy.
Reminiscing incidents like the murder of Mahatma Gandhi, John F. Kennedy and man's first landing on the moon as the most memorable events he has heard on the radio, he said that there were many such incidents, which he could associate with radio.
"When my mother fell sick I could not listen to my favourite shows on air so I started recording programmes on my tape recorder. This habit continues even today," added Prof. Balasubramanian, who was the head of the department in a private polytechnic college in the city.
"With the advent of satellite radios and difficulty in maintenance of short wave transmitters combined with lack of funding for radio stations the hobby is slowing dying," he complained.
 

Monday, February 06, 2012

DX Quiz - 2012


In 2012 the Ardic DX Club celebrates its 14th anniversary. For 14 years it has been the primary source of information for dxing enthusiasts all over the Tamil Nadu, India . In order to celebrate this event, a quiz is being organised. The quiz is open to anyone, regardless of location or club membership. The quiz does not solely deal with Tamil Dxing, but covers very different radio aspects. Answering 25 questions and you can show your radio knowledge. No quiz without prizes of course. And to make the contest interesting to everybody, a few prizes will be given anomaly to entrants. So if the questions look hard, participate anyway.

Schedule: Quiz starts from 6 February 2012, Last date for the entry 31 March 2012.

Quiz Questions published in the official website http://dxquiz.wordpress.com/


Send your answers to

 

T.Jaisakthivel,

Radio World / Gyanvani FM,

Assistant Professor,

Department of Communication,

MS University, Abishekapatti,

Tirunelveli – 627 012,

Tamil Nadu , India .

 

Every entry will get the special pennant in the memory of the third anniversary of Gyanvani FM 105.6 – Tiruneveli. Every entry must send one reception report of any frequency of All India Radio for the 72nd anniversary special QSL. Indian listeners must send Rs.25/- mint stamp for postage and International listeners must send 2 IRC or 2 US $. Those who are send US dollars; kindly send it only by register post. Otherwise it will be theft and the ADXC were not take the responsibility of your US $.

(Jaisakthivel, ADXC, India )