Thursday, July 04, 2013

தந்தியடிக்கிறது தந்தி – 5

ஜூலை 15ல் தந்தி சேவை நிறுத்தம்: பி.எஸ்.என்.எல். அறிவிப்புக்கு எதிர்ப்பு
தபால் துறை மூலம் அளிக்கப்படும் தந்தி சேவை, ஜூலை 15ம் தேதி முதல் நிறுத்தப்படும் என பி.எஸ்.என்.எல். நிறுவனம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பி.எஸ்.என்.எல். தந்தி சேவைப் பிரிவின் மூத்த பொது மேலாளர் சமீம் அக்தர், அனைத்து தந்தி அலுவலகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
வரும் ஜூலை 15ம் தேதியில் இருந்து தந்தி சேவையை முழுமையாக நிறுத்திவிட வேண்டும் என்றும், மக்களிடம் இருந்து தந்தி பெறவோ, அதனை வினியோகிக்கவோ வேண்டாம் என்றும் அதில் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக வெளிநாடுகளுக்கான தந்தி சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தபால் துறையிடம் கலந்தாலோசித்த பின்னரே, உள்நாட்டு தந்தி சேவையை நிறுத்த முடிவு செய்யப்பட்டதாக பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
தந்தி சேவையை நிறுத்தும் பி.எஸ்.என்.எல். முடிவுக்கு தேசிய தந்தி சேவை ஊழியர்கள் கூட்டமைப்பு மற்றும் சமூக சேவை அமைப்புகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன.
இ-மெயில், எஸ்எம்எஸ் போன்றவற்றின் வரவால் தந்தி அனுப்புவது குறைந்தது. அதனால், 160 ஆண்டு கால தந்தி சேவை நிறுத்தப்படுகிறது.

No comments: