Monday, March 30, 2015

போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டம் பற்றிய பொது அறிவுப் போட்டி

2015-ஆம் ஆண்டுக்கான போ ஆவ் ஆசிய மன்றத்தின் கருத்தரங்கு, மார்ச் 26ஆம் நாள் முதல் 29-ஆம் நாள் வரை சீனாவின் ஹெய் நான் மாநிலத்தின் போ ஆவ் நகரில் நடைபெற உள்ளது. பொது சமூகத்தை நோக்கிச் செல்லும் ஆசியாவின் புதிய எதிர்காலம் என்பது, நடப்புக் கருத்தரங்கின் தலைப்பாகும். இதில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களும், அரசியல், வணிகம், கல்வியியல், ஊடகம் ஆகிய துறைகளைச் சேர்ந்த 2000க்கும் மேற்பட்ட வல்லுநர்களும் பங்கெடுப்பர். இக்கருத்தரங்கக் கூட்டத்தில் ஒட்டுமொத்தப் பொருளாதாரம், மண்டல ஒத்துழைப்பு, தொழிற்துறை வளர்ச்சி முறை மாற்றம், தொழில் நுட்பப் புதுமை, அரசியல் பாதுகாப்பு, சமூக வாழ்வுரிமை ஆகிய 6 துறைகள் தொடர்பான கருத்துக்கள் விவாதிக்கப்படும். இதில், மண்டல மற்றும் பாதை நெடுநோக்கு, செய்தி ஊடகத் தலைவர்கள் வட்ட மேசைக் கூட்டம் ஆகியன கவனம் ஈர்க்கும் முக்கிய அம்சங்களாகும். மேலும் சுய தொழில் நடத்துவது, மனித குலத்தின் தொடரவல்ல வளர்ச்சி, நீதி, வீட்டு நிலச் சொத்து, ஆசியப் பொருளாதார செல்வாக்கு முதலிய அம்சங்களும் குறிப்பிட்ட அளவில் கவனிக்கப்படுகின்றன.

பொது அறிவுப் போட்டியின் விதிகள்

மேற்கூறியுள்ள செய்தியும் படங்களும், போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டம் பற்றிய சில தகவல்கள் ஆகும். இதன் மூலம் போ ஆவ் ஆசிய மன்றக் கூட்டம் பற்றி பொதுவாக அறிந்து கொள்ள முடியும். கீழே, 3 கேள்விகள் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு கேள்விக்கும் சில பதில்கள் இருக்கும். அவற்றிலிருந்து சரியான விடையை தேர்வு செய்யுங்கள். மின்னஞ்சல் மற்றும் வானஞ்சல் மூலம் எமது வானொலி நிகழ்ச்சியைக் கேட்ட நேயர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ளலாம். இப்போட்டி மார்ச் 28ஆம் நாள் முதல் ஏப்ரல் 8ஆம் நாள் வரை, நடைபெறும். மின்னஞ்சல் மூலம் அளித்தால், தலைப்பில் போ ஆவ் அறிவு போட்டி என்று குறிப்பிட வேண்டும். வானஞ்சலில் அனுப்பும் நண்பர்கள், ஏப்ரல் 8ஆம் நாளுக்குள் அனுப்புங்கள். வானஞ்சல் மூலம் அனுப்பிய நேயர்களில் மூவரைத் தேர்ந்தெடுப்போம். இதர வழிமுறைகளின் மூலம் பதிலளித்த நேயர்களில் 10 பேரைத் தேர்ந்தெடுப்போம். அவர்களுக்கு நினைவுப் பரிசுப் பொருட்களை வழங்குவோம். பரிசுப் பெற்றவர்களின் பெயர்ப் பட்டியலை ஏப்ரல் 30ஆம் நாள் எமது இணையதளத்திலும் வானொலி நிகழ்ச்சியிலும் வெளியிடுவோம்.

வினா-விடை
1. 2015-போ ஆவ் ஆசிய மன்றக் கருத்தரங்கின் தலைப்பு என்ன?
அ. புதிய ஆசியா, புதிய எதிர்காலம்
ஆ. பொது சமூகத்தை நோக்கிச் செல்லும் ஆசியாவின் புதிய எதிர்காலம்
இ. நம்பிக்கையைக் கொண்டு காலடி எடுத்து வைக்கும் ஆசியா

2. மண்டலம் மற்றும் பாதை என்றால் என்ன?
அ. பட்டுப்பாதை பொருளாதார மண்டலம் மற்றும் 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை
ஆ. சீன-தெற்காசியப் பொருளாதார மண்டலம் மற்றும் கூட்டு ஒத்துழைப்பு பட்டுப்பாதை
இ. 21ஆவது நூற்றாண்டு கடல்வழி பட்டுப்பாதை மற்றும் பொது முதலீட்டு மண்டலம்

3. பண்டைக்கால பட்டுப் பாதை அமைக்கப்பட்ட காரணம் என்ன?
அ. உள்கட்டமைப்பு வசதிகளை உருவாக்க ஊக்கம் அளிப்பது
ஆ. குறைந்த செலவில் கட்டுமானத்திற்கான புதிய முறைகளைக் கண்டறிவது
இ. வர்த்தக முதலீடு மற்றும் அவற்றுக்கான தடைகளை அகற்றுவது
ஈ. மேற்கூறிய தேர்வுகள் எல்லாம்

Source: http://tamil.cri.cn/121/2015/03/28/Zt1s152780.htm

No comments: