Saturday, January 13, 2024

சென்னைப் பல்கலைகழகத்தில் கனடா EAST FM தலைவர் நடா இராஜ்குமார்

 













சென்னைப் பல்கலைக்கழக இதழியல், தொடர்பியல் துறையில் கடந்த 10 ஜனவரி 2024ல் ஒரு முக்கிய கருத்தரங்கினை நடத்தினோம்.

"சர்வதேச கண்ணோட்டத்தில் தமிழ் வானொலிகள்" என்ற தலைப்பினில் இந்த கருத்தரங்கம் நடைபெற்றது.

சிறப்பு விருந்தினராக கனடாவின் புகழ்பெற்ற வானொலியான EAST FMன் தலைவர் திரு.நடா இராஜ்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றினார்கள். மாணவர்களுக்கு பல்வேறு நிகழ்ச்சி தயாரிப்பு மற்றும்  தொழில்நுட்பம் சார்ந்த தகவல்களை வழங்கினார்கள்.

குறிப்பாக கனடாவில் பணியாற்ற தேவையான தகுதி, என்ன மாதிரியான வேலை வாய்ப்பு உள்ளது, அதற்கு எப்படி தயாராக இருக்க வேண்டும் போன்றவற்றை சுவைப் பட தெரிவித்தார்கள்.

நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாக, குரல் வளம் மிக்க மாணவர்களுக்கு தனது வானொலியில் வாய்ப்பினைத் தருவதாக வாக்குறுதி அளித்தார். இது மாணவர்கள் மத்தியில் மகிழ்ச்சியை அளித்தது.

இந்த நிகழ்வை சாத்தியமாக்கியவர் Siva Parameswaran . இந்த சமயத்தில் சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.

எம்மோடு இணைந்து ஆய்வு மாணவர்கள் தீப்தி சுரேஷ் மற்றும் மெளலி பிரியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்!


No comments: