தனது குரலாலும், நகைச்சுவையாலும் 'இன்று ஒரு தகவல்' என்று தினந்தோறும் சென்னை வானொலியில் சொல்லி மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களுக்கு அப்புசாமி- சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. நாள்: 31-05-08 மாலை 6.30 இடம்: நாரத கான சபா சிற்றரங்கம்.சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Thursday, May 22, 2008
தென்கச்சி சுவாமிநாதனுக்கு பாராட்டு விழாவிற்கு
தனது குரலாலும், நகைச்சுவையாலும் 'இன்று ஒரு தகவல்' என்று தினந்தோறும் சென்னை வானொலியில் சொல்லி மக்கள் மனதில் இடம்பிடித்திருக்கும் தென்கச்சி சுவாமிநாதன் அவர்களுக்கு அப்புசாமி- சீதாப்பாட்டி நகைச்சுவை அறக்கட்டளை பாராட்டு விழாவிற்கு ஏற்பாடு செய்துள்ளது. நாள்: 31-05-08 மாலை 6.30 இடம்: நாரத கான சபா சிற்றரங்கம்.வானொலி நாடக விழா 2008
Thursday, May 08, 2008
சர்வதேச வானொலி இதழின் வெளியீட்டு விழா
கரிசல் மண்ணில் பூத்த புது மலர்கள்திருநெல்வேலியைச் சேர்ந்த கரிசல் திரைப்படச் சங்கத்தின் சார்பாக பல்வேறு துறைகளில் சாதித்தவர்களுக்கான விருது வழங்கும் விழா, சர்வதேச வானொலி என்ற இதழின் வெளியீட்டு விழா ஆகியவை, 25.4.2008 அன்று அண்மையில் தமிழகத்தின் திருநெல்வேலி மாநகரில் சிறப்பாக நடைபெற்றது.சங்கத்தின் தலைவர் அருண் கதாதரனும், துணைத் தலைவரும் தினேஷம் இணைந்து பம்பரமாகச் சுழன்று நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள் என்பதை நெல்லை மண்ணை மிதித்ததுமே புரிந்து போனது.நகரில் ஆங்காங்கே கரிசல் திரைப்படச் சங்கம் உங்களை வரவேற்கிறது என்று பாசத்துடன் அழைக்கும் துணி பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. ஹலோ, சூரியன் ஆகிய பண்பலை எஃ.எம். வானொலிகளில் இந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்திகளை இரு நாட்களுக்குத் தொடர்ந்து அவ்வப்போது ஒலிபரப்பினார்கள். விழாவில் பங்கேற்ற முக்கிய விருந்தினர்கள், விருது பெற்றவர்களின் பேட்டிகளும் அவ்வப்போது ஒலியேறியது.அனைத்துலக மூத்த தமிழ் ஒலிபரப்பாளர் எனும் பெருமையைப் பெற்றவரும், லண்டனில் உள்ள ஐபிசி வானொலியின் மூலம் உலகெங்கும் உள்ள தமிழர்களுடன் தன் குரலால் ஒன்றிக் கலந்தவருமான அப்துல் ஜபார்தான் நிகழ்ச்சியின் விஐபி.திரைப்படச் சங்கத்தின் நிகழ்ச்சிக்கு மாவட்ட அறிவியல் மையம் கைகொடுத்து உதவியது ஓர் ஆச்சரியம். இதற்கான விளக்கத்தை பின்னர் நிகழ்ச்சியில் பேசுகையில் தெரிவித்தார் மாவட்ட அறிவியல் அதிகாரி கோபாலகிருஷ்ணன். திரைப்பட இயக்குநர் மாரிமுத்து, நிழல் திருநாவுக்கரசு, பத்திரிகையாளரும் குறும்பட இயக்குநருமான அருள் எழிலன், சர்வதேச வானொலி இதழின் ஆசிரியர் ஜெயசக்திவேல் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். (Thanks to tamil.Sify.com)
Friday, May 02, 2008
சர்வதேச வானொலி இதழ் வெளியீட்டு விழா
கடந்த 23-04-08 வெள்ளிகிழமை அன்று திருநெல்வேலியில் உள்ள மாவட்ட அறிவியல் மையத்தில் சர்வதேச வானொலியின் இதழ் வெளியீட்டு விழா உலகின் மூத்த அறிவிப்பாளரான அப்துல் ஜபார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கரிசல் திரைப்பட இயக்கம் தொடங்கப்பட்டதோடு சிறந்த பத்திரிகைக்கான விருதினை இலங்கையின் 'வீரகேசரி' வார இதழும், சிறந்த பத்திரிகையாளர் விருதுனை மலேசியா 'மக்கள் ஓசை'-யும் பெற்றது.
Labels:
சர்வதேச வானொலி,
திருநெல்வேலி,
மக்கள் ஓசை,
வீரகேசரி
வெற்றிகரமான வேரித்தாஸ் உறவுச்சங்கம விழா
மேலதிக வேரித்தாஸ் உறவுச்சங்கம புகைப்படங்களைக் காண சொடுக்கவும் கீழ்கண்ட தொடுப்பினை
Wednesday, April 23, 2008
வேரித்தாஸ் வானொலி உறவுச்சங்கமம் 2008
Monday, April 14, 2008
திண்டுக்கல்லில் பசுமை எப். எம்
கடந்த 13-04 - 2008 ஞாயிற்றுக்கிழமை திண்டுக்கல்லில் தனது ஓர் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது பசுமை எப்.எம் 90.4. விழாவில் http://www.pasumaifm.com/ இணையதளம் துவக்கப்பட்டது. திண்டுக்கல் மக்களுக்கு மட்டுமே சேவைச் செய்து வந்த இந்த வானொலி, இனி உலகம் முழுவதும் உள்ள நேயர்களைச் இந்த இணையதளம் மூலம் சென்று சேர உள்ளது.
Subscribe to:
Posts (Atom)


