
பிறகு, ஆங்காங்கே ஆற்றல் நிலைகளில் ஏற்பட்ட தடுமாற்றங்களால், சீராகப் பரவியிருந்த ஆகாயத்தில் (திரிந்து போன பால் கெட்டித் தட்டுவது போல்) ஆதி தாரகைகளின் விதைகள் உருவாயின. அந்த விதைகளை நோக்கி பொருட்கள் குவியக் குவிய அவை பெரிதாகி விண்மீன்களாயின. அவ்விண்மீன்களின் நடு இதயப்பகுதியில் ஏற்பட்ட நெரிசலால் பொருள்கள் இணைந்து அணுக்கரு இணைப்பாற்றல் துவங்கி அதன் பயனாக ஆகாயத்தில் காமா கதிர்வீச்சுடன் முதல் ஒளி தோன்றியது. எங்கும் பிரகாசமாக தாரகைகள் ஜொலிக்க ஆரம்பித்தன. (அறிவியலில் அணுக்கரு இணைப்பாற்றல் பற்றி அறிய ஆல்பர்ட் ஐன்ஸ்டைனின் சமன்பாடு, மேக்ஸ் பிளாங்கின் குவான்டம் கொள்கை உதவுகின்றன)
நம் பூமியைப்போல் பல லட்சம் மடங்கு பெரிதாக உள்ள சூரியனையே நாம் கண்டு வியக்கிறோம். ஆதி தாரகைகள் நம் சூரியனைப் போல் இன்னும் 100 ஆயிரம் முதல் பல மில்லியன் (10 லட்சம்) மடங்கு பெரிதானவை. அவற்றின் குறுக்களவு 10 முதல் 100 ஒளி ஆண்டுகள் விரிந்திருந்தது. (1 ஒளி ஆண்டு என்பது ஒளி அதன் வேகத்தில் ஒரு ஆண்டில் கடக்கும் தூரம்)
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358
No comments:
Post a Comment