Thursday, May 28, 2009

சீன வானொலியின் இலவச பயணத்திற்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக நேயர்


சீனப்பயண‌த்தின் தொடர்ச்சியாக மே‍‍ 27ஆம் மாலை சிச்சுவான் தலைநகரில் அமைந்துள்ள மூன்று லட்சம் சதுரமீட்டர் அளவில் அமைந்துள்ள வரலாற்று புகழ் மிக்க அருங்காட்சியத்தை பார்த்தேன். என்னுடன் தலைவர் தி.கலையரசி அவர்கள் வந்ததால், பல விளக்கங்களை அவர் தெரிவித்தது பயன்மிக்கதாய் இருந்தது. இந்த அருங்காட்சியைப் பார்த்தால் பண்டைய மக்களின் வாழ்க்கை நிலையை தெரிந்துகொள்ள‌ வாய்ப்பு உண்டு. மூவாயிரம் ஆண்களுக்கு முந்தைய சீன சுச்சுவான் வரலாற்றை நினைவு படுத்தும் இந்த அருங்காட்சியகத்தில், பழங்கால‌ மாதிரி கிராமம் ஒன்று தத்துரூபமாக அமைக்கபட்டு, அன்றைய மக்கள் வாழ்ந்த எளிமையான சூழலை நினைவுபடுத்துகிறது.

அருமையான சிச்சுவான் என்று உலகளவில் நடத்தப்பட்ட பொது அறிவுப் போட்டியின் பரிசு வழங்கும் நிகழ்ச்சி, 27ம் நாள் சாங் து நகரில் நடைபெற்றது. இந்தியா, அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்விட்சர்லாந்து, பிரேசில், ருமேனியா, தென்கொரியா உள்ளிட்ட 10 நாடுகளைச் சேர்ந்த நேயர்கள், சிறப்பு பரிசுகள் பெற்றனர். அவர்கள் சிச்சவான் மாநிலத்தின் சில சுற்றுலா இடங்களுக்குச் சென்று அங்குள்ள அழகான காட்சிகளை கண்டு ரசிப்பார்கள்.

• சிச்சுவான் தலைநகரிலிருந்து முனுகப்பட்டு பி.கண்ணன்சேகர் 2009-05-28
• பரிசளிப்பு விழாவில் கண்ணன் சேகர் 2009-05-27
• சிறப்பு நேயரின் உணர்வு 2009-05-27
• தியெனான்மென்னில் சிறப்பு நேயர் 2009-05-26
• பெய்ஜிங் வந்தடைந்த முனுகப்பட்டு பி. கண்ணன் சேகர் 2009-05-24
தியெனான்மென்னில் சிறப்பு நேயர்
ஒலிப்பதிவுக் கூடத்திலிருந்து முனுகப்பட்டு. பி. கண்ணன் சேகர் பேசுகிறேன்
பெருஞ்சுவர் பற்றி

(Source: http://tamil.cri.cn/1/2009/05/27/104s85218.htm)

No comments: