Monday, June 01, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 4

ஒவ்வொரு சந்ததி சூரியர்கள் வெடித்து மறையும் போது, முன்பு இருந்ததை விட பலதரப்பட்ட புதிய அணுக்கள் உருவாகி இருந்தன. அவை மீண்டும் மீண்டும் திரண்டு புதிய ஆதவர்களாக உருவாகி மறைந்து போயின. இப்படித்தான் நாம் காணும் அனைத்து மூலகங்களும் உருவாயின. ஒரு சூரியன் எங்கோ, என்றோ ஒரு நாள் வெடித்து மாண்டபின் கக்கிய துகள்களிலிருந்து வெளிபட்டவை நம் பூமிபோன்று திரண்டு மண், கல், தங்கம், வைரம், வெள்ளி என்று பல்வேறு கனிமங்களாக நமக்குப் பயன்படுகின்றன. இன்றைய நட்சத்திரக் குவியல்கள் (கேலக்ஸிகள்) 12 முதல் 14 பில்லியன் ஆண்டுகளுக்குப்பின் தோன்றி வாழ்ந்து வருகின்றன.
இன்றைய நம் சூரியனையும் ஆதி சூரியனையும் 10 பில்லியன் வருடங்களுக்கு (2008) முன் ஒப்பிட்டுப் பார்த்ததில் கீழ்க்கண்ட தகவல்கள் வியப்பூட்டும் வகையில் உள்ளன.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

No comments: