Wednesday, May 20, 2009

பிபிசி தமிழோசைக்கு பிரபாகரன் அவர்கள் கடந்த காலங்களில் வழங்கியுள்ள பல பிரத்தியேக செவ்விகள்

Photo: BBC Tamilosai Programme Guide (Oct 1994 - March 1995)

இலங்கையில் விடுதலைப்புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் அவரது பல தளபதிகளுடன் சுட்டுக்கொல்லப்பட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்துள்ளது.

தமிழோசை உட்பட பிபிசிக்கு பிரபாகரன் அவர்கள் கடந்த காலங்களில் பல பிரத்தியேக செவ்விகளை வழங்கியுள்ளார்.

அவ்வாறு அவரால் வழங்கப்பட்ட சில செவ்விகளை நேயர்கள் இங்கு கேட்கலாம்.

முதலில், 1987 ஆம் ஆண்டு, சார்க் மாநாடு முடிந்தவுடன் தமிழோசையின் சார்பில் சங்கர் அவர்கள் பிரபாகரனை செவ்வி கண்டிருந்தார்.

1987 ஆண்டு வழங்கிய செவ்வி

1991 இல் இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதியில் கடுமையான மோதல்கள் நடந்துகொண்டிருந்தபோது பிபிசியின் செய்தியாளர் கிறிஸ் மோரிஸ் அவர்கள் இலங்கைக்கு சென்றிருந்தார். அப்போது அவருக்கு பிரபாகரன் செவ்வி ஒன்றை வழங்கியிருந்தார்.

1991 இல் வழங்கப்பட்ட செவ்வி

தமிழோசையின் முன்னாள் மூத்த தயாரிப்பாளர் ஆனந்தி சூரியப் பிரகாசம் அவர்களுக்கு பிரபாகரன் அவர்கள் இரண்டு முக்கிய செவ்விகளை வழங்கியிருந்தார்.

அதில் முதலாவதாக 1994 ஆம் ஆண்டு வழங்கப்பட்ட செவ்வியை இங்கு கேட்கலாம்.

1994 இல் வழங்கப்பட்ட செவ்வி



மற்றுமொரு செவ்வி ஆனந்திக்கு 1995 இல் பிரபாகரனால் வழங்கப்பட்டது.

1995 இல் வழங்கப்பட்ட செவ்வி

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் தனது இறுதி மாவீரர் நாள் உரையில் (2008 ஆம் ஆண்டு), உலக நாடுகளும் இந்தியாவும் தம் மீதான தடையை நீக்க வேண்டும் என்று கோரியுள்ளார்.

உலக நாடுகள் தடைகளை நீக்கி தமது போராட்டத்தை அங்கீகரிக்க வேண்டும் என்றும், அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இறுதி மாவீரர் உரையின் தொகுப்பு

(Source: BBCTamil.com)

3 comments:

தங்க முகுந்தன் said...

அருமையான - காலத்திற்கேற்ற - தேவையான முக்கிய பதிவு!

Jaisakthivel said...

Dear Mukunthan,

Thanks for your comment.

Sakthi

ஜோதிஜி said...

காலத்தால் அழிக்க முடியாத இந்த உங்கள் பங்களிப்பு என்பது வாழ்த்துகளுக்கும் அப்பாற்பட்டது.