Friday, June 12, 2009

சூரியப்புள்ளியும் சிற்றலை வானொலியும்: பகுதி - 9

நம் சூரியன் தன் சக்தியெல்லாம் இழந்து சிறிதாகிக் கொண்டே வரும்போது அது கரும்துளையாக மாறி மேற்கூறியது போல் அருகிலுள்ள அத்தனை கோள்களையும் தன் ஈர்ப்பு சக்தியால் உறிஞ்சிவிடும். அப்போது நம்மைச் சுற்றியுள்ள எல்லா கிரகங்களும் பூமி உள்பட சூரியனின் கரும்துளைக்குள் (ஸ்ட்ரா வைத்து ஜூஸ் உறிஞ்சப்படுவது போன்று) உறிஞ்சப்பட்டுவிடும். மறுபடியும் ஆற்றலின் ஏற்றதாழ்வுகளால் வெடிப்பு ஏற்பட்டு புது (சூரியன்கள்) விண்மீன்கள் பிறக்கும். இதுதான் நம் சூரிய குடும்பத்தின் பிறப்பும், இறப்பும் நிறைந்த தகவல்.

இதுவரை நாம் கண்டது. இத்தனை பெரிய ஆகாயமும் இதிலுள்ள எல்லா விண்மீன்களும், கேலக்ஸிகளும் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் ஒரு நாள் ஒரு சிறு புள்ளியிலிருந்து ஒரு பெரும் ஆற்றலிலிருந்து பிறந்து விரிந்து இருக்கின்றன. அன்று விரியத் தொடங்கிய ஆகாயம் இன்றும் விரிந்தபடி உள்ளது.

ஆகாயம் விரியும் போது அதிலுள்ள விண்மீன்கள் ஒன்றைவிட்டு ஒன்று விலகி தள்ளிப் போக வேண்டும். அவற்றுக்கு இடையே உள்ள தூரம் பெருகிக்கொண்டே போக வேண்டும். செம்பெயர்ச்சி என்ற அறிவியல் அடிப்படையில் இதனை அளக்க முடியும். விண்மீன்கள் விலகும் வேகம், தூரம் ஆகியவைகளை அளக்க ஹப்புள் மாறிலியை உபயோகித்தனர். செமபீய்டு வேரியபுள் என்ற ஒரு வகை விண்மீன்கள் உள்ளன. இவை தொடர்ந்து கண் சிமிட்டிய படி இருக்கும். அது அமைந்திருக்கும் தொலைவுக்கேற்ப, அதன் கண் சிமிட்டல் வேகம் அமையும். இதைப் பயன்படுத்தி ஹப்புள் மாறிலியை கணக்கிட்டுள்ளார்கள். இதன் அடிப்படையில் இந்த பிரபஞ்சம் பிறந்த தேதியை சரியாக, துல்லியமாக கணக்கிட முடியும் என்று வல்லுநர்கள் கருதுகிறார்கள்.

கடந்த 1995 முதல் 2004 வரை மேற்கொண்ட ஆராய்ச்சியின் விளைவாக இதுவரை 111 சூரியன்கள் அருகே கோளங்கள் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளன. தாய் சூரியனின் குறுக்காக அக் கோளங்கள் நகர்ந்து கொண்டிருப்பது அறியப்பட்டுள்ளது.
தொடரும்...
- கிழக்கு தாம்பரம் வி. பாலசுப்ரமணி, அலைபேசி: 99520 67358

1 comment:

Unknown said...

mmmmmmmmmmmmmmmmm ok