Thursday, August 07, 2008

தனியார் பண்பலைகள்: கடிவாளம் இல்லாத குதிரை - 2

‘காதல் காதல்’ என்றொரு நிகழ்ச்சி, இந்நிகழ்ச்சியில் தொகுப்பாளினியைத் தொலைபேசி வழியாகத் தொடர்பு கொள்ளும் நேயரிடத்தில் நீங்கள் எத்தனை ஆண்டுகளாகக் காதலிக்கின்றீர்கள்? யார் காதலை முதலில் வெளிப்படுத்தியது? காதல், திருமணம் வரை வெற்றி பெறுமா? காதலை வெளிப்படுத்தியவுடன் கிடைத்த முதல் பரிசு என்ன? முதன்முதலாக அழைத்துச்சென்ற இடம் என்ன? இருவரும் பார்த்து மகிழ்ந்த முதல் திரைப்படம் என்ன? இப்படி அடுக்கடுக்கான கேள்விகள்.

இறுதியில் வாழ்த்துகளுடன் முடிவுறுகிறது. ஒருவேளை தோல்வி ஏற்பட்டிருக்குமானால், அல்லது காதல் பிணக்குகளில் நின்று போயிருக்குமானால் நேயரிடத்தில் வருத்தமும் ஆறுதலும் தெரிவிக்கப்படுகின்றது. இத்தகைய நிகழ்ச்சிகளால் இன்றைய வளரும் தலைமுறை எதைக் கற்றுக் கொள்ளப்போகிறது? பண்பலைகள் சமுதாயத்திற்கு எதைக்கற்றுத்தரப் போகின்றது? இதுபோல் எத்தனையோ நிகழ்ச்சிகள்.

உதாரணமாக இரகசிய சினேகிதி, வயாராகா, பிளேடு நம்பர் ஒன், ஊர் சுற்றலாம் வாங்க,டோட்டல் உடான்ஸ், கூட்ஸ் வண்டி. வெவ்வேறு தலைப்புகளில் ஒரே பாணியிலானநிகழ்ச்சிகளை வழங்குவதோடு மட்டுமன்றி 24 மணிநேரமும் திரைப்படப் பாடல்கள், திரைப்படம்தொடர்பான செடீநுதிகளை ஒலிபரப்பி இளைஞர்களின் சிந்தனையைத் திசைதிருப்பும் தீர்க்கமானபணியைத் திறம்படச் செடீநுது வருகின்றன.

மேலைநாடுகளில் வானொலிகள் அந்தந்த நாடுகளுக்குரிய பண்பாடு மற்றும் கலாச்சாரப்படிபொழுதுபோக்கு, ஆரோக்கியமான சிந்தனைகளுக்கு முன்னுரிமை தந்தே நிகழ்ச்சிகளைத் தயாரித்துஒலிபரப்புகின்றன. நாட்டின் பண்பாடு, கலாச்சாரம், மொழி ஆகியவற்றிற்கு சிதைவுகளை ஏற்படுத்திடும் எந்தவொரு நிகழ்ச்சியும், மேலைநாடுகளில் இடம்பெற இயலாது. மேலும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி இடையிடையேதான் ஒலிக்கின்றதே தவிர நம் பண்பலைகளைப்போல் இடைவிடாமல் ஒலிப்பதுமில்லை.

செறிவான ஆற்றல் கொண்ட இளைஞர்களை வெறும் பொழுதுபோக்குச் சிந்தனை உடையவர்களாக, உணர்ச்சிப் பிழம்புகளாக மாற்றி இச்சமூகத்திற்குப் பயனற்றவர்களாகச் செய்யும் பண்பலைகள் தொடர்ந்து பயணிக்கும் பாதையில் மாற்றம் தேவைப்படுகின்றது. அதற்காக பொழுதுபோக்கும், கேளிக்கை நிகழ்வுகளும் அறவே வேண்டாம் என்று சொல்லவில்லை, அவற்றிற்கு ஒரு வரைமுறை வேண்டும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அவசியம்.
(தொடரும்...)
- ரா. வெங்கடேஷ் ஜூலை 2008 சர்வதே வானொலி இதழில் இருந்து...

No comments: