
இன்றைய சூழ்நிலையில் சர்வதேச வானொலிகளின் முக்கியத்துவம் எந்த அளவில் உள்ளது?
எனக்கு, நிபுணத்துவ ரீதியாக இதற்கு பதில் சொல்லத் தெரியாது. ஆனால் ஒரு அனைத்துலகவானொலியில் ஏறக்குறைய ஏழு ஆண்டுகாலம் கடமையாற்றினேன் என்ற வகையில், பதில் சொல்லமுடியும். வெகுஜன ஊடகங்கள் கையில் எடுத்துக்கொள்ளாத, அணுகாத மானுடப் பிரச்சினைகளை,சமூகப் பிரச்சினைகளை அணுகினால் அவை தொடர்ந்து முக்கியத்துவம் பெறுவதாக இருக்கும்.அவற்றுக்கு என ஒரு சிறு தளத்தினை வரையறுத்துக் கொண்டோ, அல்லது வெறும் செய்தியைதருவதோ அல்லது விளம்பரங்களுடன் கூடிய போழுதுபோக்கு நிகடிநச்சிகளைத் தருவது என்றால்,அதைத் தருவதற்கு இங்கு வெகுஜன வானொலிகள் நிறையவே இருக்கின்றன. அவற்றை விரும்பிக் கேட்பவர்கள், அறிவுத்தகவல்களைக் கூட ஒரு புதிய கோணத்தில் இருந்து திறனாய்வுடன் ஆழமாக ஒரு விசயத்தினைப் புரிந்து கொள்வது இங்கு சாத்தியமில்லை என்றுதான் சொல்லவேண்டும்.
சிற்றலை வானொலி கேட்கும் நேயர்கள் இன்று எங்கு அதிகமாக உள்ளனர்?பொதுவாகவே சிற்றலை ஒலிபரப்புகளைக் கேட்கக்கூடிய நேயர்கள் பெரும்பாலும் பிரச்சனை நடக்கின்றப் பகுதிகளில்தான் அதிகமாக உள்ளனர். குறிப்பாக யுத்தங்கள் நடக்கின்றப் பகுதிகளில் நேயர்கள் மிக அதிகமாகக் கேட்கின்றனர். இந்தப் பகுதிகளில் உள்ள நேயர்களுக்காகச் சரியாகப் பணியாற்றினால் சிற்றலை வானொலிகளுக்கு நல்ல வரவேற்பு இருக்கின்றது. (தொடரும்..)
No comments:
Post a Comment