Monday, August 18, 2008

சென்னையில் அதிக மக்கள் விரும்பும் பண்பலை: பாகம்- 2

ரேடியோ மிர்ச்சியும், சூரியன் எப்.எம்மும் கிட்டத்தட்ட ஒரே சமயத்தில் ஆரம்பிக்கப் பட்டவைதாம். சூரியனை விட மிர்ச்சி முன்னணியில் இருப்பதற்கு நேயர்களுக்கு அதிக அளவில் அவர்கள் கொடுக்கும் பரிசுகளைக் காரணமாகச் சொல்லலாம். ரேடியோ மிர்ச்சி பண்பலை பிரபல ஆங்கில நாளேடான 'டைம்ஸ் ஆப் இந்தியா' நிறுவனத்திற்குச் சொந்தமான தாகும். அதுவும், அவர்கள்முன்னணியில் இருப்பதற்கு மற்றொரு காரணமாக சொல்லப்படுகிறது. ஆனால், மிர்ச்சியின் சென்னை மண்டலத் துணைத் தலைவர் சந்தீப் சுத் இதுபற்றிக் கூறுகையில் "டைம்ஸ் ஆப் இந்தியா இதழ், பிரபலமான நாளேடு என்பதனை மறுப்பதற்கில்லை. அதே சமயம், நாங்கள் தமிழகத்தில் பண்பலையை ஆரம்பிக்கும் போது 'டைம்ஸ் ஆப் இந்தியா' தமிழகத்தில் கிடையாது. உண்மையைச் சொன்னால், நாங்கள் தான் 'டைம்ஸ் ஆப் இந்தியா' சென்னையில் பிரபலமாக உதவி இருக்கிறோம்" என்கிறார்.

2008 எப்.எம் கருத்துக்கணிப்புகளின் முடிவுகளில் சில பின்வருமாறு:
Top '5' FMs in Chennai
1.Radio Mirchi (98.3)
2.Suriyan FM (93.5)
3. FM Rainbow
4. Radio One, Big FM
5. Hello FM & Aahaa FM

ஆண்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த RJ-வாக தீனாவைத் தேர்வு செய்துள்ளனர். பெண்களில் தங்களுக்கு மிகவும் பிடித்த RJ-வாக அனுவைத் தேர்வு செய்துள்ளனர். சூரியன் பண்பலை நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு இந்த வெற்றி குறித்து கருத்துக்களை அறிய முற்பட்டோம். எவ்விதமான பதிலும் இல்லை. சினிமா போஸ்டர்களையும், அரசியல் கட்சி பேனர்களையும் மட்டுமே கண்டு ரசித்த பொதுமக்களின் பார்வைக்கு ரேடியோ ஒன் பண்பலை முதன்முறையாகத் தங்கள்நிகழ்ச்சிகளைப் பற்றிய சுவரொட்டிகளை விளம்பரத் திற்குப் பயன்படுத்தியது.

தொடர்ந்து மற்ற பண்பலைகளும் இதே யுக்தியைப் பயன்படுத்தத் தொடங்கியதைப் பெருமையாகக் கருதுகின்றனர், நிறுவனத்தினர். "எங்களுடைய நிறுவனம் வட மாநிலத்தவருக்கு சொந்தமானதாக இருந்தாலும்கூட, தமிழ்ப்பண்பலைகளின் வரலாற்றில் தமிழனின் பெருமையை முன்னிறுத்தி ஆங்கிலக் கலப்பில்லாமல் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறோம்" என்கிறார் பிக் எப்.எம்மின் தலைமை நிகழ்ச்சித் தயாரிப்பாளரான சுசித்ரா.

பிக் எப்.எம் அண்மையில் நடத்திய போட்டி ஒன்றில் வெற்றி பெற்றவர்களைத் தமிழ் சினிமாவில் பாடுவதற்கான வாய்ப்பினைப் பெற்றுத் தந்துள்ளது என்பதுகுறிப்பிடத்தக்கது- விரைவில் பிக் எப்.எம்மின் நேயர்களின் குரலை தமிழ் சினிமாவில்ஒலிக்கக் காத்திருக்கிறது. ஆஹா பண்பலையின் விளம்பரமான 'பொழுதுபோக்கின் உச்சகட்டம்' என்ற வாசகங்கள் சென்னை வீதிகளை வியக்க வைத்தன. ஆஹா பண்பலை பிரபலங்களின்அணிவகுப்போடு நேயர்களுக்கு இசை விருந்து படைத்துவருகிறது என்கிறார்கள் நேயர்கள்.

இளைய ராஜாவின் மகள் பவதாரணி வழங்கும் நிகழ்ச்சி நேயர்களின் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. 'சர்வதேச வானொலி இதழ்' நடத்திய கருத்துக் கணிப்பு இனி வரும் காலங்களிலும் எவ்வித விருப்பு வெறுப்புகள் இன்றி தொடரும். இதற்கு எல்லா வகையிலும் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து பண்பலை நிலையங்களுக்கும் எங்களின் மனப்பூர்வமான நன்றிகள். (தொடரும்)

No comments: