தென்னிந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான வர்த்தக இணைப்புகள் மத்திய காலத்திலிருந்து ஏற்பட்டு வந்ததாகும். இதன் பயனாகப் பல தமிழ் கல்வெட்டுகள் - 9 ஆவது, 13 ஆவது நூற்றாண்டு காலத்தவை - குவான் ஜோ துறைமுகத்தைப் போன்று கடலோர சீனாவின் சில பாகங்களில் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. பெரும்பாலோருக்குத் தொ¢யாத இந்த மத்திய காலத் தொடர்பு நவீன காலவடிவத்தில் - அதாவது சிற்றலை வானொலியில தொடர்கிறது - அரசுக்குச் சொந்தமான சீன ரேடியோ இண்டர்நேசனல் (சிஆர்ஐ), ஒவ்வொரு நாளும் மாலையில் பெய்ஜிங்கிலுள்ள தனது கலைக்கூடத்திலிருந்து - ஒரு மணி நேரத் தமிழ் ஒலிபரப்பைச் செய்கிறது - இதன் வாயிலாகக் கடந்த பல ஆண்டுகளில் இந்த வானொலி, இலங்கை மற்றும் தென்கிழக்கு ஆசியாவின், மிகவும் சிறப்பாக, தமிழ் நாட்டிலேயே தமிழ் பேசும் மக்களிடையில் ஆர்வம் மிக்க கேட்பாளர்களின் ரசிகர் மன்றங்களைத் தோற்றுவித்துள்ளது. இந்த வானொலி நிலையம் முதன் முதலில் 1941 இல் தமிழ் ரசிகர்களுக்கு உலகெங்கும் சீனச் செய்திகளையும், கருத்துகளையும் ஒலிபரப்புவதற்காகத் தொடங்கப்பட்டது. கடந்த ஆண்டு இந்த வானொலி நிலையத்தின் தமிழப் பி¡¢வு ரசிகர்களிடமிருந்து திகைக்க வைக்கும் மிகப் பொ¢ய அளவான 5 இலட்சத்து 30 ஆயிரம் கடிதங்களைப் பெற்றது. சிஆர்ஐ - யின் தமிழ்ப் பி¡¢வில் 15 சீனர்களும், 2 தமிழர்களும் இருந்து வருகின்றனர். இந்தப் பி¡¢வில் உள்ள சீனர்கள் தூய தமிழில் பேசுவது வியக்க வைக்கிறது. இவர்கள் பேசுகிற தமிழ் இலக்கணச் சுத்தமாக, கலப்பற்ற தூய்மையான தமிழக இருக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு சீன தமிழ் ஒலிபரப்புகளைக் கேட்கலாம்
No comments:
Post a Comment