Wednesday, August 13, 2008

என் அருமை நண்பன்-நேஷனல் RX-M50

ண்பர்களை நாடுகிறோம். ஆனால் நண்பர்கள் எப்போதுமே நம் அருகில் இருப்பதில்லை. எனவேநாம் வானொலி, தொலைக்காட்சி, தொலைப்பேசி, கணினி போன்ற சாதனங்களை நாடுகிறோம். நான்சிறுவனாக இருந்தபோது வானொலிப் பெட்டியைத்தான் பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி மகிழ்ந்தனர். நான் உங்களுக்கு ஒரு நண்பனை அறிமுகம் செய்ய உள்ளேன். அந்த நண்பன் வேறு யாருமில்லை.

நான் பயன்படுத்தி வரும் “நேஷனல்/பானாஸோனிக் ரேடியோ-கேசட் ரெக்கார்டர்” ஆகும். அதன் மாடல் எண் “RX-M50 ” இந்த நண்பனைப் பற்றி எழுதுவதற்கு ஒரு காரணம் உண்டு.2006-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் வெளியான “சர்வதேச வானொலி” இதழில் முத்திரை நேயர்கள்வரிசையில் என்னைப்பற்றியும், இளமைக்காலத்தில் வானொலி கேட்ட அனுபவங்களைப் பற்றியும் ஒருகட்டுரை வெளியானது. இதன் மூலம் எனக்குப் பல புதிய நண்பர்கள் கிடைத்தார்கள். சிலர் என்னைநேரிலும் சந்தித்துப் பேசினார்கள். அவர்கள் பெரும்பாலும் கேட்ட கேள்வி என்னவெனில் “நான்ஏதேனும் விலை உயர்ந்த, பல வசதிகள் கொண்ட டிஜிட்டல் வானொலிப்பெட்டி வைத்துள்ளேனா?”என்பதுதான்.

நான் வெகுதொலைவில் உள்ள வானொலிகளான ரேடியோ நார்வே, °ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, அர்ஜென்டீனா, ஆஸ்திரேலியா, நியூஜிலாந்து, ஈக்வடார், ஆஸ்திரியா, ஜெர்மனி,நெதர்லாந்து போன்றவைகளை கேட்டுள்ளதால் அவ்வாறு எண்ணினார்கள். சிலர் நான் பதிவு செய்துவைத்திருந்த ஒலிநாடாக்களை (கேசட்டுகளை) கேட்டுவிட்டு மிகவும் வியந்தனர். இன்னும் சிலர் நான்பயன்படுத்திவரும் ஆன்டெனாவைப் பற்றி அறிய விரும்பினார்கள். எனவே பலரது ஐயங்களை நீக்கிடஇந்த நண்பனின் தகவல்களை வழங்குகிறேன்.

நேஷனல் RX-M50 (NATIONAL RX-M50) ரேடியோ கேசட் ரெக்கார்டரில் அனலாக் (ANALOG)எனும் டயல்முறை ட்யூனிங் (அலை எண் திருத்தும் முறை) பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் நான்கு அலைவரிசைகள் (Wave Band) உள்ளன. பண்பலை, ஆறு மத்திய அலை சிற்றலை 1 & 2ஆகியவை உள்ளன. இன்றும் ஒருசில நாடுகள் நெட்டலையை உள்நாட்டுச் சேவைக்குப் பயன்படுத்தி வருகின்றனர். வெளிநாட்டு வானொலிகளைக் கேட்க சிற்றலை வரிசை மிக முக்கியமானது.

நேஷனல் RX-M50 மாடல் ஜப்பானில் உள்ள ஒஸாகா நகரில் மாட்ஸீ ஷீட்டா எலக்ட்ரிக் இன்ட°டிரியல் கம்பெனியால் தயார் செய்யப்பட்டதாகும். முதலில் “நேஷனல்” என்ற பெயரிலும், பிற்காலத்தில் “பானாசோனிக்” என்ற பெயரிலும் பல மாடல்கள் தயாரிக்கப்பட்டு விற்கப்படுகின்றது. (தொடரும்..)
- சென்னை வி. பாலு

No comments: