Saturday, August 23, 2008

விவித பாரதி பொன்விழாப் பாடல் - கவிஞர் வைரமுத்து

பல்லவி

பாட்டுக்கொரு புலவன்பாரதி-
திரைப்பாட்டுக்கு எங்களது
விவித பாரதி
பொன்விழாக்காணுகின்ற
விவித பாரதி-நாங்கள்பூத்தூவி வாழ்த்துகிறோம்
வாழ்க பாரதி.

சரணம்-1

மறக்காத நிகழ்ச்சியெலாம் கேட்டுக் கேட்டு
மரக்காது கொண்டவரும் இனிக்கு தென்றார்
சுரக்காதா தேன் கிண்ணம் நெஞ்சுக் குள்ளே
சுவைக்காதா என்று பலர் காத்திருப்பார்

இருகாது கொண்டவர்நம் நிகழ்ச்சி கேட்டால்
இனிக்காது தேனென்பார்; மேலும் கேட்க
இரு காதாபோ தாதாமேனி எங்கும்
இருக்காதா செவிகளென ஏங்கிப் போவார்.

சரணம்-2

தமிழ்க்குலமே! தமிழ்க்குலமே!
தங்கமகன்வேண்டுகிறேன்
நமக்காக நாளெல்லாம் இமைக்காமல் பணியாற்றும்
நிலையத்தார் மனம்போல நினைவோடு உறவாடிக்

கலைத்தேரில் வலம்வருவோம் காலமகள் வீதியிலே!
செவியெல்லாம் நாவாகச் செந்தமிழில் சிந்திவிழும்
கவியெல்லாம் தேனாகக் காலமெலாம்
வாழ்ந்திருப்போம் பொன்விழாக் காணுகின்ற
புதிய விவித பாரதியை
எண்ணத்தில் ஏற்றி எந்நாளும் மகிழ்ந்திருப்போம்.
____________
* சென்னை அகில இந்திய வானொலியின் விவித பாரதி தனது பொன் விழாவினைக் கொண்டாடிவருகிறது. அதனை ஒட்டி கவிஞர் வைரமுத்து இயற்றிய பாடல் இது. இவர் 1970-களில் இங்கு பகுதி நேர அறிவிப்பாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- நன்றி: விவித பாரதி நிலைய இயக்குனர்

No comments: